வியாழன், 10 டிசம்பர், 2009

வெளியேறும் பட்டாம்பூச்சிகள்


நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த
ஒளிநிரம்பிய மழைநாளில்
மலர்வாசனையில்
மயங்கிக் கிடந்தன
கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள்
இறக்கை மூடாத அவைகளை
எனது வலது கையில்
வண்ணங்களாய் மலரச் செய்தேன்
ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து
என் கைகளில் ஊற்றி
ஒளிநீரைக் குடி என்றாய்
என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம்
கையிலிருந்த பட்டாம்பூச்சிகள்
திசையற்றுப் பறந்துபோயின
அன்றிரவு ஒளிநிரம்பியநீர்
சூடாக வெளியேறியது
கொல்லையில் அமர்ந்திருந்த
பலவண்ணப் பட்டாம்பூச்சிகள்
என்னை பார்த்துச் சிரித்தன
வெறுமை.

கருத்துகள் இல்லை: