புதன், 23 டிசம்பர், 2009

அறையில் மரித்த பட்டாம்பூச்சி


நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த
வழிதவறிய பட்டாம்பூச்சி
என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது
சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில்
பளபளத்த அதன் இறக்கைகள்
சோர்ந்து துவண்டிருந்தன
பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை
பெருநகரத்தின் நிலம்
எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி
பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து
வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது
ஆனால் இறந்த பட்டாம்பூச்சி
அம்மாவின் கவலை
இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா
புதைத்துவிடு மகனே என்றேன்
இடம் தேடி அலைந்தான் மகன்
கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன
கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்
புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன
பட்டாம்பூச்சி பற்றி
மகன் எழுதிய சிறந்த கவிதை.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

puthakathien varikal thiruthapattana ;enthavriyai rasithen;v.ramasamy

பெயரில்லா சொன்னது…

கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன

Hmmmmmmmmm this is happening to most of our kids !

Really Nice