சனி, 11 ஜூலை, 2009


கரு நிழலும்
இள வெயிலும் நிரம்பிய
சிறுமலையின் அடிவாரத்தில்
காத்திருக்கிறேன் .
சமவெளிஎங்கும் நிரம்புகிறது
உன் வாசனை .
துகள்படிந்த ஒளிக்கீற்றைப் போல்
குழந்தைமையும்
கடவுளின் புன்னகையுமாய்
அருகில் வராமல்
நாணல்களின் பின்னால் நின்று
ஒளிர்ந்து சிரிக்கிறாய் .

புகைப்படம் ;சந்திரா