புதன், 18 நவம்பர், 2009

குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்




நீ செலுத்திய
அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை
உன் கண்முன்னே
பிடுங்கவே உன்னை அழைத்தேன்
வன்முறையின் துர்நாற்றங்கள்
உனக்கு புதிதல்ல
சிரிக்கவே செய்வாய்
நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்
நீ அமைதியாகவே இருப்பாய்
குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை
மௌனமாகவே வாங்கிச் செல்வாய்
உன் குருட்டுப் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை
நான் அறிவேன்
அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது
நீ என்றும் சலிக்காதவன்
அன்பின் ஆகுருதியில் செலுத்த
விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்
அன்பின் ஓட்டைகளை அடைப்பது
எப்படி என்பதை
உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா
சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்
அவையற்று பின்தொடராது
உன் நிழலின் நாய்க்குட்டி

7 கருத்துகள்:

adhiran சொன்னது…

//உன் குருட்டுப் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை
நான் அறிவேன்
அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது
நீ என்றும் சலிக்காதவன்//

erichalil erpadum vetridaththai thulliyamaaka vaarththaiyaaka seikireerkal chanra.
have nice day.

கொற்றவை சொன்னது…

migavum nanraaga ulladhu

chandra சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி ஆதிரன்.

chandra சொன்னது…

நன்றி நிர்மலா

sarsel சொன்னது…

its really good ! hope u can make more such nice things in future also !

அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது

as i know there is something on you people thats making you all to write some touchable lines always !

chandra சொன்னது…

thanks sarsel

Kuruthi சொன்னது…

Anbu Thozhi,

im not regular person to read such blogs and all.

Its really painful to read ur blog.as i am feeling that those things are happened to me.but ur the one who is publishing my pains
also with ur words.

அன்பின் ஆகுருதியில் செலுத்த
விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்
அன்பின் ஓட்டைகளை அடைப்பது
எப்படி என்பதை
உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா !

valkayin marupakka etharthangalai pathivu seyveerkal endra nambikayudan !

Meendu varuven meendum varuven thozhi !