வெள்ளி, 27 நவம்பர், 2009

உயிர்வழி


என் ஆன்மாவின்
நிகறற்ற அன்பே
உன் காலடியில் வைப்பதற்கு
ரேகை படர்ந்த உள்ளங்கையின் வெம்மை
எப்பவும் துளிர்ப்புடனே இருக்கும்
என் உயிர்வழி கசியும் மூச்சு
உன் இதயத் தசைகளைப் பிளந்து செல்வதை
நீ எப்படித் தடுக்க முடியும்
உள்ளே அனுமதிப்பதைத் தவிர

கருத்துகள் இல்லை: