
மழையில் உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.