புதன், 9 டிசம்பர், 2009

சொற்களின் நிரம்பாதவன்


சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை
முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன்
நெம்பி வழியும் அது
உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும்
ஆனந்தம் அதில்
விரும்பிச் சேரும் மீன்கள்
சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில்
உன்னைவிட
ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று
சொற்கள் உண்மையை விளம்பும்
ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம்
குற்றங்களே ஆனாலும்
மனம் ஆராதிக்கும்
இவனே சரியென்று...
இடப்பட்ட சொற்கள் எல்லாம்
ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும்
அலைகழியும் மனதுடன்
நிறைய சொற்களுடன்
அவனைப் பிராத்தித்தால்
சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான்
கவனம்.

4 கருத்துகள்:

கொற்றவை சொன்னது…

superb....

M.Rishan Shareef சொன்னது…

அருமையான கவிதை தோழி !

chandra சொன்னது…

நன்றி கொற்றவை மற்றும் ரிஷான்.

பெயரில்லா சொன்னது…

குற்றங்களே ஆனாலும்
மனம் ஆராதிக்கும்
இவனே சரியென்று...

Hmmm nice !