<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408</id><updated>2012-01-29T01:38:12.332-08:00</updated><category term='குட்டி கதை'/><category term='யூமா வாசுகி.'/><category term='சிறுகதை'/><category term='புத்தக மதிப்புரை'/><category term='பகிர்வு'/><category term='சாலை பற்றிய பகிர்வுகள்'/><category term='நாவல்'/><category term='கட்டுரை'/><category term='நேர்காணல்'/><category term='திறனாய்வுக் கூட்டம்'/><category term='ஞாபக பதிவு'/><category term='குட்டிக்கதை'/><category term='கவிதைகள்'/><category term='கவிதை'/><category term='க்விதை'/><category term='நூல் வெளியீடு'/><title type='text'>காற்றில் அலையும் சிறகு</title><subtitle type='html'>காற்றில் அலையும் சிறகு, Literature, Kavithai</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>61</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5851216080952733494</id><published>2011-09-30T01:53:00.000-07:00</published><updated>2011-09-30T02:09:15.524-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அறைக்குள் புகுந்த தனிமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Jk_ovKXw9LE/ToWHLYazWBI/AAAAAAAAAXE/6_zHPGe4QIY/s1600/tate_tate_n01279_10_624x544.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-Jk_ovKXw9LE/ToWHLYazWBI/AAAAAAAAAXE/6_zHPGe4QIY/s320/tate_tate_n01279_10_624x544.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5658077136464074770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-asdBsV0HSAo/ToWER4zh6dI/AAAAAAAAAW8/wiD65J0PHDI/s1600/thumbnail.aspx"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 120px;" src="http://4.bp.blogspot.com/-asdBsV0HSAo/ToWER4zh6dI/AAAAAAAAAW8/wiD65J0PHDI/s320/thumbnail.aspx" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5658073949702056402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பிற்பகல் சுவற்றோடு கரைந்த வெறுமையில் உப்பைப்போல் அவளுடல் வெக்கை கொண்டிருந்தது. தன்னிலை கொள்ளமுடியாமல் கண்கள் அலைந்தோய்ந்து கொண்டிருந்தன. அலைபேசியில். நீண்ட யோசனைக்குப் பின்பாகவே அவள் தன் தோழிக்கு போன் செய்தாள். பேசத் துவங்கிய சில நொடிகளிலேயே அவர்கள் இருவரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரிந்தது. பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு மெளனமாகவே இருந்தார்கள். இருவரின் மனதிலும் வெறுமையின் மிகநீண்டதொரு வரைபடம். எங்கேயாவது வெளியில் செல்லலாமா என்று கேட்டாள் அவள். ’வேலை விசயமா இன்னைக்கு ஒருத்தரை பார்க்கிறேன்னு சொல்லியிருக்கேன்.அஞ்சு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நிற்கிறேன் வந்து கூட்டிட்டு போ. உன்னை பார்த்துட்டு அப்படியே அவரை பார்க்கப்போறேன்’ என்றாள் தோழி. &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் ஸாடப்பில் நின்று கொண்டிருந்த தோழியை தன் ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள். ’க்ளைமேட் அழகா இருக்குல்ல’ . ஆமாம் என்று அவளுக்கு பதில் சொல்கையில் இருவரின் மனமும் லேசாக மகிழ்ந்தது. பாலத்தில் ஏறும் போது ஏதோ காற்றில் பறப்பதாக நினைத்து கைகளை விரித்துக் கொள்ள நினைத்தாள். டீசலப்பிய காற்று வேகமாய் தீண்டிச்செல்லவும் சில நொடி முகத்தை இடது பக்கமாகத் திருப்பி மீண்டும் சாலையைப் பார்த்தாள். தோழி மெதுவாக அவள் தோளை தொட்டு ’இந்த பாலத்தில் இப்படி உன்னோடு வர்றது என்னமோ மனதிற்கு மிகப்பெரிய சுதந்திர உணர்வையும் நம்பிக்கையும் கொடுக்குது’ என்றாள். தோழியுடைய வார்த்தைகள் அவளை உற்சாகப்படுத்தியது. அருகருகே அவளை நெருங்கிச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை. அப்படி வாகனங்களுக்கிடையே செல்வது அவளுக்கு ஆனந்தமாகவே இருந்தது. இப்படியொரு பயணம் எப்பபொழுது வேண்டுமானாலும் அவளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் ஏனோ அப்படிச் செய்யாமல் அறைக்குள் உறைந்து கிடக்கவே விரும்புகிறாள். மனம் நெருக்கடியில் தவிப்பதை விரும்புகிறாள் போல. மரண அவஸ்யையைவிட கொடுமையான தனிமையின் கணங்களை அதே வாதையோடு அனுப்பவிக்கிறாள். முரண்டு ஓடும் மனம் நிர்கதியற்று ஒரு புள்ளியில் வந்து நிற்கும் போது கண்கள் பஞ்சடைத்து மனம் சக்கையைப்போல் அறையில் மூலையில் கிடக்கும். யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படாத நெருக்கத்தை அன்பை வாஞ்சையோடு தடவி மீண்டும் அறையின் மூலையில் எரிந்துவிடுகிறாள். திருப்திபடுத்த முடியாத வாழ்வை விட்டகழ்வதும் முடியாதென உணரும் பொழுதில் யாரிடமாவது பேசத் துணிவாள். அப்படித்தான் அன்று தோழியை அழைத்தாள். பின்புதான் தெரிந்தது அவளும் இதே மனநிலையில் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு செல்வது என்று தோழியிடம் கேட்டாள். அவள் பதில் சொல்லாது காற்றை நுகர்ந்து கொண்டிருந்தாள். தோழி தன்னோடு பயணப்பட விருப்பம் இல்லாமல் இருக்கிறாளோ என்று சந்தேகம் வர ’நீ யாரையோ பார்க்கனும்னு சொன்னியே எங்கன்னு சொல்லு அங்க உன்னை எறக்கிவிட்டுறேன்’ என்றாள். ’நீ எங்க போற’ என்று கேட்டாள் தோழி. பதில் சொல்லாது கொஞ்ச நேரம் யோசித்தவள் ’உன்னை எறக்கிவிட்டுட்டு அப்படியே பீச்சுக்கு போறேன்’ என்றாள். தோழி உடனே, ’நானும் வர்றேன். அந்தாளை கொஞ்ச லேட்டா பார்த்துக்கிறேன்’ என்றாள். இருவரும் கடற்கரை ரோட்டை அடைந்தார்கள். ’இந்தப்பக்கம் வந்த ரொம்ப வருசமாச்சு’ என்ற தோழி ’நான் இப்போ சந்தோசமா இருக்கேன்’ என்றாள். அவள் எந்த கேள்வியும் கேட்காமல் சிரிக்க, ’இந்த சூழல் நல்லாருக்கு. இந்த ரோடு இவ்வளவு அழகா இரும்னு நெனைக்கல’ என்றாள் . வண்டியை நிறுத்திவிட்டு காந்திசிலைக்கு அருகே போய் உட்கார்ந்துகொண்டார்கள். ஏதோ வேறு தேசத்தில் இருப்பதைப்போன்று இருவருக்கும் ஒருவித உணர்வு. புறவெளியின் இயக்கத்திலிருந்த  யாரும் அவர்கள் மனதில் பதியவில்லை. அவர்களைத்  தவிர மற்றவர்கள் பேசியது எல்லாம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. தோழி அவளைப் புகைப்படம் எடுக்க விரும்பினாள். அவள் விருப்பத்துடன் இயைந்து கொடுத்தாள். தான் அழகாக இருக்கும்படியான போஸ்களை மிக கவனத்துடன் செய்தாள். அவளின் அந்தக் கவனமும் ஒத்துழைப்பும் தோழியை உற்சாகப்படுத்தியது. பத்துக்கு மேற்ப்பட்ட புகைப்படங்களை எடுத்தாள். போதும் என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு எழுந்து தோழியை காந்தி சிலைக்கு கீழே திண்டில் உட்காரச் சொன்னாள். அவள் நீண்டகாலமாய் பாதுகாக்கப்படும் ஓவியத்தைப்போல் கண்ணில் மட்டும் உயிர்ப்பை தேக்கி அசையாது அமர்ந்தாள். அவளை மேலும் நான்கு புகைப்படங்கள்  எடுத்துவிட்டு வெளிச்சம் போதவில்லை என்றாள். இருவரும் பேசியபடியே  அங்கிருக்கும் கடைக்குச் சென்றனர். தோழியின் இடது கையைப் பற்றியபொழுது அவளின் கை குளிர்ந்து போயிருந்தது, ‘சுத்தி இருந்தவங்க எல்லாம் போட்டோ எடுக்கிறதையே பார்த்துகிட்டிருந்தாங்க. அதான் போதும்னு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம லைட் வேற இல்ல’ என்றாள். தோழி எடுத்த புகைப்படங்களை பார்த்தாள். அவள் விரும்பிய அழகில் இருந்தது. திருப்திபட்டுக்கொண்டாள். ஏதோ நிம்மதி இருந்தது அதில். ’வாழ்க்கையோட போதாமையே திருப்தி இல்லாம இருக்கிறதுதான்.  நாம எதையாவது செஞ்சு அதை போக்கிடனும். இல்லன்னா நாம எப்பவும் துன்பபட்டுகிட்டுதான் இருக்கனும்’ புகைப்படங்களை பார்த்துக்கொண்டு வந்த அவள் தோழியின் பேச்சை கேட்கும் பொருட்டு அதை மூடி வைத்தாள். ஏனோ அவள் அதற்கு மேல் அந்த பேச்சை தொடர விரும்பாமல் அந்த கடைக்கு செல்வதை மட்டும் கவனமாகச் செய்தாள். இருவரும் மிக முக்கியமான ஒன்றை அடைவதைப் போன்று அந்த கடையைச் சென்றடைந்தார்கள்.  கடல் பற்றியோ கடலுக்கு அருகே செல்வது பற்றியோ இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கடலைச் சுற்றிய காட்சிகள் வெறும் காட்சிகளாகவே இருந்தது. அதைபற்றிய எந்த அவதானிப்பும் அவர்கள் மனதில் இல்லை.வெறும் மனிதர்கள்,கடைகள்,கடல் அடங்கிய இடமாக மட்டுமே அந்த இடத்தை உணர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் அந்தக் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தார்கள்.அவள் சென்னாவும்,தோழி சீஸ் பிரட்டும் ஆர்டர் செய்தார்கள். அவர்கள் மனதிற்குள் கிடந்த கசப்புகள் அந்த நேரத்தில் எழவே இல்லை. வேலை, வாழ்வின் இருப்பு,சினிமா, இலக்கியம்,நண்பர்கள் எதை எதையோ பேசினார்கள். எந்த பேச்சிலும் ஆழ்ந்த பொருள் இல்லை. அப்படி இல்லாமல் இருக்குமாறு இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு விசயத்தின் ஆழமே அவர்கள் இருவரையும் பாதிப்பதாக இருந்தது. அதை உணர்ந்து மேலோட்டமாகவே பேசினார்கள். அங்கே இருப்பதற்கான தேவை தீர்ந்ததும் ஒரே நேரத்தில் இருவரும் கிளம்பலாமா என்றார்கள். அவள் தான் பார்க்க வேண்டிய நபரை காந்தி சிலைக்கு வரச்சொல்லி அங்கே வந்ததும் போன் செய்யச் சொன்னாள். அவர் அலுவலகம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருந்ததால் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னார் அவர் வரும் வரையில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விடைபெறும் தருணத்திலும் முக்கியமான எதையும் அவர்கள் பேசிவிடவில்லை. அடுத்த பத்துநிமிடத்தில் அந்த நபர் போன் செய்ய தோழி ’இதோ பக்கத்திலிருக்கிறேன் வந்துவிட்டேன்’ என்றாள். ’அவரை பார்த்துட்டு போறியா’ என்றாள் அவளிடம். அவள் ’இல்ல நான் பார்க்கல’ என்று சொல்லிவிட்டு தோழியை அனுப்பி வைத்தாள்.  தோழி அந்த இடத்திலிருது செல்வதை பார்க்கத் தோன்றவில்லை. கைப் பையிலிருந்த போனை எடுத்து அதில் வயரை பொருத்தி பாடலை ஓடவிட்டு காதில் வைத்து வாகனங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தாள். இருபத்திமூன்று வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பெருநகரத்தில் இப்படியான பார்வைகளை எதிர்நோக்குதல் ஒன்றும் புதியதான விசயமில்லை. அதிலும் இவன் முகத்தில் தீர்க்கமுடியாதவொரு வெக்கையப்பிக் கிடந்தது. தயக்கமின்றி இவளுடலில் பார்வையை அலையவிட்டவன் இவள் நெருங்கி வருகையில் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான். அவளுக்கு உண்மையாகவே சிரிப்பு வந்தது. எப்படியும் அவன் அவளைவிட நான்கைந்து வயதாவது குறைந்தவனாக இருப்பான். அவள் அவனை கவனித்தபடியே அவள் வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். அவன் வண்டி இருந்த இடத்திலிருந்து ஒரு இருபது முப்பது வண்டி தாண்டியே அவள் வண்டி இருந்தது. இப்போது அவன்  ஸ்டாண்ட் எடுத்து வண்டியில் உட்கார்ந்தான். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரே சமயத்தில் தன்னுடல் முழுக்கவிருக்கும் வெறுமையும் அவனுடலில் தெரியும் பதட்டமும் ஏதோவொரு வகையில் ஒரேபுள்ளியில் மோதிச்செல்வதாயிருந்தது. அவன் தன்னை பின்தொடரப் போகிறான் என்பதை உடனே யூகித்துக்கொண்டாள். அவளுக்கு லேசான உற்சாகம் எழுந்தது. அவனால் அவள் வயதை கண்டுபிடிக்கத் தெரியவில்லையா இல்லை அவள் அணிந்திருக்கும் ஆடை அவனை அப்படி நினைத்திருக்கச் செய்திருக்கலாம். அல்லது அவனுக்கு வயது ஒரு தடையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.அவள் சிக்னலுக்காக காத்திருந்தாள், அவன் இவள் வண்டியை எடுப்பதற்காக காத்திருந்தான். அவனை கண்டுகொள்ளாமல் சிக்னல் விழுந்ததும் வண்டியை வேகமாக ஓட்டிப்போனாள். அவன் அவளுக்கு இணையாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். ஹெட்போன் வழியாக கேட்டுக்கொண்டிருந்த பாடல் அவளை உற்சாகமூட்டியது. விரைந்து வண்டியை ஓட்டினான். அவனுக்கு தெரியாமல் அவனை கவனித்தபடி வந்தாள். அவன் இவளைத் தொடர்வதை நிச்சயமாக அவளைத் தவிர்த்து இன்னும் சிலரும் கவனித்திருக்கக்கூடும். தனது யவனத்தின் மீது பெருமிதம் கொள்ளமுடிந்தது அவளால். நிச்சயமாக அவனுக்கு சில வார்த்தைகளை பரிசளிக்க வேண்டுமென சிரித்துக் கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் திரும்பிபார்க்காமல் எந்த சைகையும் செய்யாதபோதும் அவன் விடுவதாக இல்லை பின்னால் வந்துகொண்டே இருந்தான். ஞாயிற்றுகிழமை ஆதலால் நகரத்தின் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. கடற்கரை சாலையை கடக்கும்போது வெளிச்சமாகவே இருந்தது. அதைத்தாண்டி மேம்பாலத்தில் அவர்கள் சென்றபோது இருட்டத் தொடங்கியது. அவன் அவள் பக்கத்தில் வண்டியை ஓட்டியபடி சிரித்துக்கொண்டு வந்தான். மேம்பாலத்தில் வண்டியை செலுத்தி போகும்போதெல்லாம் அந்தரத்தில் பறப்பதைப்போலவே தோன்றும். ராட்டினத்தில் ஏறிய குழந்தை போலவே சிரித்துக்கொண்டாள். அவளுடைய சிரிப்பை தனக்கான சைகையாக பின்தொடர்ந்தவன் நினைத்துக் கொண்டான். அவளும் அதை கலைக்க விரும்பவில்லை. வண்டியை தி.நகரை நோக்கி ஓட்டினாள். ஒரு டீக்கடையை பார்த்து வண்டியை நிறுத்தினாள். ஜி.என்.ஜெட்டி சாலையில் மரத்துக்கு கீழே பிளாட்பாரத்தில் அந்த டீக்கடை இருந்தது.அங்கே போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேரில் தனியாக அமர்ந்து கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க அவளுக்கு பிடிக்கும். தெருவோர டீக்கடைக்கு அவள் போவதை நினைத்து ஆச்சர்யமாகி அவனும் வண்டியை நிறுத்தி அவள் பக்கத்தில் வந்து “நீங்க கவிதா ஃபிரண்ட்தானே கல்யாணத்தில் பார்த்தோமே ஞாபகம் இல்லையா ” என்றான். அவளால் இப்போது சிரிக்கமுடியவில்லை. அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள் விழிநரம்புகளெங்கும் காமத்தின் மெல்லிய சுவடுகள் வரியோடிக்கொண்டிருந்தன. அவன் சொற்கள் அவளுக்கு அபத்தமாகப்பட்டது. அவன் உடல் கொதித்து வெடித்துவிடத் தயாராயிருப்பதை முகத்தின் வெக்கை உணர்த்தியது.  ’நீங்க நேரடியாவே நான் யாருன்னு கேட்கலாம்’. ’இல்ல தப்பா நெனைச்சுகாதீங்க எனக்கு அப்படித்தான் தோணுச்சு’ என்றான் அசடு வழிந்தபடி. ’டீ சாப்பிடுறீங்களா’ என்றாள்.அவள் திட்டப்போகிறாள் என்றிருந்தவனுக்கு அவள் அப்படிக் கேட்டதும் வியப்பாக இருந்தது. ’ஒகே’ என்று சொல்லிவிட்டு அவனே ஆர்டர் செய்தான். டீயை வாங்கிவந்து அவள் கையில் கொடுத்துவிட்டு ’சாரி நீங்க கவிதா ஃபிரண்டுன்னு நெனைச்சுதான் உங்க பின்னாடி வந்தேன்’ என்றான் மறுபடியும். அதற்கு மேல் அவள் எரிச்சல் அடைந்தவளாக ’ஆமாம் நான் கவிதா ஃப்ரண்டுதான்’ என்றாள். திரும்பவும் ஒரு அபத்தமான சாரியை சொல்லி ’இல்ல நீங்க கோபமாகிட்டீங்க போல அதான் கவிதா ஃபிரண்டுன்னு சொல்றீங்க’ என்றான். ’உங்க பிரச்னை என்ன நான் கவிதா ஃபிரண்டா இருக்கனுமா? இல்ல இல்லாமல் இருக்கனுமா எது உங்களுக்கு வசதி’என்றாள் அவன் முகம் சுருங்கிவிட்டது. அன்றைய பொழுதை அவள் நேசிக்க விரும்பினாள். யாரென்று தெரியாத ஒருவனிடம் பேசுவதும் கோபித்துக்கொள்வதும் இனம் புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் கடுமையாக பேசினால் அவள் இங்கேயே கழன்று கொள்ள நேரிடும். அதை அவள் விரும்பவில்லை. அவனை சகஜமாக்க ’எங்க வேலை செய்றீங்க’ என்றாள். அவன் பெயரைக் அவள் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அவள் பெயரையும் அவன் கேட்கவில்லை. அவன் எம்.பி.ஏ படித்திருப்பதாகவும் ஏதோ ஒரு கம்பெனியில் நிர்வாக பிரிவில் மேலாளராக இருப்பதாகச் சொன்னான். அவன் கழுத்தில் குறுக்காக ஒரு பையை போட்டிருந்தான். அதற்குள் லேப்டாப் இருக்கலாம். அவனுடைய அதிகாரித்தனமான ஆடை, பையை குறுக்காக போட்டிருந்தவிதம் எதுவும் ரசனைக்குரியதாக இல்லை. எந்தவித ஈர்ப்பும் அவளுக்கு அவனிடம் இல்லை. அவன் பின்தொடர்ந்து வருவதும் அவள் அத்தகைய சூழலில் இருப்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது. டீக்கான காசை அவள் கொடுக்க அதை மறுத்து அவனே கொடுத்துவிட்டு வந்தான். அவர்கள் இருவரும் காதலர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்று கடைக்காரன் நினைத்திருப்பான், அவன் எந்தவித ஆச்சர்ய பார்வையும்யின்றி காசை வாங்கிக் கொண்டான். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை அவளிடம் இல்லை. வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் கை சாவிக்கு போகும்போது ’வாங்களேன் ரெஸ்டாரெண்ட் போய் சாப்பிட்டுட்டு போகலாம்’. மீண்டும் அவளுக்கு சிரிப்புதான் வந்தது. செய்வது சரியா தவறா என்ற யோசனையெல்லாம் இல்லை. ஏதோ ஒரு நெம்புசக்தி உந்தித்தள்ள ’சரி’ என்றாள்.  அந்த சூழ்நிலையில் உணர்ச்சிபிளம்பாக இருந்தாள். இத்தகைய செயல்கள் தனிமையை காலுக்கடியில் போட்டு மிதிப்பதாக நினைத்த அவள்மனதில் அதேசமயத்தில்  தனிமையின் கூட்டை இன்னும் அகலப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தோன்றியது. அவள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் உணர்ச்சி நிலைக்குள் இருந்தாள். எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலைசெய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது. தன்னைத் தொடர்ந்துவரும் அந்த இளைஞன் யாராக இருப்பான்? எல்லா ஞாயிறுகளிலும் இதுமாதிரி புதுப்புது கவிதாவின் தோழிகளையோ அல்லது கவிதாக்களையோ  பின்தொடர்பவனாக, அவர்களோடு சல்லாபித்து அந்த தினங்களின் இரவுகளுக்கு மட்டும் அவர்களின் உடல் மீதான உரிமை கொண்டாடுகிறவனாய் இருக்கலாம். இன்னும் திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லையென கொஞ்சமாய் முளைக்கத் துவங்கியிருந்த மீசையும் தாடியும் சொல்லிக் கொண்டிருந்தன.          &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ரெஸ்டாரெண்ட் போகலாமா என்று கேட்டவன் பின்னர் பீட்ஸா கார்னர் போகலாமா என்றான். எந்த யோசனையின்றியும் சரி என்றாள். அவன் வண்டியை ஓட்டிக்கொண்டு முன்னால் போக இவள் அவன் பின்னாலயே வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். பீட்ஸா கார்னரில் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார்கள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.   குளிர்பானம் மட்டும் போதும் என்றாள். அவனுக்கு ஒரு பீட்ஸா சொல்லிக்கொண்டான்.       &lt;br /&gt;&lt;br /&gt;’அப்புறம் என்ன படிக்கிறீங்க’? என்று கேட்டான். அவள் அமைதியாக ’எம்.ஏ ஹிஸ்ட்ரி’ என்றாள். பனிரெண்டாவதுக்கு மேல் படிக்கவில்லை என்று சொன்னால்கூட அவன் இத்தகைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கமாட்டான்போல. ஒரு எரிச்சலும் அகங்காரமும் கலந்த தோரணையில் ’ஹிஸ்ட்ரியா? இந்த காலத்திலும் எம்.ஏ ஹிஸ்ட்ரி படிப்பாங்களா?’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை முழுவதுமாக அளக்கும் பாவனையில் உற்றுக் கவனித்தாள். ’எம்.ஏ ஹிஸ்ட்ரி படிச்சிட்டு என்ன வேலை பார்க்க போறீங்க?’ எளக்காரமாக பேசிக்கொண்டே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;’உங்கள பாத்தா வழக்கமான பெண் மாதிரி தெரியலையே..?’&lt;br /&gt;&lt;br /&gt;’வழக்கமான பெண்னுனா..?’&lt;br /&gt;&lt;br /&gt;’இல்ல சம்திங் டிஃபரெண்ட்..வழக்கமா தெரியாத பெண்கிட்ட நீங்க கவிதா ஃபிரண்டானு கேட்டிருந்தா இல்லைனு பதில் சொல்லிட்டு கட் பண்ணிட்டு போயிடுவாங்க .,யூ ஆர் டிஃபரெண்ட்..ஐ மீன் யூ ஆர் ஃப்ரெண்ட்லி’&lt;br /&gt;&lt;br /&gt;’ஓ அப்படியா..ஃப்ரெண்ட்லியா இருந்தா டிஃபரெண்ட்னு அர்த்தமா’ &lt;br /&gt;&lt;br /&gt;ஹா..ஹா ..என போலியாக சிரித்தவாறு..’யு காட் மீ ராங்..நான் அப்படி சொல்ல வரல..சரி விடுங்க ., அப்புறம் உங்கள பத்திச் சொல்லுங்க’&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாத ஆண் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.’நீங்களே கெஸ் பண்ணி சொல்லுங்களேன் என்னைப் பற்றி, டிஃபெரெண்டான பெண்னுனு நீங்க கண்டுபிடிச்ச மாதிரியே.,’&lt;br /&gt;&lt;br /&gt;’ஓ நைஸ்., இது நல்லா இருக்கே..சரி உங்கள் வயது 24-25 இருக்கும்’&lt;br /&gt;&lt;br /&gt;”ம்ம்ம்” &lt;br /&gt;&lt;br /&gt;”சரிதானே..”&lt;br /&gt;&lt;br /&gt;”கிட்டதட்ட...” &lt;br /&gt;&lt;br /&gt;’நீங்க இவ்வளவு ஈசியா பிராட் மைண்ட்ட்டா இருக்கிறத பார்த்தா நீங்க நிறைய புக்ஸ் படிப்பீங்க சரியா’&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக்கொண்டு ’ஆமா..கரெக்ட்’&lt;br /&gt;&lt;br /&gt;’என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க..’&lt;br /&gt;&lt;br /&gt;’ஆனந்தவிகடன் குமுதம்..’&lt;br /&gt;&lt;br /&gt;ஹா..ஹா..பெரிய ஜோக் சொன்னது போல் மறுபடியும் போலியாகச் சிரித்தான்&lt;br /&gt; &lt;br /&gt;’இல்ல ..நான் கேட்டது நாவல், போயம் மாதிரி’&lt;br /&gt;&lt;br /&gt;’இல்ல நான் அதெல்லாம் படிக்கறதில்ல ஆர்வமில்ல..’&lt;br /&gt;&lt;br /&gt;’ஓ..அதெல்லாம் இல்லாமலயே யூ ஹேவ் பிராட் நாலெட்ஜ்’&lt;br /&gt;என்னை புகழ்ந்தே எப்படியும் மடக்கிவிட வேண்டுமென ஆயத்தமாகியிருப்பான் போல...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பெயரைச் சொன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;’ம்ம்ம்., நல்ல பெயர்.,’&lt;br /&gt;&lt;br /&gt;’நன்றி., ஒருத்தவங்க பேரச் சொன்னா பதிலுக்கு நாமளும் பேரச் சொல்லனும்.,’சிரித்தவாரே கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;’பெயர் தெரியலன்னா பேச முடியாதா., இவ்வளவு நேரம் பெயர் இல்லாமல்தானே பேசினோம்’ நக்கலாகச் சொன்னாள்..&lt;br /&gt;’உங்களுக்குத் தெரிந்த கவிதாவின் ஃப்ரண்டுக்கு என்ன பேரோ அதுவே என்னோட பேரா இருக்கட்டும்…’ சிரித்தாள்.&lt;br /&gt;அவன் சில நொடிகள் அந்த இல்லாத கவிதாவையும் அவளின் தோழியையும் நினைத்துக் கொண்டு சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;’யூ ஆர் ரைட்…ஆமா பேசுவதற்கு எதற்கு பெயர்.. எதற்குமே எதுக்கு பெயர்..ஹா..ஹா..’ மறுபடியும் ஜோக் அடித்தது போல் அவனே சிரித்துக்கொண்டான். அவள் என்ன சொன்னாலும் அதை ஆமோதித்து நெருங்கி வருவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;’நீங்க இப்படித்தான் பொண்ணுகள பின் தொடர்ந்து பிக்-அப் பண்ணுவீங்களா..? இதுக்கு முன்ன எவ்ளோ பேர இப்படி பிக் அப் பண்ணியிருப்பீங்க?...ஒரு இருபது?..’&lt;br /&gt;சிரித்தவாறே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் அடைந்தவனாக ’ஏன் இப்படி கேக்குறீங்க..நான் நீங்க நினைக்கிற மாதிரி தப்பானவன் இல்ல.. நிஜமா கவிதா ஃப்ரெண்ட்னு நினச்சுதான் வந்து பேசுனேன்....’ முகம் சுருங்கிச் சொன்னான். அப்பாவியாய் நல்லவனைப்போல் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;‘அந்த மாதிரி பசங்கள்லாம் தப்பானவங்கன்னு நான் சொல்லலையே...” அவன் போலித்தனத்தில் கல்லெறிந்ததை நினைத்துச் சிரித்தாள். &lt;br /&gt;அவன் இன்னும் சமாதானமாகவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;’அய்யோ கோவிச்சுகாதீங்க சும்மா கிண்டலுக்குதான் சொன்னேன்…அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணை ஆண் தொடர்வது இயல்புதான..இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க’&lt;br /&gt;&lt;br /&gt;ரிலாக்ஸ் ஆனவனாய் புன்னகைத்து கொண்டான் ’ரொம்ப ஃப்ராங்க்கா பேசுறீங்க ஐ லைக் யூ’ &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு,’இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும் “மீ டூ லைக் யூ”..?னா..சிரித்தவாறு கேட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய ஜோக்குக்கான அதே சிரிப்புடன் “பிடிச்சிருந்தா சொல்லுங்க”&lt;br /&gt; &lt;br /&gt;“இதுக்கு முன்ன உங்ககிட்ட யாராவது லைக்யூன்னு சொல்லியிருக்காங்களா?”&lt;br /&gt;அவன் ‘அப்டில்லாம் இல்லையே…என்று இழுத்து விட்டு சில சமயம் கூட வொர்க் பன்ற பொன்னுங்க கலாய்க்கிறதுக்காக அப்பிடி சொல்றதுண்டு… ஏன்?...&lt;br /&gt;அவன் முகத்தில் சலனமில்லை. தன்னைப் பற்றி அதிகமாக அவளிடம் சொல்கிறோமோ என அவன் நினைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல நீங்க சொன்னவிதத்துல இருந்து நிறைய சொல்லிப் பழக்கப்பட்ட மாதிரி இருந்துச்சு…” அவள் சிரித்துக்கொண்டாள். &lt;br /&gt;அவன் அமைதியாக இருந்தான். அவனோடு பேசுவது அந்த நொடியிலேயே போரடித்துவிட்டது அவளுக்கு. அங்கிருப்பது ஒருவித அசூயை உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியது.உடனே அங்கிருந்து கிளம்ப விரும்பினாள்.தொடர்பை அறுத்துக்கொள்ளும்விதமாக&lt;br /&gt;”நீங்க மட்டும் இல்லீங்க எனக்கு எல்லா ஆண்களையும் பிடிக்கும்” இதைச் சொல்லும்போது அவன் கண்கள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;’புரியல எல்லா ஆண்களையும்னா ..அப்பா,அண்ணன்,தம்பி’ அவன் அப்படிக் கேட்டது அவளுக்கு மிக அசிங்கமாகப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;’இல்ல..இது வேற நான் என்ன வேல செய்யுறேன்னு தெரியுமா?’&lt;br /&gt;&lt;br /&gt;’சொன்னாதான தெரியும்’ புதிரை அறியும் ஆர்வத்துடன் கேட்டான் குழப்பத்துடன். அவனை பேச்சற்று போகும்விதமாக ’நான் உண்மையைச் சொல்லட்டுமா’ என்றாள்.அவன் வியப்போடு பார்க்க. ’நான் படிக்கல.பிராஸ்டியூசன் பண்றேன்’ என்றாள். தெரியாத பெண்ணோடு டேட்டிங்கை அனுபவித்துக் கொண்டிருந்த அவனுடைய சந்தோசத்தில் மண் விழுந்தது. இதுவரையில் அவளை பின் தொடர்ந்துவந்தவிதம் அவள் திட்டிவிடுவாளோ என்று பயந்து பயந்து பேசியதை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவன் கண்கள் சிவந்து கோபம் கொப்பளித்தது. ‘நானும் ஒரு பிராஸ்டியூட்டை தேடிக்கிட்டுத்தான் இருந்தேன்’ என்று அகங்காரமாக பேச்சை தொடர்ந்தவன் முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல ’இவ்வளவு அலைச்சல் உன்னைப்போய் தப்பா நினைச்சு சே...’ அவன் தன்னுடைய  செய்கைகளை நினைத்து வருதப்பட்டான். இப்போது அவன் அவளை ஒருமையில் பேசிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குமேல் அவளிடம் பேச எதுவும் இல்லை என்று முடிவு செய்து&lt;br /&gt;’சரி எவ்வளவு’ என்றான் எடுத்த எடுப்பில். அவள் இரண்டாயிரம் என்றாள். உண்மையில் அவளுக்கு தான் எவ்வளவு விலைபோவோம் என்று தெரியவில்லை. இரண்டாயிரமா என்று அவன் இழுக்க அவள் அதிகமாக சொல்லிவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே ‘சரி போகலாம்’ என்றான். உள்ளுக்குள் உலர்ந்து வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. வாயில் கசப்பை உணர்ந்தாள். கொஞ்ச நேரம் முன்புவரை வெறுமையை உணர்ந்த அவள் இப்போது பெரும் ஆபத்தான சூழலுக்குள் இருப்பதைப் போன்ற பயவுணர்வும் அதே சமயத்தில் தன் உடல் மீதான அருவருப்பையும் உணர்ந்தாள். விழுங்கக் காத்திருக்கும் காண்டாமிருகத்தைப்போல எதிரில் இருந்தவன் தோன்றினான். அவன் முகத்தில் முன்பிருந்த லேசான பயவுணர்வு நீங்கி அதிகாரமும் இனம்புரியாத வன்மமும்          &lt;br /&gt; தெரிந்தது அவளுக்கு. அந்த நொடியில் அவனை கொலை செய்யத் தோன்றியது. ’வா கிளம்பலாமா’ என்று கேவலமான தொனியில் கேட்டவன் அந்த நொடியிலிருந்து அவளை முழுவதும் தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டான். ’எங்க உன் இடத்துக்கா என் இடத்துக்கா’ என்றான். அவள் அவனை பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க, ’என்ன முழிக்கிறே இரண்டாயிரம் ஓகே குடித்திடுறேன்’ என்று எழுந்து ’முடிஞ்சதும் பணத்தை குடுக்கிறேன் வா’ என்றான். விட்டால் அவளை தரதரவென்று பிடித்து இழுத்துச் சென்றுவிடுவான்போல. ’எங்க வச்சுக்கலாம்’ என்றான் மறுபடியும். &lt;br /&gt;அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ’என் இடத்துக்கே போகலாம்’ என்றாள். ’உன் இடம் ஃசேபா இருக்குமா’ என்று கேட்டான். ’வீட்ல யாருமே இல்லை. ஃபேமிலி எல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க’. ’பேமிலியா? சும்மா பணம் அதிகமா வாங்கிறதுக்காக ஃபேமிலினு சொல்லக்கூடாது. இரண்டாயிரத்துக்கு மேல தரமாட்டேன்’ என்றான். பாலியல் தொழிலாளியின் தொழில் சூட்சமத்தை கண்டுணர்ந்தவன்போல பேசினான். அவள் கண்களில் காட்டிய வெறுப்பை உதாசீனம் செய்தான். ஏளனத்தோடு அவன் உடலை அறுத்துக்கொண்டிருக்கும் அவள் பார்வையை ஒரு பொருட்டாகக்கூட அவன் மதிக்கவில்லை. அடிமையை இழுத்துச் செல்லும் வீரனைப்போல உடல் நிமிர்த்தி கிளம்பலாம் என்று கண்ஜாடை செய்தான். அவள் சரியென்று ஆமோதித்துவிட்டாள். ஆனால் தலை கிர்ரென்று சுற்றியது. ஒரு நொடி உலகம் முழு இருளாகி தெளிந்தது. கசப்பில் ஊரும் நச்சுபாம்பினைப்போல் அவள் நெளிந்துகொண்டிருந்தான். தீண்டும் கரங்களை விழுங்கக் காத்திருக்கும் கொடியவிலங்கினை அவன் அதிகாரத்தின் சாட்டையைக்காட்டி அழைத்தான். ’என் பின்னாடியே வாங்க’ என்று வண்டியை எடுக்கக் கிளம்பினாள்.’ஏரியா எங்க’ அவன் கேட்க கோடம்பாக்கம் என்றாள். அவன் பின்னாடியே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஞாயிற்றுக்கிழமையிலும் தி.நகர் சாலை பரபரப்பாக நெரிசலோடு  இருந்தது.அவன் அவள் பின்னாடியே வந்துகொண்டிருந்தான்.முன்பு அவனிடம் இருந்த குறுகுறுப்பு மறைந்து வேட்கை வெளிப்படையாகத் தெரிந்தது. எல்லாவற்றையும்விட அவன் அதிகாரத்தோரணைதான் அவளைத் தொந்தரவு செய்தது. கோடம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் அவள் செல்ல அவனும் வந்தான். அவள் வண்டிக்கு பக்கத்திலேயே அவனும் வண்டியை நிறுத்தினான். இரண்டாவது தளத்தில் ஒரு ஒரு வீட்டைத் திறந்தாள். அவள் வீட்டுக்கு எதிரே இருந்த வீடும் பூட்டிக் கிடந்தது. இரண்டு படுக்கை அறையைக் கொண்டிருந்தது. ஏதோ சினிமா படத்தில் காண்பிப்பதைப் போல அந்த வீட்டில் இன்னும் வேறு பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்தான். யாரும் இல்லாததைக் கண்டு ’உன்கூட வேற பெண்கள் இல்லையா?’ என்றான். அவள் அதைக் காதில் வாங்காமல் ’என்ன சாப்டிறீங்க’ என்றாள். ’இல்ல அதெல்லாம் வேணாம் நான் பாத்ரூம் போயிட்டு வாறேன்’ என்றான். அறைக்குள் இருந்த அட்டாச்டு பாத்ரூமை காட்டினாள். அவன் தன்னுடைய பேக், ஃபோன் எல்லாவற்றையும் ஹாலில் வைத்துவிட்டு பாத்ரூம் போனான். அவன் திரும்பிவந்து பார்க்கும்போது அறைக்கதவு சாத்தியிருந்தது. அவன் கதவை திறக்க அது வெளிப்பக்கமாக சாத்தியிருப்பதை உணர்ந்து பயம்கொள்ளத் தொடங்கினான். கதவை லேசாகத்தட்டினான். கதவு திறப்பதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் அதிகரிக்க மிரண்டுபோய் பலமாக கதவைத் தட்டினான். அவள் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள். கதவு தட்டப்படுவதை அவள் பொருட்படுத்தவில்லை. டீவியின் சத்தத்தை அதிகரித்தாள். அவன் கதவுக்கு கீழே உட்கார்ந்தான். அந்த அறையை நோட்டமிட்டான். வெறும் புத்தகங்களாக நிரம்பிக் கிடந்தது. அதில் ஒன்றைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போது அவனின் பயம் இன்னும் அதிகரித்தது. கிறுக்கப்பட்ட பல காகிதங்கள் மெத்தையின் மேல் கிடந்தன.அவள் பைத்தியமாக இருப்பாள் என்று உடனே முடிவுக்கு வந்தான். அவளைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கிளம்புவது பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.  கதவைத்தட்டி ’சாரிங்க நான் உங்கள தப்பா நெனைச்சுட்டேன் என்னைத் திறந்துவிடுங்க நான் போயிடுறேன்’ என்றான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததால் மறுபடியும் கதவைத்தட்டி ’நானாங்கே உங்களை கேட்டேன் நீங்களாத்தானங்க பிராஸ்டியுசன் பண்றேனு சொன்னீங்க’.பெண்களை ஒரே மாதிரியாக பார்க்கும் அவன் பார்வையை நொந்துகொண்டான். நேரம் ஆக ஆக கதறத் தொடங்கினான். அவள் எதற்கும் வளைந்து கொடுப்பதாக இல்லை. டாம் அண்ட் செரி பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கதவைத்தட்டி தட்டி சோர்ந்துபோய் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கோபம் வந்தவனாக கதவை உடைக்கும்விதமாக பலமாகத் தட்டினாள். அவள் டீவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு அவனிடம் பேசினாள். நீ அமைதியா இல்லனா ’திருட வந்த உள்ள பூட்டிவச்சிருக்கேனு சொல்லி போலீஸைக் கூப்பிடுவேன்’ என்றதும் அவன் அழவே ஆரம்பித்துவிட்டான். மறுபடியும் அவள் டீவியின் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டாள். அவன் அவளை கதவை திறக்க வைப்பதற்காக ஏதோதோ பேசியும் கெஞ்சியும் கதவைத் தட்டியும் கடைசியில் சோர்ந்து போனான். பயத்தில் நடுங்கிக் குமைந்துகொண்டிருந்தவனுக்கு பித்துபிடித்ததைப் போலிருந்தது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த அவள் விடிந்ததும் பல்லை விளக்கி காப்பிபோட்டு சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு அருகே வந்தாள். அவன் காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்தவனைப்போல பேசிக்கொண்டிருந்தான். பேச்சுக்கு நடுவே கதவைத் தட்டியபடியே இருந்தான். அவள் மனம் லேசாக இருந்தது. வெளிக்கதவை திறந்துவிட்டு அவன் அறைக்கதவை திறந்தாள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவனைப்போல சுருங்கிப்போய் கண்கள் பள்ளமாகி காட்சியளித்தான். நேற்று அவனிடம் இருந்த போலித்தனம் அதிகாரம் ஏமாற்று எல்லாம் மறைந்து பயம் மட்டுமே இருந்தது. அவள் ஹாலில் இருந்த ஷோஃபாவுக்கு கீழே அமர்ந்தாள். அவன் பயத்தோடு வெளியே வந்தான் அவள் முகத்தைகூட பார்க்காமல்  அங்கே டிபாயில் இருந்த தன்னுடைய பை , ஃபோனை நடுக்கத்தோடு  எடுத்தான்.அவனுடைய நரம்புகள் வலுவிழந்து கை,கால் உதறத்தொடங்கியது. அங்கே ஒருத்தன் இருக்கிறான் என்பதை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அன்றைய நாளிதழை சுவாரஸ்யத்தோடு படித்துக்கொண்டிருந்தாள். அவன் அறையில் அடைக்கப்பட்ட நாயக்குட்டிபோல் ஒரு நொடிகூட தாமதிக்காமல் வெளியே ஓடத்தொங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: 361 காலாண்டிதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-5851216080952733494?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/5851216080952733494/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=5851216080952733494&amp;isPopup=true' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5851216080952733494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5851216080952733494'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/09/blog-post.html' title='அறைக்குள் புகுந்த தனிமை'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Jk_ovKXw9LE/ToWHLYazWBI/AAAAAAAAAXE/6_zHPGe4QIY/s72-c/tate_tate_n01279_10_624x544.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2293533142402178807</id><published>2011-08-11T08:39:00.000-07:00</published><updated>2011-08-11T08:48:36.086-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வுக் கூட்டம்'/><title type='text'>எனது மூன்று புத்தகங்களுக்கான திறனாய்வுக் கூட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Rp_Nk20hzXs/TkP4SSGCwsI/AAAAAAAAAW0/75qrR3CkqU4/s1600/Invitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-Rp_Nk20hzXs/TkP4SSGCwsI/AAAAAAAAAW0/75qrR3CkqU4/s320/Invitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639624151376511682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-2293533142402178807?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/2293533142402178807/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=2293533142402178807&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2293533142402178807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2293533142402178807'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/08/blog-post_11.html' title='எனது மூன்று புத்தகங்களுக்கான திறனாய்வுக் கூட்டம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Rp_Nk20hzXs/TkP4SSGCwsI/AAAAAAAAAW0/75qrR3CkqU4/s72-c/Invitation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-6357006116100747026</id><published>2011-05-19T21:25:00.000-07:00</published><updated>2011-05-19T21:33:10.771-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக மதிப்புரை'/><title type='text'>தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி                                                  _ அசதா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-X_jjby1Iz8I/TdXuxi2-OGI/AAAAAAAAAWo/xRLtAo2bEok/s1600/6532_1087071548123_1566456284_30193017_2796329_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-X_jjby1Iz8I/TdXuxi2-OGI/AAAAAAAAAWo/xRLtAo2bEok/s320/6532_1087071548123_1566456284_30193017_2796329_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608651445898197090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;’காட்டின் பெருங்கனவு’ தொகுப்பு,அதன் கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலகும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலகும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது. புனைவின் பொதுவளியில் பெண் கதை மொழிதல் என்பதன் வழமைகளும் மறுப்புகளும் மீறப்படுதலில் தொடங்கி,பெண்ணிய கருத்தாக்கங்களை மீட்டுருவாக்கம் செய்வது வரையிலான எழுத்துக்களை நாம் தொடர்ந்து கண்டு வரும்போதும் பெண் புனைகதையாளர்களது எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக நிற்கையில் மிக சுருங்கியது எனச் சொல்லத்தக்கதான என் வாசிப்பு வெளி அம்பை, லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா),உமா மகேஸ்வரி,சு.தமிழ்ச்செல்வி,சந்திரா,உமா ஷக்தி என்பதான வெகு சில பெயர்களையே உள்ளடக்கியதாய் இருக்கிறது.பரந்த வாசிப்பனுபவம் உடைய வொருவரும் இப்பட்டியலோடு ஒன்றோ அல்லது இரண்டோ பெயர்களை இணைக்குமளவிலேயே நம் சூழலின் யதார்த்தம் அமைந்திருக்கிறது என்பது என் துணிபு. இப்பின்னணியைக் கருத்தில் கொள்கையில் சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’ தொகுப்பினை ஒரு முக்கிய வரவாக நாம் காணவேண்டியுள்ளதன் அவசியத்துக்கு இன்னும் வலு கூடுகிறது.&lt;br /&gt;தலைப்புக் கதையான ’காட்டின் பெருங்கனவு’ குறிஞ்சி நிலக்காட்சிகளை பின்புலமாகக் கொண்டமைந்து,பதின்ம வயது பெண் மனதின் அசலான உணர்வுகளை மரபார்ந்த தணிக்கைகளுக்கு தொலைவே வைத்து புனைவாக்கிய வகையில் தொகுப்பில் சிறந்த கதையாக நிற்கிறது. கேரளத்தை ஒட்டிய மேற்கு மலைத்தொடரின் காட்சிகளும், நாம் அதிகம் அறிந்திறாத மிளகு பிடுங்குதல் போன்ற வாழ்வாதாரச் செயல்களும் ஊடுபாவிய ஒரு நிலவெளியில் தூரிகையால் தீட்டுவது போல கதை வளர்க்கப்படுகிறது. கதைப் பெண்ணின் தன்னிலை வழியாக விவரிக்கப்படும் காதலின் முகிழ்ப்பும்,தீவிரமும்,தவிப்பும்,பிரிவும் என கனவுத்தன்மை விலகாத காட்சிகள் வழி பெண்மையின் காதல் அபோதமானது, தத்துவம் மற்றும் தர்க்கங்களின் நிழல் கவியாத தூரத்தில் அப்படியே படைத்து தரப்படும் பாங்கில் தீர்க்கமும் வலுவானதொரு பிரதியாக இக்கதை இருக்கிறது. பிரிவின் தருணத்தில் அவளின் காதலை உணர்ந்துவிடும் பெரியம்மா கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமிலிருப்பது கதையின் போக்கில் உறுத்தலின்றி பதிவாகையில் காதல் குறித்த அசலானதொரு பெண்ணிய கருத்தாடல் இயங்கும் பிரதியாக இக்கதை முழுமை பெறுகிறது.&lt;br /&gt;’காட்டின் பெருங்கனவு’ கதையின் பெண்ணைப் போன்றவளே ‘மருதாணி’. ஆனால் மருதாணியின் உள வேட்கையும் காதல் அபோதமும் சமூகத்தின் பின்னணியில் ’மருதாணி’ கூடுதலானதொரு அர்த்த பரிமாணத்தை பெறுகிறது. இவ்வேட்கையைப் பின்பற்றிச் செல்வதன் எல்லா எதிர்மறை விளைவுகளையும் அறிந்தவளான மருதாணி அவை பற்றி கவலை எதுவும் கொண்டவளாகத் தெரிவதில்லை. ‘காட்டின் பெருங்கனவு’ கதையின் பெரியம்மாவைப் போல மருதாணியின் அண்டையில் வசிக்கும் பெண்களும் அவளது அந்தரங்க காதலை அறிந்தும் அதன் எதிர்மறை விளைவுகள் பற்றி அறிவுரை சொல்வதோ அல்லது அவளை கேடானவளாக கருதி விலக்குவோ இல்லை என்பது இங்கு முக்கியமாகக் காணத்தக்கது. எந்த வகையானாலும் பெண்ணின் காதலென்பது ஒழுக்கக் கேடாகவும் மீறலாகவும் சமூக கட்டுமானம் இக்கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. திருமண உறவை தாண்டிய தன் காதலை-இக்காதல் உண்டாக்கி வளர்ந்த சம்பவப் பின்னணி மருதாணியின் தரப்பை நியாயம் செய்பவையாக அமைந்திருக்கின்றன-அடைய முனைவதான மருதாணியின் செயல்களில் துளியும் அச்சமோ குற்றவுணர்வோ இல்லையென்பதோடு தன் காதல் உணர்வின் உந்துதலைப் பின்பற்றி செல்லும் மருதாணி அதற்கான வசைகலையும் அடிகளையும் தாய்வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அவமானத்தையும்கூட தன் அந்தரங்க காதலோடு சேர்ந்து செயல்களாக கருதி இயல்புகாக்கிறாள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.சங்கப் பாடல்கள் தொடங்கி ஆண்டாள் வழியாக மேலை நவீன இலக்கியங்கள் வரை நாம் கண்டு வந்திருக்கும் காதல் மேலிட்ட பெண்களை ஒரு கணம் பழம் வார்ப்புகளாக தோன்றச் செய்வதான வலுவுடனும் புத்தாக்கத்துடனும் இப்பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கூறவியலும்.&lt;br /&gt;பெண்ணின் அகமன வாதைகளைப் பேசும் கதைகளாக ‘பன்னீர் மரத்தெரு’, ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ ஆகிய கதைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கதை சொல்லியாக தனது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தொலைக்காட்சி பெட்டியினால் மன சமநிலை குலையும் அகிலாவைப் பற்றி ‘பன்னீர் மரத்தெரு’ மனதோடு ஒன்றிய இயல்பான விசயங்களை துறந்து நவீன வாழ்வின் அர்த்தமற்ற ஜோடனைகளுக்கு தம்மை ஒப்புக் கொடுக்க முடியாதவர்களது- அதுவும் பன்னீர் பூக்களையும்,குழந்தைக் கதைகளையும் நேசிக்கும் தனிமை பீடித்த ஒரு பெண்ணின்- அகத்துயரம் பற்றியது. பெண்ணின் வாதைகள் கட்டமைக்கப்படும்விதம் ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ கதையில் சொல்லப்படுகிறது. கணவனது சுயநலத்துக்காக கவிதா திட்டமிட்டே பைத்தியமாக சித்தரிக்கப்படுகையில் உறவும்,சமூகமும்,நமது மருத்துவ முறைகளும் உதவி செய்ய அவள் நிஜமான பைத்திய நிலையைத் தொடர்கிறாள். சிறுநகரத்து மனநல மருத்துமனையில் தன்னைவிடவும் மோசமான நிலையில் காணப்படும் பெண்களை கண்டு பரிதாபப்படுபவளாக இருக்கும் கவிதா அவள் கணவனுக்கு வெறும் போக வஸ்து. தனது கள்ள உறவை கண்டு பிடித்துவிடும் அவளை பைத்திய பட்டமும் கட்டி பழி தீர்க்கிறான் கணவன். மாமியாரோ அவள் குழந்தையை அவளிடமிருந்தும் பறிக்கத் தீர்மானம் கொண்டவளாகயிருக்கிறாள். கவிதாவின் சித்தி கூட இரக்கப்படுவதைத்தாண்டி அவளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவ்வாறு எல்லாராலும் கைவிடப்பட்ட தனிமையின் பெருதுயர் சூழ அவள் நிஜமாகவே பைத்தியமாகிறாள். பெண்ணானவள் தனிமை, துயர் ஆகிய எந்தரக்கற்கள் கழுத்தில் கட்டப்பட்டு மாயும் யதார்த்த உலகின் ஒரு சிறு கீற்றாக இக்கதை பதிவு பெறுகிறது.&lt;br /&gt;‘சூது நகரம்’, ’கழிவரை காதல் பிரதி’ கதைகள் நகர்சார்ந்த வாழ்வின் பின்னணியில் விளிம்பு மக்களை பேசும் வகையில் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டிய கதைகள். இரு கதைகளுமே ஒருவித இணைக்கோட்டு தன்மையான விவரிப்பனை உத்தியாக கொண்டிருப்பவை. நகரத்தின் இரக்கமற்ற முகமும் சூதுவாதற்று எவரையும் நம்பும் எளியவர்களை அது தன் சூழலுக்குள் சிக்க வைத்து கபளீகரம் செய்து விடுதலும் ’சூது நகரம்’ கதை. நகரத்தின் பெரு விரிவில் தமது முகங்களை மறைத்து ஆடும் கண்ணாமூச்சியின் முடிவில் நிஜம் தெரிய வரும்போது ஏற்படும் ஏமாற்றம் ‘கழிவரை காதல் பிரதி’ இரு கதைகளுமே ஒருவித நம்பிக்கை வறண்ட எதிர்மறையான தொனியில் புனையப்பட்டிருக்கின்றன என்ற போதும் நகர் சார்ந்த புறச்சித்தரிப்புகளும் கதை மாந்தர்களது சித்தரிப்பும் கதைகளை ரசிப்புக்கு உகந்ததாக்குகின்றன. ‘தரை தேடிப் பறத்தல்’ சுதந்திரம் என்னும் கருத்துருவாக்கத்தை வழமைக்கு மாறான பின்னோக்கிய உருவகமாக பறந்து கொண்டிருக்கும் பறவை தரையைக் கண்டுவிடுவதை ஏக்கமாக கொண்டிருப்பதாக புனைந்திருப்பது புதுமையானது. கருஞ்சிவப்பு,வெள்ளை,மஞ்சள்,நீல பறவைகள் வழியாக இக்கதை விரிவு பெறுகிறது.’வாழ்க்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல. அது பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு. கூடு கட்டப் பழகு. பறவையாய் வாழப் பழகு’ நீலப் பறவை வெள்ளைப் பறவைக்கு அறிவுறுத்துகிறது. குறியீடானாலும் கதையின் பெண்ணிய பார்வை தீர்க்கமாக புலப்படும் வகையிலமைந்தகதை இது. ‘நதியில் மிதக்கும் கானல்’ கதை பெண்ணின் காதல் துயர் பற்றியதாக இருந்தபோதும் ‘காட்டின் பெருங்கனவு’ கதையினை போலின்றி கழிவிரக்கமும் புலம்பலுமான சோகமுமாக நிறைவடைகிறது. அங்கதம்  தேர்ந்த புனைக் கதை எழுத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.’பீத்தோவனும் கலைந்த காதலும்’ அங்கதத்தின் பாற்பட்ட எளிமையான, அடங்கிய அங்கதம் அமைந்த கதை.&lt;br /&gt;பெண்ணிய நோக்கிலான புனைவெழுத்தினை சமரசமற்ற பாத்திர உருவாக்கங்களினால் புதிய தளங்களை நோக்கி நகர்த்தும் சந்திரா தீர்க்கமான பின்னல்களுடன் கதையை கட்டமைப்பதிலும் சரளமாக அதை சொல்லிப் போவதிலும் தனக்கிருக்கும் தேர்ச்சியை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். கதை மொழிக்கு கூர்மையளிப்பது தனது கதை புலன்களை வாழ்வு குறித்த பலவித பார்வைகளுக்குமாக விஸ்தரித்துக் கொள்வது போன்றவற்றால் இன்னும் சிறப்பான கதைகளை அவர் எழுத முடியும். அந்த நம்பிக்கையினை இந்த தொகுப்பு குறைவில்லாது வழங்குவதாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;’காட்டின் பெருங்கனவு’- சிறுகதைகள்(2009).ஆசிரியர்:சந்திரா,வெளியீடு:உயிர் எழுத்து பதிப்பகம்.9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,கரு மண்டபம்,திருச்சி 620 001.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:கல்குதிரை &lt;br /&gt;வேனிற் காலங்களின் இதழ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-6357006116100747026?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/6357006116100747026/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=6357006116100747026&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6357006116100747026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6357006116100747026'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/05/blog-post_19.html' title='தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி                                                  _ அசதா'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-X_jjby1Iz8I/TdXuxi2-OGI/AAAAAAAAAWo/xRLtAo2bEok/s72-c/6532_1087071548123_1566456284_30193017_2796329_n.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-1536348580636470187</id><published>2011-05-05T00:47:00.001-07:00</published><updated>2011-05-05T00:57:53.588-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபக பதிவு'/><title type='text'>கார்ல் மார்க்ஸும் என் குடும்பப் புகைப்படமும்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-aknygQSn-_0/TcJX7wcpmSI/AAAAAAAAAWg/4WaGv56ImHo/s1600/1%2B%2B%2B15.12%2B%2B%2B1copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://1.bp.blogspot.com/-aknygQSn-_0/TcJX7wcpmSI/AAAAAAAAAWg/4WaGv56ImHo/s320/1%2B%2B%2B15.12%2B%2B%2B1copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603137570531285282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-dCls1ugIuRg/TcJXqqyHUfI/AAAAAAAAAWY/hwMZ9_jzmDM/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 194px; height: 259px;" src="http://2.bp.blogspot.com/-dCls1ugIuRg/TcJXqqyHUfI/AAAAAAAAAWY/hwMZ9_jzmDM/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603137276952924658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது எப்போதும் விருப்பமானதாக இருந்தது இப்போதும் இருக்கிறது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே ’போட்டோ புடிக்கனும்’ என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருப்பேன். அம்மா, ,அப்பாவின் இளவயது புகைப்படங்கள் ஒன்றிரண்டு தவிர அக்கா, அண்ணன், என்னுடைய எந்தப் புகைப்படங்களும் வீட்டில் இல்லை. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா ஒரு சிறு வீட்டைக் கட்டினார். புது வீட்டுக்கு குடிபோவதற்கு முன் அப்பா ஒரு நாள் ’எல்லாரும் போட்டோ புடிங்க கிளம்புங்க’ என்று சொல்லி, ஊரில் அப்போது பிரபலமாக இருந்த துரை ஸ்டூடியோவுக்கு எங்களையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போனார் .  எங்களுடைய முதலும் கடைசியுமான குடும்ப படத்தை அங்கே எடுத்துக்கொண்டோம். அதற்குபின்  தனிப்பட்ட முறையில் நிறையப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோமே தவிர நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்க வாய்க்கவில்லை. அப்போதெல்லாம் புகைப்படத்திற்குச் ஃபிரேம் போடுவதற்கு முன் பாஸ்போர்ட் சைஸில் .புகைப்பட நகலைக் கொடுப்பார்கள். அதை பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்னால் பின்பு அதை கண்ணாடி போட்டு ஃபிரேம் பண்ணிக்கொடுப்பார்கள். அந்த அளவிற்கு புகைப்படம் என்பது அரிதான ஒன்றாக இருந்தது. நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருந்த குடும்பப் படம் மற்றும் அம்மா அப்பா தனியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இதோடு சேர்த்து இன்னும் மிகப்பெரிய அளவில் இருந்த ஃபிரேம் செய்யப்பட்ட ஐந்து புகைப்படங்களையும் கொண்டு வந்தார் அப்பா. அதிலிருந்த யாரையும் எனக்குத் தெரியவில்லை. எல்லாம் தனித் தனி ஆண்களின் புகைப்படம். அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருந்தது. ’இப்படி பணத்தை தண்டமா செலவு பண்ணுவாங்களா?இவங்கெல்லாம் வீட்ல மாட்டி வச்சா சோறு தானா கிடைக்குமா’ என்று ஏகமாறி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. ’உனக்கெல்லாம் என்ன கூறு இருக்கு. இவகெல்லாம் எம்புட்டு பெரிய தலைவர்கள்னு உனக்கு தெரியுமா?. எம்புட்டு மக்களை காப்பாத்தியிருக்காங்க தெரியுமா?  என்று பதிலுக்கு அப்பா சொல்ல ’சம்பாதிக்கிறதெல்லாம் இப்படியே செலவு பண்ணினா நடுத்தெருவிலதான் நிக்கனும்’ என்று சொல்லிவிட்டு ’இனி சொல்லி ஆகப்போறது ஒன்னும் இல்லனு’ அம்மா  அமைதியாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவர்கள் யார் என்ற கேள்வியை நான் ஆர்வத்தோடு கேட்க பசி, புரட்சி,சோசலிசம்,பணக்காரன்,ஏழை,விவசாயி என்று வார்த்தைகள் வருமாறு அப்பா ஏதோ சொல்லிவிட்டு எல்லா புகைப்படங்களையும் சுவரில் மாட்டினார். மிகப்பெரிய தாடியோடு இருந்தவரின் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பெயரைக் கேட்டேன் காரல் மார்க்ஸ் என்றார் அப்பா. எங்க வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய புகைப்படம் அதுதான். பின்பு இரவு நேரங்களில் அந்தப் புகைப்படங்களைக் காட்டி அப்பாவிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படி கேட்ட நாள்களில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஸ்ட்ராஸ்கி, ஜீவானந்தம் இவர்கள்தான் புகைப்படத்தில் இருப்பவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெயர்கள் எனக்கு பழக்கப்பட்ட பெயர்களாக இருந்தன. ஆம் என் அண்ணனுக்கு லெனின் என்று பெயர் வைத்திருந்தார் அப்பா. அதேபோல் உறவினர்கள் பலருக்கும் மார்க்ஸ்,ஸ்டாலின்,ட்ராஸ்கி,ஜீவானந்தம் என்ற பெயர்கள்தான் சூடப்பட்டிருந்தன. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய புரட்சி, கம்யூனிசம் பற்றி அப்பா சொல்வது லேசாக புரிந்தது. அப்பா கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர் கிடையாது. அடிப்படை அளவிலேயே தெரிந்து வைத்திருந்தார். கட்சி வகுப்பில், அலுவலகத்தில் பேசியவற்றை தெரிந்துகொண்டு அதையே எனக்கும் சொன்னார். அவர் பேச்சின் மூலம் ஏற்றத்தாழ்வு, அதிகாரம் இந்த இரண்டுக்கும் எதிரான மனநிலையை என்னால் சிறுவயதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மற்ற என் தோழிகளைவிட சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அடிப்படையாக இருந்ததும் அதுவே. அது ஒட்டுமொத்தமான புரிதல் அல்ல. ஆனால் மற்ற பெண் பிள்ளைகளிலிருந்து மாறுபட்டு யோசித்துக்கொண்டிருந்தேன்.  எங்கேயோ கிராமத்தில் அடையாளமற்று இருந்திருக்க வேண்டிய என்னை மாற்றியதும் அதுதான்.அப்பா கிராமத்து வீட்டைவிட்டு சென்னைக்கு என்னுடன் வந்ததும், வீட்டை ஒழுங்க செய்கிறேன் என்று அண்ணன் வீட்டில் இருந்த மார்க்ஸ்,லெனின் படங்களோடு எங்கள் குடும்ப படத்தையும் சேர்த்து அப்புறப்படுத்திவிட்டது. எங்கள் வீட்டுச் சுவர்களில் உறவினர்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பற்றிய வரலாற்றை,புரட்சியை என் அண்ணன் குழந்தைகள் மற்றும் என்னுடைய குழந்தைகள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அப்பாவைப்போல் அவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கும் ஆர்வமும் இல்லை எனக்கு. புகைப்படம் இருந்திருந்தால் அவர்கள் யார் என்று குழந்தைகள் தானே கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள்.  இப்போது வம்படியாக அவர்களை அழைத்து கம்யூனிசம் புரட்சி என்று பேச ஆரம்பித்தால் அழுதுகொண்டு ஓடிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மறைந்துபோன புகைப்படக் கதைகளைப்  பற்றிச் சொல்வதா? வேண்டாமா?  அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தானாக தெரிந்து கொள்ளட்டுமா? என்று யோசித்தே எதையும் சொல்லாமல் இருக்கிறேன். நான் தெரிந்து கொண்ட அடிப்படை விசயங்களைக்கூட காலம் பலமடங்கு முன்னேறியும் அவர்கள் தெரிந்த கொள்ளாமல் இருப்பது வருத்தம்தான். ஐந்தாம் வகுப்புகூட படிக்காத என் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தைக்கூட நான் என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் இருப்பது குற்ற உணர்வாகத்தான் இருக்கிறது. இப்போது அப்பாவும் இல்லை அவர்களுக்குச் சொல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-1536348580636470187?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/1536348580636470187/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=1536348580636470187&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1536348580636470187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1536348580636470187'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/05/blog-post.html' title='கார்ல் மார்க்ஸும் என் குடும்பப் புகைப்படமும்.'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-aknygQSn-_0/TcJX7wcpmSI/AAAAAAAAAWg/4WaGv56ImHo/s72-c/1%2B%2B%2B15.12%2B%2B%2B1copy.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8883529861954118451</id><published>2011-03-18T09:18:00.000-07:00</published><updated>2011-03-18T09:53:30.570-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்கதை'/><title type='text'>இசைபடவும் ஒளிபடவும்  வாழ்தல்</title><content type='html'>பின்னிரவு மழைக்கால வாசனையையும் கோடை மழையின் கொண்டாட்டமும் மறையாத ஊரை ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கிறது வெப்பத்தை வன்மமாக்கி கரைத்தூற்றும் இப்பெருநகர். மூர்க்கமாக அடித்துத் துரத்தும் பால்ய சிநேகிதர்களையும், என்றோ சாணம் தெளித்த தெருவுகள் இன்று சிமெண்ட்டுகளாகி உருவழிந்த தெருக்களில் ஏதேச்சையாக சந்திக்கையில் முகத்தை மறைத்துக்கொண்டோ அல்லது தன் செயலுக்காக வெட்கப்பட்டுக்கொண்டோ லேசான சிரிப்புடன் கடந்து செல்கையில் அவர்கள் அடித்த ரணம் சிவக்க குறுகுறுக்கிறேன் சந்தோசமாக. என் புழுதி படிந்த சாலையில் மாடுகளை கண்டு பயந்து விலகி நடந்து போன காலம் கண்ணிமைகளில் உயிர் பிடித்து வைத்திருக்கிறது பழந்தெருஞ் சாலையின் சாயலை கொஞ்சமாவது கொண்டிருக்கும் தெரு. தட்டான்கள் பறந்துகொண்டிருக்கும் பொன்வண்டும் மின்மினிப் பூச்சியும் தன்னியல்பில் மின்னிக்கொண்டிருக்கும். என் வருகையை ஒரு நாளும் அவை வெறுப்பதும் இல்லை எனக்காக காத்திருப்பதும் இல்லை. அன்பு இழையோட என்னை  கிறுக்கு பிடிக்கச் செய்வதும் இல்லை. தனக்கான ஒளியோடும் பாடலோடும் இசைந்து எவற்றின் கட்டளைக்கும் காத்திராது  இசைபடவும் ஒளிபடவும் வழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் ஜனத்திரள் காட்டில் எப்போது மௌனம் வன்மம் துரோகம் விளைவிக்கும் கண்களை கண்டு கண்டு என்னுள் சேர்ந்திருக்கிறது ஓராயிரம் கரு வலி. தேரோடும் வீதியில் கைகோர்த்து நடப்பதே வாழ்வின் தீராத ருசியைப் போக்கும் நிலையும் காலாவதியாகிவிட்ட நிலையில் தட்டான்களின் ரீங்காரத்தின் மெல்லிய இசையை ஆன்மாவில் கரைத்து ஆற்றங்கரையில் பறக்கும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களை ஒளியாக்கி கண்களில் நிரப்பி இசைபடவும் ஒளிபடவும் வாழலாம் இனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8883529861954118451?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8883529861954118451/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8883529861954118451&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8883529861954118451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8883529861954118451'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/03/blog-post_18.html' title='இசைபடவும் ஒளிபடவும்  வாழ்தல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-3197997413394754607</id><published>2011-03-17T11:03:00.000-07:00</published><updated>2011-03-17T11:05:07.512-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை</title><content type='html'>நீங்கள் அந்த தற்கொலையை ரசிக்காமல் இருக்க முடியாது.&lt;br /&gt;இதயத்தை பிடுங்கி எறிவதைப் போன்ற அல்லது &lt;br /&gt;உங்கள் அழகியலை தூண்டக்கூடிய சாவகாசமான ,&lt;br /&gt;உங்களை எந்த குற்ற உண்ர்விலும் ஆழ்த்தாத&lt;br /&gt;அழகான தற்கொலை  அது &lt;br /&gt;ஆம்&lt;br /&gt;இளம் சிவப்பும் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் சூழ்ந்த அழகான அந்திச் சாயலில்&lt;br /&gt;வண்ணங்களை உள்ளிழுத்து பயிர்பருத்த கோதுமை வயலில் &lt;br /&gt;எல்லையற்ற நீண்ட சமவெளியில் நடுவில் ஓடும் &lt;br /&gt;மனிதர்களற்ற நீண்ட ரயில்பாதை.&lt;br /&gt;வான்கோ தன் ஓவியத்தில் வரைந்திருக்கலாம் &lt;br /&gt;அல்லது அதன் தோல்வியை கண்டிருந்திருக்கலாம்&lt;br /&gt;ஏகாந்தத்தில் மிதந்த பெண் ஒருத்தி &lt;br /&gt;திறந்த ரயில் கதவின் கம்பிகளை பிடித்தவாறு&lt;br /&gt;இயற்கையின் அத்தனை அழகியலும் கண்டு திருப்பியுற்றபின்&lt;br /&gt;காற்றின் மிதக்கும் அவள் ஆன்மா நிறைவடைந்த கணத்தில்&lt;br /&gt;அத்தனை அழகியலை பூரணமடையச் செய்ய &lt;br /&gt;அவளிடம் இருப்பது ஒரே வழிதான்&lt;br /&gt;வெள்ளை வண்ண உடையில் &lt;br /&gt;இதுவரை யாருமே அடைய முடியாத அழகான கோணத்தில்&lt;br /&gt;ஒரு பறவையைப்போல் பறந்து &lt;br /&gt;கோதுமை வயலில் உடல்பரப்பி வீழ்ந்து கிடப்பது&lt;br /&gt;அது உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாத வரைபடம் &lt;br /&gt;என்பதில் வியப்பில்லை &lt;br /&gt;ஆனால் எவராலும் வரையப்பட முடியாதது&lt;br /&gt;அப்படியே முனைந்தாலும் &lt;br /&gt;அந்த இளம் வெள்ளை உடைக்காரியின் பறவையின் உடல்&lt;br /&gt;தூரிகையில் மிதந்துகொண்டிருக்குமே தவிர&lt;br /&gt;உங்கள் ஓவியங்களில் அரூபமாக மட்டுமே &lt;br /&gt;ஒளிந்துகிடக்கும் &lt;br /&gt;என் கவலையெல்லாம் &lt;br /&gt;அந்த அழகான தற்கொலையை உங்களால்&lt;br /&gt;ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியாதது என்பதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-3197997413394754607?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/3197997413394754607/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=3197997413394754607&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/3197997413394754607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/3197997413394754607'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/03/blog-post_17.html' title='ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-3471070256919958508</id><published>2011-03-13T00:33:00.000-08:00</published><updated>2011-03-13T00:39:05.674-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டி கதை'/><title type='text'>தற்கொலைக்கு முன்னான அழகிய நிகழ்வு</title><content type='html'>வெயில் சாலையின் ஒரத்தில் படர்திருக்கும் நந்தியா வெட்டை செடியிலிருந்து கல்யாண்ஜியின் ஞாபகத்தோடு ஒரு பூவை மட்டும் பறித்து கவிதை முகமற்ற தோரணையில் பேருந்து நிலையத்தில் வெயில் முகத்தோடு காத்திருக்கையில் உங்களில் கையிலிருக்கும் பூவிற்காக ஒருவன் சிரிக்கும் போது அவனிடம் ரகசிய அன்பினை கொள்வீர்கள். பேரூந்து ஏறும் அவசரத்தில் நந்தியா வெட்டை எங்கேயோ விழுந்துவிட்டதுகூட தெரியாமல் அந்த சிரித்தவனின் ஞாபகத்தோடவே பேரூந்தில் ஏறிக்கொள்வீர்கள். அங்கு உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நந்தியாவட்டையின் அதிர்ஷ்டம்தான். தழும்பி கிடக்கும்  மஞ்சள் வெயிலில் உங்கள் படர்ந்து மினுமினுக்கும் கூந்தலை முன்றடி தள்ளியிருந்து ரசிக்கும் ஒருவனை ரகசியமா காதல் கொள்வீர்கள். இறங்கும் தருணத்தில் இளையராஜா பாடலைப் பாடிச் செல்பவனை பிந்தொடர்ந்து செல்ல விரும்புவீர்கள்.யாருமே உங்களை கவனிக்காத பேரூந்து பொழுதில் பெரும் துயரம் கொள்வீர்கள். பேரூந்திலிருந்து இறங்கி உங்கள் தெருவில் நடந்துவரும் தருவாயில் காற்றில் பொன்னிறத்தில் மிதக்கும் உங்கள் கூந்தல் குறித்து நீங்களே பெருமை கொள்வீர்கள். அதை ரசிக்க ஒருவரும் இல்லாமல் போகும்போது சரியாக உங்கள் வீட்டின் கதவை திறக்கும் குழந்தையை உதட்டில் நீங்கள் இதுவரை எவருக்குமே அளித்திடாத ஆழ்ந்த முத்தத்தை கொடுப்பீர்கள். பின் உங்கள் அறையில் நுழைந்து  அன்றைய சந்தோச ஞாபகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையையும் எடுத்து விழுங்குவீர்கள். பின் போர்வையால் இறுக்க மூடி படுத்துக்கொள்வீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-3471070256919958508?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/3471070256919958508/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=3471070256919958508&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/3471070256919958508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/3471070256919958508'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/03/blog-post_13.html' title='தற்கொலைக்கு முன்னான அழகிய நிகழ்வு'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7290250446127500334</id><published>2011-03-09T22:15:00.000-08:00</published><updated>2011-03-09T22:18:01.376-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வெற்று வெளி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-JtBPt13nRLg/TXhsqdzN6KI/AAAAAAAAAWA/RYXcYOQHPFM/s1600/women%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-JtBPt13nRLg/TXhsqdzN6KI/AAAAAAAAAWA/RYXcYOQHPFM/s320/women%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582331214935484578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளம் மஞ்சள் மாலையில்&lt;br /&gt;பறவையைப்போல் திக்கற்று பறக்கலாம்&lt;br /&gt;மாலை கருகும் நேரத்தில்&lt;br /&gt;அடையாளமற்ற கூட்டில்&lt;br /&gt;முழுஇருளின் கறுமையில் கரையலாம்&lt;br /&gt;...இருண்மையின் தனிமை அன்றைய&lt;br /&gt;பித்துநிலையை சமன்செய்யும்&lt;br /&gt;விடியும்&lt;br /&gt;மீண்டும் பித்துக்கொள்ளலாம்&lt;br /&gt;மீண்டும் சமனடையலாம்&lt;br /&gt;பித்து சமன்&lt;br /&gt;வாழ்வின் இருபோக்கு&lt;br /&gt;இதுதவிர்த்து சுவாரஸ்யமற்றே இருக்கிறது&lt;br /&gt;வெற்று வெளி.&lt;br /&gt;&lt;br /&gt;(ஸ்ரீநேசனின் ’ஒரு மலையின் மாலை’ பாதிப்பிலிருந்து உருவான கவிதை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7290250446127500334?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7290250446127500334/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7290250446127500334&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7290250446127500334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7290250446127500334'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/03/blog-post.html' title='வெற்று வெளி'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-JtBPt13nRLg/TXhsqdzN6KI/AAAAAAAAAWA/RYXcYOQHPFM/s72-c/women%2B1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7496348049191934345</id><published>2011-01-23T08:06:00.001-08:00</published><updated>2011-01-23T08:33:51.355-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தொலைவதுதான் புனிதம் ....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TTxYX9cED7I/AAAAAAAAAV0/8_9FnuObCuE/s1600/face-of-unrequited-love-02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 232px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TTxYX9cED7I/AAAAAAAAAV0/8_9FnuObCuE/s320/face-of-unrequited-love-02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565420408175595442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;-சந்திரா- &lt;br /&gt;பாண்டிச்சேரியில் மதுபானம் மற்றும் நடன வசதி கொண்ட நட்சத்திர ஹோட்டலில் நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அன்றைய செலவில் ஐந்து பைசாவைக் கூட நான் கொடுக்கப் போவதில்லை. நண்பர்கள் அப்படி என்னிடம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்கள் எல்லோரும் என் கல்லூரி நண்பர்கள். என்றாவது ஒரு சனிக்கிழமை ‘மச்சி இன்னைக்கு ஈவினிங் பார்ட்டிடா’ என்பார்கள். முன்பெல்லாம் அவர்கள் அப்படி அழைக்கும்போது மறுப்பேதும் சொல்லாமல் ஓடிவிடுவேன். ஆனால் இப்போதுதான் நான் சினிமாவில் உதவி இயக்குனாராக வேலைக்கு சேர்ந்திருப்பதால் என்னால் முன்பு மாதிரி கூப்பிட்டவுடன் ஓடிவிட முடியாது. நான் வேலைக்குச் சேர்ந்திருக்கும் புதுமுக இயக்குனர் எப்போது அழைப்பார் எப்போது விடுவார் என்றே தெரியாது. நண்பர் ஒருவர் அவரிடம் அறிமுகபடுத்திவைத்து வேலைக்குச் சேர்த்துவிட்டார். என்னுடைய விஷுவல் கம்யூனிகேசன் படிப்பும் ஸ்டைலான ஆங்கிலமும், அவரிடமே சிகரெட் வாங்கி புகைப்பிடித்த பாசாங்கற்ற குணமும் பிடித்துப்போனதாக இயக்குனர் என் நண்பரிடம் சொல்லி இருக்கிறார். என்னுடைய இதே குணத்தால் ஒரு பெரிய இயக்குனர் என்னை வேலைக்கு சேர்க்க முடியாது என்று சொன்னது தனிக்கதை. இத்தனைக்கும் அவரிடம் நான் சிகரெட் கூட கேட்கவில்லை. அந்த பெரிய இயக்குனர் ஆபிஸுக்கு இரண்டு மூன்று தடவை போனேன். அப்போதெல்லாம் அவர் அலுவலகத்தில் இல்லை. முதல் தடவை போனபோது ஆபிஸ் பாய் அடிக்காத குறையாய் அவர் இல்லை என்று கடுமையான முகத்தோடு பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்திவிட்டான். முதலில் எனக்கு ‘இதென்னடா நான்சென்ஸ்’ என்று எரிச்சலாகவும் அசூசையாகவும் இருந்தது. எனக்கு இயக்குனராக ஆசை. அதற்கு பெரிய இயக்குனரிடம் வேலை பார்த்தால்தான் சாத்தியம் என்பதால் வேலை தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் பேசியதால் சில இடங்களில் வேலை இல்லை என்பதை மரியாதையாகச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள். சில இடங்களில் மெடிக்கல் ரெப்பை பார்ப்பதுபோல் விநோதமாக பார்த்தார்கள். ஆகமொத்தம் வாய்ப்பு இல்லை. விண்ணப்பம் போடாமல் வாசலில் கதியே என்று கிடந்து வேலை தேடுவது சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பின்பு சினிமாவில் இருக்கும் சில நண்பர்கள் “இப்படி போய் அவங்ககிட்ட ஆங்கிலத்தில பேசுனா எப்படி வேலை குடுப்பாங்க.இங்கே பாதி இயக்குனருக்கு ஆங்கிலம் தெரியாது. அவஅவன் நல்ல சட்டை போட்டுட்டு போயே வேலை தேடமாட்டான். நீயி என்னாடானா ஜீன்ஸ்,ஸ்டைலான டீ.சர்ட்,ஷு, ஆங்கிலம் இப்படி போய் நின்னா எப்படி வேலை தருவான். அதனால என்ன பண்ற ஆங்கிலத்தை குப்பையில போடு, சாதாரண செக்டு சர்ட் ஒரு அழுக்கு ஜீன்ஸ் போட்டுக்க, ரெண்டு நாளா சாப்பிடாதவன் மாதிரி முகத்தை வச்சுட்டு வேலையத் தேடு’ என்றார்கள். அவர்கள் ஆலோசனைப்படியே நடந்தேன். தேவை இருந்தால் மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தடவையாக அந்த பெரிய இயக்குனரை பார்க்கப்போனேன். அவருடைய அப்பா இருந்தார். “ஐய்யா வெளியே போயிருக்காங்க. ஐய்யா நாளைக்குதான் வருவாங்க. ஐய்யாவை நாளைக்கு பார்க்கலாம்”. எத்தனை ஐய்யா! அப்பதான் மற்றவர்களுக்கும் மகன் மேல் மரியாதை வரும் என்பதால் அப்படி அழைக்கிறாராம். மூன்றாவது தடவை போனபோது அந்த பெரிய இயக்குனர் வரவேற்பரையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் இயக்குனர்கள் இப்படி இயல்பாக உலாத்துவதும் உண்டு. என் அதிர்ஷ்டம் அவரை வெகு சீக்கிரம் பார்த்துவிட்டேன். வணக்கம் சொன்னவுடனே ‘என்ன’ என்றார் மிகப்பெரிய அதிகாரத் தோரணையில். நான் விசயத்தை சொன்னதும் ‘என்ன படிச்சிருக்க’ என்றார்.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழிறங்கி பவ்யமாக(எல்லாம் நண்பர்களின் டிரெயினிங்) விஷுவல் கம்யூனிகேசன் என்றேன். அவர் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப்போது அவர் முகம் மிகவும் கோரமாக இருந்தது. ‘இலக்கியத்தில என்ன படிச்சிருக்க’ என்றார். இலக்கியங்கிற வார்த்தையை தவிர எனக்கு ஒன்னும் தெரியாது. கொஞ்சம் நேரம் கேனப்பயல் மாதிரி முழித்துவிட்டு, ‘நிறைய வெளிநாட்டுப்படம் ஆங்கிலப்படம் பார்ப்பேன் சார்’ என்றேன் சிறிது நம்பிக்கையுடன். அப்புறம் அவர் ஆரம்பித்தார் ‘யோவ் உங்கள மாதிரி ஆட்கள் சினிமாவுக்கு வர்றதாலதாயா சினிமா கெட்டு கெடக்கு. ஆங்கிலப்படத்தை உருவி அப்படியே படம் எடுக்கிறது. ஒரு படம் வேலை செஞ்சதும் பெரிய நடிகனுக்கு கதை சொல்லி மசாலா படம் எடுக்கிறது. சினிமாவை வணிகமாக்கி கெடுத்திட்டாங்க. அந்த வரிசையில நீயூம் சேரப்போறியா. போ போ..போய் ஜெயகாந்தன்,புதுமைபித்தன்,சுந்தரராமசாமி,கோணங்கி இவங்களெல்லாம் படி அப்புறம் உதவி இயக்குனர் வேலை தேடு’. “அடப்பாவிங்களா கவுத்துபுட்டாங்களே விஷுவல் கம்யூனிகேசன் படிச்சா ஈஸியா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்கே.அப்ப இவங்களெல்லாம் படிக்கனுமா” என்று எனக்கு அலுப்பாகிவிட்டது. அப்புறம் கொஞ்சநாள் புதுமைபித்தனோடும், சுந்தரராமசாமியோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“பார்ட்டி,கேர்ள் ப்ரண்ட்ஸ், ஜாலியான சினிமா, கிதாருன்னு சுத்திக்கொண்டிருந்தவன். பனி படர்ந்த பாரிஸ் வீதியிலே பாக்கெட்டுல கையைவிட்டுட்டு ஏகாந்தமாக நடந்து போற மாதிரி கனவு கண்டேனே எல்லாம் கனவாகவே போய்விடுமோ. கேன்ஸ், பெர்லின் திரைப்படவிழாவுக்கெல்லாம் போக முடியாதோ” என்ற பயத்தில் மூலையில் உட்கார்ந்து பரிட்சைக்கு படிப்பதுபோல் இலக்கியம் படித்தேன். அந்த நாள்களில் சில நேரங்களில் தமிழ் படிக்கும் மாணவனைப்போல என்னை உணர்வேன். ஆனால் ஒரு விசயம் அதிசயமாக நடந்தது. சில எழுத்தாளர்கள், புத்தங்கள் நிஜமாகவே எனக்கு பிடித்து போய்விட்டன. ஜி.நாகராஜன், கோபி கிருஷ்ணன் படித்துவிட்டு கொஞ்சநாள் பைத்தியமாக சுத்தினேன். கோபி கிருஷ்ணன் இறந்து போனது, வாழ்வில் அவருடைய வறுமை, மனப்பிறழ்வு இதையெல்லாம் கேள்விபட்டதும் இன்னும் அவர் நெருக்கமாகிவிட்டார். ஆல்பர் காம்யூவில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். எப்போதாவது தலைதூக்கும் குற்ற உணர்ச்சி அந்நியனை படித்ததும் விலகியது. அப்படியே ஏதாவது கதை கிடைத்து ஸ்கிரிப்ட் எழுதிவிடலாம் என்றதால் மனம் போன போக்கில் குற்றங்களுக்கான பின்னணியை ஆராயத் தொடங்கினேன். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கைகூடாது என்பதால் மீண்டும் படம் பார்ப்பது,புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்தினேன். புத்தங்கள் எனக்கு வேறொரு வாழ்க்கையை தெரியபடுத்திக்கொண்டிருந்தன. படிப்பதை மிக முக்கியமான வேலையைச் செய்வதைப் போல் உணர்ந்தேன். எனக்குள் இருந்த நவீன நாகரீகப்பையன் ஒழிந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்தேன். படித்து முடித்ததும் எனக்குள் அடியாழத்தில் பதுங்கிக் கிடந்த குற்ற உணர்ச்சி மேலெலும்பி வந்தது. முதலில் அது என்னவென்று தெரியவில்லை. உள்ளுக்குள்ளே உருத்திக் கொண்டே இருந்தது. இனம் காண முடியவில்லை. தூங்கவே பயபட்டேன். என்னவென்று தெரியாமலே இப்படி வேதனையாக இருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டால் நினைக்கவே பயங்கரமாக இருந்தது. கொஞ்சநாள் கடும் யோசனைக்குப்பின்னே மிகப்பிரயத்தனப்பட்டு குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொண்டு வேலையைத் தேடிக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் விசயங்களை நவினமாக படம் எடுத்த இயக்குனர் ஆபிஸுக்கு தினமும் வாய்ப்பு தேடி போய்க்கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியிலிருந்து பார்த்த அவர் என்னை மேலே வரச்சொன்னார்.  என்னைப்பற்றி அக்கறையோடு விசாரித்தார். என்னிடம் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். ‘எதில வந்தே’ என்றார். ‘பஸ்ல சார்’ என்றேன். ‘பைக் இல்லையா’ என்றார். ‘இல்ல’ என்றேன். பைக்கை வீட்டில் வைத்திருந்தேன்.அதுவும் நண்பர்களின் ஆலோசனைதான். ‘நானும் உன்னை மாதிரிதான் உதவி இயக்குனரா வேலை தேடுற காலகட்டத்தில பைசா இல்லாமத்தான் அலைஞ்சிருக்கேன். ஆனாலும் கார்ல போய்தான் வாய்ப்புத் தேடுவேன். எப்படி’ என்றார். ‘எப்படி’ என்று அவர் கேட்கும்போது குழந்தைகளிடம் மேஜிஸ்யன் கேட்பதைப்போல் முகத்தை வைத்திருந்தார்.அவர் முகபாவம் எனக்கு சிரிப்பை வரவைத்தாலும் அடக்கிக்கொண்டு. தெரியவில்லை என்பதை ஒரு புன்னகையாக வெளிப்படுத்தினேன். பின்பு அவரே சொல்ல ஆரம்பித்தார் ‘லிப்ட் கேட்டு கார்ல போய்தான் இயக்குனர்கள் ஆபிஸ் வாசல்ல இறங்குவேன்’ என்றார். “நமக்கெல்லாம் பைக்கில லிப்ட் தரமாட்டாங்க இவர் கார்ல போயிருக்கார் பெரிய விசயம்தான்” என்று நினைத்துக்கொண்டேன். ‘கெத்தா போனாதான் சினிமா காரனுங்க மதிப்பானுங்க. என்னைக்கும் என் ஸ்ர்டுல ஒரு சின்ன கசங்கல் கூட இருக்காது’ என்றார். எனக்கு உண்மையாகவே குழப்பமாகத்தான் இருந்தது. அன்றைக்கு இன்னும் அழுக்கான சட்டையும் பேண்ட்டும் தாடி வேற வைத்திருந்தேன். பரதேசி மாதிரிதான் அவருக்கு தெரிந்திருக்கும். அப்ப கண்டிப்பாக வேலை கொடுக்கமாட்டார் என்று தெரிந்தது. அவரோடு சேர்ந்து என்னைச் சாப்பிடச் சொன்னார். உண்மையாகவே நான் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர் என்னிடம் காட்டும் இரக்கத்தை துண்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை பாவம் பார்த்து வேலை கொடுக்கலாம் என்று அமைதியாக இருந்தேன். வேலை கிடைக்குமா இல்லையா என்பது மட்டும்தான் அப்போது என் கேள்வியாக இருந்தது. கடைசியாக அந்த இயக்குனர் ‘தம்பி எங்கிட்ட பத்துபேரு வேலை பார்க்கிறாங்க.இப்ப உன்னை வேலைக்கு சேக்க முடியாது அடுத்த படத்தில எவனாவது வெளியே போவான், அப்படியே கம்யூனிகேசன்லே இரு அடுத்த படத்தில சேர்த்துக்கிறேன்’ என்றவர் ஒரு உதவி இயக்குனரை அழைத்து பைக்கில் என்னை பஸ் ஸ்டாப்பில் விட்டுவரச் சொன்னார். “வானத்தில வீடு கட்டுனாலும் கட்டிலாம் ஆனால் சினிமாவில சேர முடியாது போல” என்று நினைத்துக்கொண்டு போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக இயக்குனர் உண்மையாகவே என்னிடம் திறமை இருப்பதாக நம்பினார். ஆங்கிலம், இலக்கியம், வெளிநாட்டுப் படங்கள் என்று இண்டெல்ஷுவலாகவே பேசிக்கொண்டிருப்பார். சில நேரங்களில் விதண்டவாதமாகவே எதிர்வாதம் வைத்துக்கொண்டிருப்பார். ஆனாலும் அவர் உணர்வுபூர்வமாக சில விசயங்களை அணுகியதால் அவரோடு கொஞ்சம் எனக்கு இணக்கமாக இருந்தது. மிகுந்த கடமை உணர்வோடு இரவு பகல் பாராது அவரோடு கதை டிஸ்கஸனில் இருந்தேன். அவர் ஒருநாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தார். சிகரெட் டீ மட்டும் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை. முதலில் அது எனக்கு கடினமாக இருந்தது பின்பு அவருடைய பழக்கத்திற்கு ஏற்ப பழகிக் கொண்டேன். அவரிடம் வேலை பார்த்த மற்ற உதவி இயக்குனர்களும் அப்படியே ஆகிப்போனார்கள். சில நேரங்களில் அது எனக்கு அயர்ச்சியூட்டுவதாக இருக்கும். அப்போதுதான் நண்பர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு பார்ட்டிக்கு அழைத்துப்போனார்கள்.   &lt;br /&gt;      &lt;br /&gt;அறையெங்கும் உற்சாகம் பொங்கி வழிந்தது. டி.ஜே சிரித்த முகத்துடன் இசையை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தான். ஜாக்,ராப், என்று எல்லாவற்றிலிருந்தும் உற்சாகம் பொங்கும் துள்ளல் இசையை ஒலிபரப்பச் செய்தான். இசையில் எங்கும் தொய்வு ஏற்படாமல் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அவன் பாடல்களை மாற்றிய விதத்தைப் பார்த்தபோது ஒரு இசைக்கலைஞனைப் போலவே தோன்றினான். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் நாங்கள் நான்கு பேரும் ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்தோம். தறிகெட்டு தொடர்பின்றி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. நண்பர்கள் போதையின் களிப்பை முழுவதுமாக உணர்ந்துகொண்டிருந்தார்கள்…&lt;br /&gt;நடன அரங்கில் ஆண்களும் பெண்களும் இசைக்கேற்ப பின்னிப்பிணைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். இசையில் கரைந்து வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்த பெண் லாவண்யாவைப்போல் இருந்தாள். குட்டை முடி, சின்ன டீ சர்ட், இடுப்பு தெரியும் பேண்ட் அவளாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து, நண்பர்களோடு பேச்சில் கவனம் செலுத்தினேன். இருந்தும்  ஏதோ உந்த மீண்டும் அவளைப் பார்க்கத்தொடங்கினேன். இப்போது அவள் நடன அரங்கிலிருந்து டேபிளுக்கு வந்தாள். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேருக்கு மேல் அந்த டேபிளில் இருந்தார்கள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாக என்னைப் பார்த்தவள் உற்சாகத்தோடு ஒரு பெரிய ஹாய் சொல்லி என்னருகே வந்தாள். லாவண்யாவேதான் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு மாறிபோயிருக்கிறாள். என்னால் அவளோடு இயல்பாக பேச முடியவில்லை. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு வலியை உணர்ந்துகொண்டிருந்தேன். அவள் கடகடவென்று பேசிக்கொண்டிருந்தாள். மிக சந்தோசமானப் பெண்ணைப்போலத் தோன்றினாள்.          &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போது அவளை முதல் முறையாகச் சந்தித்தேன்...சுருள் சுருளான என் முடி எப்போதும் நண்பர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. நகரத்தின் நாகரீகம், ஸ்டைல், பரப்பரப்பில் என்னை முழுமையாக்கி கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் கல்லூரியில் படிக்க நகரத்திற்கு வந்தேன். நான் பிறந்தது கிராமம் என்றாலும் அப்பா என்னை சிறுநகரத்தில் இருக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைத்தார். சிறு வயதிலிருந்த ஆங்கிலத்தின் மீதும் நகரத்தின் மீதும் நாட்டம் அதிகமாகிருந்தது. பள்ளி இறுதி நாள்களில் எல்லாம் ஊரில் இருப்பதை அபத்தமாக நினைத்தேன். அதுவும் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் ரசித்த சினிமாக்கள் இன்னும் துக்கமாக இருந்தது. ஆங்கிலப்படங்களை பார்க்க ஏங்கினேன். சென்னைக்கு வந்த புதிதில் சத்யம் சினிமா தியேட்டரில்தான் குடியாய்க் கிடந்தேன். கொஞ்ச நாள் தமிழ்படம் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. நான் படித்த கல்லூரியிலும் நாகரீக வாசம் அதிகமாக இருந்தது. பக்கத்தில் நடமாடும்  உண்மையான மனிதர்களை, உலகத்தைவிட்டு வேறொரு உலகத்தில் வாழ்ந்த காலம் அது. சனிக்கிழமையானால்  பார்ட்டி கொடிகட்டி பறந்தது. ஊரிலிருந்து படிப்பு,விடுதிக்கென்று தேவையான பணம் வந்தது. பார்ட்டி செலவுகளை பணக்கார நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். சீக்ரெட் பார்ட்டி அப்போது எங்களிடையே பிரபலமாக இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை ஈ.ஸி.ஆர் ரோடு, பாண்டிச்சேரியில் ஒரு ஃபார்ம் ஹவுஸை நண்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். அங்கே பெண் தோழிகளோடு ஆஜராகிவிடுவோம். பெண் தோழிகளும் குடிப்பார்கள். சில பெண்கள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு குடிப்பார்கள். ஆனால் யாரும் பெண்களிடம் வரம்புமீறி நடப்பதில்லை.மனம் விரும்பினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் செய்பவர்களாகவே அந்தப் பெண்கள் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில்தான் எங்கள் கல்லூரியின் இசைக்குழு நண்பர்கள் ஸ்பென்சர் ப்ளாசாவில் கே.எல் என்ற சேட்டிலைட் ரேடியோ நிறுவனத்திற்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். 4 மணியிலிருந்து 6 மணி வரை நிகச்சி நடக்கும். ஆங்கிலப்பாடல்களை எங்கள் இசைக்குழு இசைத்து பாடுவார்கள். இசையை ரசிக்க தெரியுமே தவிர எனக்கு பாடவும் தெரியாது எந்த இசைக்கருவியையும் இசைக்கத் தெரியாது. ஆனால் என்னுடைய சுருள் முடியின் ஸ்டைலுக்காக என்னை தங்கள் குழுவில் இடம்பெறச் செய்தார்கள் நண்பர்கள். என் கையில் கிதாரை கொடுத்து ‘கீழே இருக்கும் ஸ்டிங்கை மட்டும் லேசாக இழுத்துக்கொண்டிரு’ என்று சொல்லி என்னை அமரவைத்துவிட்டார்கள். நானும் பெரிய கிதார் இசைக் கலைஞனைப் போல் நாணை மீட்டிக்கொண்டிருந்தேன். கிதாரில் நான் எழுப்பும் சத்தம் மற்ற இசைக்கருவிகளுக்கு நடுவே அமுங்கிப் போய்விடும். சொல்லப்போனால் சில சமயம் என்விரல்களால் கிதாரின் நாணைத் தொடாமலே வெறும் பாவனையோடு அசைத்துக் கொண்டிருந்தேன். அங்கு நான் இசைச் கலைஞன் இல்லை. காட்சி பொருளாகத்தான் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை இசையை ஒரு நூறுபேராவது ரசித்துக்கொண்டிருப்பார்கள். அந்த சின்ன ஹால் கூட்டத்தால் நிரம்பி வழியும். கிதாரை வாசிக்கும் முழுபாவனையில் பார்வையாளர்களின் கண்களை நேரடியாகப் பார்ப்பேன். அப்படியான ஒரு பொழுதில் லாவண்யாவும் என்னைக் கூர்ந்து பார்த்ததை பார்த்துவிட்டேன். பின்பு எங்கள் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துக்கொண்டன.    &lt;br /&gt;&lt;br /&gt;அன்று நிகழ்ச்சி முடிந்ததும் லாவண்யா என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டு ஒரு சின்ன நோட்டை நீட்டினாள். நானும் மிகப்பந்தாவோடு நோட்டை வாங்கி ஆட்டோகிராஃப் போட்டேன். அதை பார்த்த நண்பர்கள் ஒரே பேய்க்கூச்சல் போட்டு கலாட்டா செய்தார்கள். லாவண்யா அந்தக் கலாட்டைவை ரசித்தபடி காதைப்பொத்திக்கொண்டு என்னிடம் பேசினாள். நான் ஸ்டைலாக இருப்பதாகச் சொல்லி நான் கிதார் வாசிப்பது பொருத்தமாக இருக்கிறது என்றாள். கட்டுப்பெட்டியாக ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து வந்திருந்த அவள் என்னை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. நண்பர்கள் மச்சான் ‘கன்னி மச்சம்டா’ என்று கூப்பாடு போட்டார்கள். அது சந்தோசமாக இருந்ததால் நானும் அந்தப் பெண்ணை ஒரு மூலையில் ஓரங்கட்டி பேச ஆரம்பித்தேன்.  அவள் ‘நீங்கள் எப்படி அவ்வளவு அழகா கிதார் வாசிகிறீங்க’ என்றதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலே எழும்பாத இசைக்கு ஒரு ரசிகை வேறு! அதுவும் என்னிடம் ‘கிதார் நல்லா வாசிக்கிறீங்க’ என்று சொன்ன முதல் ஆளு வேறு அதனால்  அவளைத் தவிர்க்க முடியாமல் “எதாவது சாப்பிடலாமா” என்றேன். சரி என்று கொஞ்சம் வெட்கத்துடனே தலையாட்டினாள். பின்பு அவளே சொன்னாள் ‘லாஸ்ட் டூ மன்த்ஸா உங்கள பார்த்திட்டிருக்கேன். பேச ஆசையா இருக்கும் ஆனால் பயத்தில விட்டுடுவேன். இன்னைக்குத்தான் கொஞ்சம் தைரியமாகி உங்ககிட்ட பேசினேன்’ என்றாள். நான் சிரித்தபடி அவளுக்கும் எனக்குமாக கோக், பீட்ஸா வாங்கினேன். அன்று சனிக்கிழமையாக இருந்ததால் இளம் பெண்களும் ஆண்களுமாக ஸ்பென்சர் நிரம்பி வழிந்தது. ஒரு மூலையில் நின்றபடி சாப்பிட்டோம். அவளைப்பற்றி விசாரித்தேன் சொந்த ஊர் சேலம் என்றாள். இங்கே விடுதியில் தங்கி,பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகச் சொன்னாள். அவள் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பமாம். அவளும் என்னைப்போல் நகரத்தின்பால் ஈர்ப்பு கொண்டுதான் இங்கே வந்திருக்கிறாள். ஆனால் தோழிகள் அவ்வளவாக இல்லை.  அவள் நகரத்தின் எல்லா அடுக்குகளையும் திறந்து பார்க்கும் ஆர்வத்தோடு இருந்தாள். கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டோம். அவள் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் அப்படியே அவளை மறந்துவிட்டேன். ஆனால் அவள் எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாள். என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள். நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன் என்று பதில் அனுப்பினேன். அடுத்த சனிக்கிழமை ஸ்பென்சரில் பார்த்ததும் ஓடிவந்து பேசினாள். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன் உற்சாகமாக கைகுலுக்கிக் கொண்டாள். அவளுள் ஒரு புத்துணர்ச்சியும் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆவலும் இருந்தது. நானும் அவளோடு நட்போடு பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பு தொடர்ந்தது. மணிக்கணக்காக என்னோடு போனில் பேச ஆரபித்தாள். சில நேரம் செல்போனில் விடிய விடிய குறுஞ்செய்திகளை பறிமாறிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தேன். அதை லாவண்யாவிடம் சொல்லவில்லை. நான் காதலிக்கும் பெண் அடக்கமான பெண். என்னோடவே அதிகம் வெளியே வரமாட்டாள். வாரத்திற்கு ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் சந்திப்போம். பின் போனில் பேசிக்கொள்வோம். அதுவும் அதிகமான உரையாடல் கிடையாது. என் காதலி அவளைப்போலவே என்னையும் அடக்கமான பையனாக நினைத்துக்கொண்டிருந்தாள். என்னுடைய பார்ட்டி கலாச்சாரமெல்லாம் அவளுக்கு தெரியாது. என் காதலியைவிட லாவண்யாவிடம்தான் அதிகமாக பேசினேன். சந்தித்தேன். ‘எப்படியெல்லாம் பேசுறே’ என்று வியந்து போய் லாவண்யா என்னைப்பார்ப்பாள். அவளை வீழ்த்தும்விதமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒரு முறை அவளிடம் ‘லேடிஸ் சைக்காலஜி சிம்பிள்’ என்றேன். ‘எப்படி?’ என்றாள் வியப்பாக. ‘உனக்கு பிடிச்ச பாட்டு, படம் சொல்லட்டுமா’  ‘சொல்லு பார்ப்போம்’ ‘உனக்கு மெளனராகம் பிடிக்கும். அதுல வர்ற கார்த்திக் கேரக்டர் ரொம்ப பிடிக்குமே’(90 சதவீதம் பெண்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று தெரியாத அப்பாவி அவள்)&lt;br /&gt;‘அய்யோ எப்படிடா’ என்று துள்ளிக்குதித்தாள். ‘மின்சாரக்கனவு படத்தில வர்ற வெண்ணிலவே பாட்டு பிடிக்குமே’   ஆமாம் என்று கண்களை விரித்து ‘சிநேகிதனே’ பாட்டை விட்டுட்டியே என்றாள். ‘அடுத்து வருவேன்ல’ என்று அந்த பாட்டு ‘the most erotic song’ என்றேன். ‘அது ரொமாண்டிக் சாங்க்தானே ஏன் எரோடிக்குனு சொல்ற’ என்றாள். ‘நைட் போய் மறுபடியும் கேட்டுட்டுச் சொல்லு அது எரோடிக்னு புரியும்’ என்றேன். ‘ஏய் இப்பவே சொல்லுடா என்றவள் என் கண்களைப்’ பார்த்தாள். நான் குறும்பாக சிரித்ததும் ‘சரி நானே கேட்டுக்கிறேன்’ என்றாள். அன்றிரவு “மலர்களில் மலர்வாய்” அந்த வரிதானே என்று குறுஞ்செய்தி அனுப்பி, உண்மையாவே எரோட்டிக்தான் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியை முடித்துவிட்டு வேலை தேடத் தொடங்கினேன். அப்போதும் அவள் என்னோடு சுற்றிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளுக்கு ஆண்நண்பர்கள் யாரும் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டாள். ‘இப்படி இருந்தா எப்படி கிடைப்பாங்க ஃபாய்ஃபிரண்ட்ஸ். ‘ஸ்டைலா மாறனும்’ என்றேன். அன்று நானும் உன்னோடு சனிக்கிழமை பார்ட்டிக்கு வாறேன் என்றாள். ‘இந்த சுடிதாரோடா?’ என்று சிரித்துவிட்டேன்.அவள் முகம் சுருங்கியது. ‘என்னைப்பார்த்தா கட்டுப்பெட்டி மாதிரியா தெரியுது’ என்றாள். ஆமாம் என்றேன். ‘என்ன செய்ய’ என்றாள் அப்பாவியாக. ‘முதல்ல நீ ட்ரெஸ் ஸ்டைலே மாத்து.மாடர்ன் டிரெஸ் போடு’ என்றேன். ‘நீயே எடுத்துக்குடுக்கிறீயா  இதுக்கு முன்னாடியே நான் அப்படியெல்லாம் டிரெஸ் வாங்கினதே இல்ல’ என்றாள். அப்போதே கடைக்குச் சென்று அவளுக்கான ஒரு முக்கால் பேண்ட்டும் டி சர்ட்டும் வாங்கினோம். அதை அங்கேயே அணிந்து கொண்டு வந்தாள். உடை மாறியதும் ஆளே மாறிப்போனாள். ‘இப்ப என்னை கூட்டிட்டு போவியா’ என்றாள் சிரித்தபடி. &lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலின் மதுபான விடுதியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்னுடைய நண்பர்களும் தோழிகளும் அங்கே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இவள் அந்த இடத்திற்கு அந்நியமானவளைப் போலவே அமர்ந்திருந்தாள் அவளின் கைகள் மட்டும் இடை தெறிந்த டீ சர்ட்டை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது. குடிக்கிறீயா என்றேன் தயக்கத்தோடு அவள் லேசான சிரிப்போடு ஒன்னும் ஆகாதா? என்றாள். இல்ல ‘கொஞ்சமா குடி’ என்றேன். ஆனால் அதிகம் வாசனை இல்லாத கசக்காத ட்ரிங் கிடைக்குமா என்றாள். ஆப்பிள் ரெட்வைன் அவளுக்கு ஆர்டர் செய்தேன்.  ஒன்னும் ஆகாதே என்றபடி முதல் சிப்பை விழுங்கினாள். அவள் முதல் சிப்பை விழுங்கிய விதம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தயக்கம் சந்தோசம் சுதந்திரம் எல்லாமே அவள் முகத்தில் தெரிந்தது. கனவு உலகத்தை எட்டிப்பார்க்கும் குழந்தையாக முதல் சிப்பை விழுங்கினாள். அவள் அந்த கசப்பை எதிர்பார்த்திருக்கமாட்டாள் போல பார்ட்டி முடியும் வரையில் ஒரு பெக்கை கையில் வைத்து குடித்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கொதேயில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் ஆடிக்கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘போய் ஆடுறியா’ என்றேன். ‘என்னது? முன் பின் தெரியாதவங்ககூட இப்படி வெட்கமில்லாமல் கட்டிப்பிடிச்சு ஆடுறதா சீ’ என்றாள். ‘சில்வியா ப்ளாத் படிச்சிருக்கியா நீ’ என்றேன் ‘யார் அவங்க’ என்றாள் அப்பாவியாக ‘அவங்க ஒரு கவிஞர் அவங்களைப்பத்தி சொல்லம்னா அரை நாள் வேணும் ஆனால் அவங்க சொன்ன ஒரு விசயத்தை சொல்றேன் கேட்டுக்க, ‘’Dance is the nearest happiness  to the intercourse’’ னு சொல்லியிருக்காங்க தெரியுமா? சோ யூ என்ஜாய் டான்ஸ்’ என்றேன். ‘யார் வேணுன்னாலும் என்ன வேணுன்னாலும் சொல்லிட்டு போகட்டும் நான் ஆடலப்பா’ என்று அமர்ந்திருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அன்று அவளிடம் மெஸ்மரிசம் பண்ணுவது மாதிரிதான் நிறைய விசயங்களைப் பேசினேன். ‘சந்தோசத்துக்காக நீ செய்யுற ஒவ்வொரு செயலும் மூளைக்குத்தான் போகும். ஆனால் இசையோடு நீ இணையும் போது சந்தோசம் இதயத்துக்கு போகும். தொலைந்து போவதுதான் புனிதம். அது இசையாகவோ, போதையாகவோ,காமமாகவோ இருக்கலாம்’. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்கு சுத்தி நடக்கிறது எதுவும் தெரியல நீமட்டும்தான் தெரியுற. எவ்வளவு அறிவா அழகா பேசுற நாள் முழுக்க உன்கூடவே இருக்கனும் அதுதான் என் ஆசை’ என்றாள்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளை பத்திரமாக விடுதியில் விட்டுவிட்டு நான் கிளம்பினேன். நான் அவள்மேல் அதிக அன்பும் அக்கறையும் வைத்திருப்பதாக மெசேஜ் அனுப்பினாள். ‘பாவம்டா அந்தப் பொண்ணு. நான் வேற பொண்ணை காதலிக்கிறேனு உண்மையை சொல்லுடா’ என்று நண்பர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள். பதிலுக்கு நான் அவர்களிடம் ‘போங்கடா நான் இல்லன்னா வேற எவனாவது அவளை கரெக்ட் பண்ணுவான். அது நானா இருந்துட்டு போறேன். போங்கடா நானென்னா அவளை ரேப் பண்ணவா பேறேன். ஜாலியா கொஞ்சநாள் அவளோட சுத்துவேன் அவ்வளவுதான்’ என்று அவர்களின் வாயை அடைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாவண்யா என்னோடு நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளைப்போல நான் அவளை விரும்பவில்லை. உண்மையில் அவள் மேல் மிகப்பெரிதான அக்கறையும் இல்லை. எல்லோரையும் போல அவளிடம் நட்பாக பழகினேன். பின்பு வந்த நாள்களில் அவளை நான் சுடிதரோடு பார்க்கவில்லை. அவள் ஸ்டைலும் உடையும் மாறிப்போனது ஆனால் உள்ளுக்குள் அன்பான பெண்ணாகவே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாட ஈ.ஸி.ஆர் ரோட்டில் பார்ம் ஹவுஸ் ஒன்றில் சீக்ரெட் பார்ட்டி ஏற்பாடானது அதைப்பற்றி அவளிடம் நான் சொல்லவில்லை. நண்பன் அவளை அழைத்திருக்கிறான். அவள் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டாள். ‘ஹோட்டல் மாதிரி இல்லை. நடுராத்திரி ஆயிடும் அங்கேயே தங்கனும் அதனாலே வேணாம்னு நினைத்தேன்’ என்றேன். ‘வேற கேர்ல்ஸ் யாரும் வரமாட்டாங்களா’ என்றாள். ‘வருவாங்க’ என்றேன் ‘அப்புறம் ஏன் என்னை மட்டும் வேணாங்கிற இன்னும் நான் உனக்கு கட்டுப்பெட்டியாவே தெரியுறேனா’ என்றாள். ‘அப்படியெல்லாம் நினைக்கல வா’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு மாதிரி இல்லை அவள் நிறைய குடிக்கப் பழகியிருந்தாள். போதை ஏறியதும் ஆளாளுக்கு அறையில் போய் ஒதுங்கிக்கொண்டார்கள். நானும் அவளும் ஒரு அறைக்குச் சென்றோம். எனக்கும் அன்று போதையில் கொஞ்சம் தலையை வலிப்பதுபோல் இருந்தது. கட்டிலில் அப்படியே விழுந்தேன். அவள் என்னருகில் வந்து படுத்தாள். பின்பு என் காதருகில் வந்து ‘டேக் மீ டா’ என்றாள். அவளை அப்படியே தலையோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். பேசாமல் படுத்திருந்தேன். திரும்பவும் ‘டேக் மீ டா’ என்றாள். ‘இங்க பாரு லாவண்யா இப்ப நீ நிறைய குடிச்சிருக்கே நானும் நிறைய குடிச்சிருக்கேன். எனக்கும் செக்ஸ் வச்சுகலான்னுதான் தோணுது. ஆனாலும் மனசுக்கு சரியாபடலை. போதை தெளிஞ்சதுக்கு அப்புறமும் இது தப்பில்லனு உனக்கு தோனுச்சுனா அதுக்கப்புறம் வச்சுக்கலாம்.இப்ப தூங்கு’ என்றேன். ‘சரி’ என்று அவள் என்னருகில் படுத்துத் தூங்கினாள். காலையில் எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தோம். அவளிடம் ‘இப்ப உனக்கு செக்ஸ் வச்சுகிட்டா தப்பில்லனு தோணுதா’ என்றேன். ‘இல்ல’ என்றாள். ‘இனிமேல் குடிச்சிட்டு இந்த மாதிரி யோசிக்காதே’ என்று சொன்னேன். அவள் மிக அன்போடு என்னைப்பார்த்தாள். அந்த பார்வையை ஒன்றிரண்டு கணங்களுக்கு மேல் சந்திக்காமல் பார்வையை விலக்கிக்கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.            &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் முக்கியமான விசயம் பேச வேண்டுமென்று நேரில் வரச்சொல்லி என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அப்படியெல்லாம் அவளிடம் பழகவில்லை என்றேன். அப்போதுதான் அவளிடம்  ஏற்கனவே நான் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். ஆனால் அவள் அதை நம்பவில்லை. ‘பொய் சொல்லாதடா என்னைப் பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லு எனக்குத் தெரியும் நீ யாரையும் காதலிக்கல. பார்ட்டிக்கு வராம டிரிங் பண்ணாம, செக்ஸ் வச்சுக்கலாம்னு உன்னைக் கூப்பிடாம இருந்திருந்தா என்னை லவ் பண்ணியிருப்பியிலே. இப்ப நான் உனக்கு கேவலமான பொண்ணாத் தெரியுறேன்ல. நான் உன்னை பார்த்த நாளிலிருந்தே உன் மேல எனக்கு க்ரஷ்தாண்டா. நான் எப்பவும் உன்னை லவ் பண்றதா நெனைச்சுட்டுதான் உன்கூட வந்தேன்’ என்றாள். எனக்கு சங்கடமாக இருந்தது. எனக்காகத்தான் எல்லாவற்றையும் செய்ததைப்போல் அவள் சொன்னாள். ஸ்டைலாக இல்லாட்டி அவளை வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்றுதான் அவள் அப்படிமாறியதாகச் சொன்னாள். அதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ‘ஐ லைக் யூ. பட் ஐ லவ் சம் அதர் கேர்ள்’ என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் நம்பாமல் மறுமடியும் மறுபடியும் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். விடாமல் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். பதிலும் அனுப்பவில்லை போனையும் எடுக்கவில்லை. அவளைச் சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டேன். ஒரு நிலைக்கு மேல் போன் நம்பரையே மாற்றிவிட்டேன். அவள் என் நண்பர்களிடம் என் போன் நம்பரைக் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறாள். என் நம்பரை அவளிடம் கொடுக்க கூடாது என்று எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். ‘ஆரம்பத்திலே சொன்னோம்லடா பாவம்டா அந்தப்பொண்ணு’ என்று நண்பர்கள் என்னைத்திட்டினார்கள். பின்பு அப்படியே அவள் தொடர்பு விட்டுப்போனது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பார்ட்டியில் சந்தித்தேன் அப்போது அவளைச்சுற்றி வேறொரு குரூப் இருந்தது. தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். என் அறைக்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராத்திரி அங்கே பார்ட்டி நடப்பதாகவும் காலையில் சந்திக்கலாம என்று சொல்லிவிட்டுப் போனாள். ராத்திரி ஒரு மணி இருக்கும் பலமான கதவு தட்டல். கதவை திறந்தால் லாவண்யா அலங்கோலமாக நின்று கொண்டிருக்கிறாள். வேகமாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். அவள் முகமெல்லாம் வீங்கித் தடித்திருந்தது, மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பார்ட்டி முடிந்ததும் கூட வந்து ஒருத்தன் அவளை செக்ஸுக்கு அழைத்திருக்கிறான். அவள் மறுத்ததும் அடித்து பலாத்காரம் செய்ய ஓடி வந்திருக்கிறாள். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய பனியன் எல்லாம் சாப்பாடெல்லாம் கொட்டி அழுக்காக இருந்தது. குடிபோதை, உடல் காயம் பார்க்க சகிக்க முடியாத கோலத்தில் இருந்தாள். எனக்கு முதல் முறையாக அந்த மாதிரியான வாழ்க்கைமுறை பிடிக்காமல் போனது. அருவருப்பாக இருந்தது. நானும் அவள் இப்படி ஆக ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறேன். அவளை கட்டிலில் படுக்க வைத்தேன். என் நண்பர்கள் கீழே படுத்துக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டல் வராண்டாவில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவன்தான் என்றாள் லாவண்யா. நான் வெளியே வந்து பார்த்தேன். அவன் ‘ஹேய் பிட்ச். ஐ வில் கேட்ச் யூ’  என்று சலம்பியபடி தேடிக்கொண்டிருந்தான். பிரச்னை வேண்டாமென்று நான் அறைக்குள் வந்துவிட்டேன். நான் தூங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பி வா கிளம்பலாம் என்றேன். பகலில் அவளை வெளியே அழைத்து போக முடியாதபடி அவள் காயம்பட்டிருந்தாள். போலீஸுக்கும் போக முடியாத சூழ்நிலை. அவள் முகத்தில் காய்ந்து போயிருந்த ரத்தக் கறையை ஈரத்துணியால் துடைத்துவிட்டேன்.அப்போதும் அவள் அரைப் போதையில் இருந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளை அங்கிருந்து காரில் அழைத்துக்கொண்டு என் நண்பர்களோடு கிளம்பினேன். நான் என் நண்பன் அவள் மூவரும் பின்னால் அமர்ந்திருந்தோம். ஒரு நண்பன் காரை ஓட்டி வந்தான். இரு நண்பர்கள் முன் சீட்டில் ஒருவர் மடியில் ஒருவர் உர்கார்ந்துவந்தார்கள். அவள் என் தோளில் சாய்ந்தபடி வந்தாள். அவளால் உட்காரக்கூட முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் தோழியிடமிருந்து போன். போதை தெளிந்து இப்போதுதான் அவளைத் தேடி இருக்கிறார்கள். அழுதபடி ராத்திரி நடந்த விசயத்தை சொல்லி “குடிச்சா எல்லாத்தையும் செஞ்சிடுவேனு அவன் நெனைச்சானாடி” என்றாள். பின்பு ஃபோனை அணைத்துவிட்டு என்னைப்பார்த்தாள். ‘ஏன் லாவண்யா இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸோட வந்தே. இந்த மாதிரி தப்பெல்லாம் இனிமேல் பண்ணாதே’ என்றேன். அவள் என்னை கூர்ந்து பார்த்தபடி ‘என் வாழ்க்கையிலேயே செஞ்ச ஒரே தப்பு உன்னை பார்த்ததுதாண்டா’ என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். நான் அமைதியாக அவள் சொன்னது பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப்போல் இருந்தேன். அவளை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துபோய் டாக்டரிடம் காட்டிவிட்டு அப்படியே விடுதிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிய அவள் செல்போனுக்கு அழைத்தால் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பலமுறை தொடர்புகொண்டும் ஃபோன் அணைக்கப்பட்டே இருந்தது. விடுதிக்குச் சென்று விசாரித்தால் அவள் ஊருக்கு சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவளை தொடர்பு கொள்ள வழியில்லாததால் அப்படியே விட்டுவிட்டேன். இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரை அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் அப்படி ஆவதற்கு நான்தான் காரணமோ என்ற குற்ற உணர்வு மட்டும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவளும் அப்படி நினைத்துதான் என் தொடர்பிலிருந்து விலகிப்போயிருக்கலாம். எங்களுக்கென்று பொதுவான நண்பர்கள் யாரும் இல்லாததால் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியமுடியவில்லை. அவள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் இருப்பாள் என்றே தோன்றியது. உயர்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். ஆனால்  இன்னொரு பக்கம் அவள் வாழ்க்கை தறிகெட்டு சீரழிந்து போயிருக்குமோ? பார்ட்டி, நண்பர்கள் என்று விடுபடமுடியாமல் போயிருப்பாளோ ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பயம். என்னுடைய ஏளனம்தான் அவளை இப்படியெல்லாம் செய்ய வைத்ததோ ஏதோதோ நினைவு அவள் பாலியல்தொழிலாளியாகக்கூட மாறியிருப்பாளோ என்று நினைத்தேன். அப்படி நினைக்கவே பயங்கரமாக இருந்தது. குற்ற உணர்ச்சி கனவில் கருமை நிறத்தில் வந்து கொன்றது. கனவில் பாசிபடிந்த கிணற்றில் வழுக்கி விழுந்து செத்தேன், மலை உச்சியிலிருந்து குதித்தேன், பாலைவனத்தில் தண்ணீரில்லாமல் காய்ந்து வெப்பத்தில் உயிர் பிரிந்தது. எல்லாக் கனவிலும் நான் செத்துக்கொண்டே இருந்தேன். ஒன்றும் இல்லை அவள் என்னோடு பேசக்கூட வேண்டாம்.  நல்லா இருக்கிறாள் என்று தெரிந்தால்கூடபோதும்....அதுவரை என்னால் குற்ற உணர்ச்சியிலிருந்து மீளமுடியாதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஜனவரி 2011 உயிரெழுத்து இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7496348049191934345?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7496348049191934345/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7496348049191934345&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7496348049191934345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7496348049191934345'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2011/01/blog-post_23.html' title='தொலைவதுதான் புனிதம் ....'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TTxYX9cED7I/AAAAAAAAAV0/8_9FnuObCuE/s72-c/face-of-unrequited-love-02.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8399831849684780731</id><published>2010-07-08T06:48:00.001-07:00</published><updated>2010-07-08T06:54:29.904-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அதிகாரத்தின் மூத்திரநாத்தம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDXX4Ns0S3I/AAAAAAAAAVg/96dWGrG5CTQ/s1600/women+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 209px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDXX4Ns0S3I/AAAAAAAAAVg/96dWGrG5CTQ/s320/women+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5491532681398471538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நகரம் திறந்தவெளிச் சிறை &lt;br /&gt;ஒரு அகதியைப் போல் என் அறையில் சுருண்டு கிடக்கிறேன்&lt;br /&gt;மஞ்சள் சூரியனும் வெள்ளை மழையும் எனக்கு ஒன்றே&lt;br /&gt;இருட்டிய வானமும் ஒளிர்ந்த வெளிச்சமும் ஒன்றே&lt;br /&gt;அறையின் வெப்பமும் குளிர்ந்த காற்றும் ஒன்றே&lt;br /&gt;அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே&lt;br /&gt;அமிழ்ந்த இசையாய் என் அறைக்குள் ஒடுங்கவே விரும்புகிறேன்&lt;br /&gt;தமிழ் இலக்கியம் சினிமா பத்திரிக்கை &lt;br /&gt;இசை தொலைக்காட்சி பஸ் நிறுத்தம்&lt;br /&gt;மருத்துவமனை காவல்நிலையம்&lt;br /&gt;தியேட்டர் பள்ளிக்கூடம் கேளிக்கை விடுதிகள் ரயில்நிலையம் &lt;br /&gt;பன்னீர் மரத்தின் நிழலைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை &lt;br /&gt;நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்&lt;br /&gt;மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்&lt;br /&gt;துதியற்ற என் இருப்பை அவர்கள் விரும்பவில்லை&lt;br /&gt;காற்றில் நீலம் பாரித்த விஷத்தை அனுப்பினார்கள்&lt;br /&gt;அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி &lt;br /&gt;காற்றைப்போல் ஊர்ந்து கதவிடுக்கின் வழியாக&lt;br /&gt;என் பூட்டிய அறைக்குள் நுழைகிறது&lt;br /&gt;துக்கங்களை மட்டுமே நேசித்து பழக்கப்படுத்தப்பட்ட&lt;br /&gt;என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்&lt;br /&gt;காற்றின் நீலத்தை அழித்தது&lt;br /&gt;என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்&lt;br /&gt;உங்கள் ஆணவத்தின் சங்கிலியை  &lt;br /&gt;முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8399831849684780731?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8399831849684780731/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8399831849684780731&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8399831849684780731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8399831849684780731'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/07/blog-post_08.html' title='அதிகாரத்தின் மூத்திரநாத்தம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDXX4Ns0S3I/AAAAAAAAAVg/96dWGrG5CTQ/s72-c/women+2.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5597547965369014056</id><published>2010-07-05T00:23:00.001-07:00</published><updated>2010-07-06T06:21:05.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூமா வாசுகி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>யூமா வாசுகியின் இருவேறு உலகம்-‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDGIiPh8OfI/AAAAAAAAAVY/n8pyxI1khEs/s1600/yuma_vasuki.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 125px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDGIiPh8OfI/AAAAAAAAAVY/n8pyxI1khEs/s320/yuma_vasuki.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490319542607165938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூமா வாசுகி எனக்கு பிடித்த எழுத்தாளர். வழக்கமாக சினிமாவில்  emotional காட்சி வந்தால் என்னால் அழுகையை நிறுத்த முடியாது.’முள்ளும் மலரும்’, ‘சேது’ படங்களின் கடைசி காட்சி, ‘அழகி’ படத்தில் நந்திதா தாஸ் மகனை மடியில போட்டு  நடுரோட்டில் உட்கார்ந்து அழும்காட்சியைப் பார்த்து என்னை மறந்து தேம்பி அழுதிருக்கிறேன். ஆனால் கதைப் பிரதிகளை வாசிக்கும் போது அந்த மாதிரியான உணர்வுநிலைகளைத் தூண்டும் எழுத்துக்கள் வரும்போது கண்ணீர் தழும்பும், துக்கம் கொள்ளும்,குற்ற உணர்வில், ஆற்றாமையில் மனம் நிம்மதியின்றி உருகித் தவிக்கும். ஆனால் கதறி அழுவது நிகழ்ந்ததில்லை. கண்ணீர் சாரை சாரையாக வழிந்ததில்லை. எல்லாம் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலை படிக்கும் வரைதான். கதையில் வரும் முக்கிய பாத்திரங்களான வாசுகி அக்காவையும் அவள் தம்பியையும் ஒரு மாத காலமாக மறக்க முடியாமல் தவித்தேன். எனக்கு வாய்த்தது போல் அல்லாமல் நேர்மாறான ஒரு அப்பா. அவர் குடும்பத்தில் நிகழ்த்தும் வன்முறைகள். ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் இதயத்தை பிடுங்கி எறிவது போல் வாதை. கண்ணீராக கொட்டினால் மட்டுமே அந்த வாதை விலகும். பிரதியை வாசித்து முடித்தும் வன்முறையின் வாதை உடலெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்ய? ஒரு வேளை யூமா வாசுகியிடம் பேசினால் பாரம் குறையும் என்று நினைத்து அஜயன் பாலாவிடம் அவர் தொலைபேசி எண்ணை வாங்கினேன். ஆனால் பேசினால் இன்னும் சோகம் அதிகமாகிவிடுமோ.அந்த பிரதியிலிருந்து என்றும் விடுபட முடியாதோ என்ற பயம். இன்று வரை அவரிடம் பேசவில்லை. இந்த நாவல் படித்த பின் என்னுள்  ஒரு தெளிவு வந்தது. எதன் பொருட்டும் யாரும் என் மீது செலுத்தும் வன்முறையை பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பது.சிறுவயதிலிருந்தே யார் என்னை அடிக்க கை ஓங்கினாலும் திருப்பி நானும் கை ஓங்கி விடுவேன்.அடித்தால் திருப்பி அடிப்பேன் என்னால் முடிந்தவரை. இதன்பின் அந்தத் தெளிவை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏனேன்றால்  நம்மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறும் வாதையை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனச்சிக்கலை, தாழ்வு மனப்பானமையை உள்ளுக்குள்ளே நொருங்கிப் போகும் தன்மையை இவை எல்லாவற்றிர்க்கும் மேலே நமக்குள் மிகப்பெரும் எதிர் வன்முறையையும்  உருவாக்குகிறது. குறைந்த பட்சம் வன்முறையை உடனக்குடன் எதிர்க்கும்போது நமக்குள் வளரும் வன்முறையாவது குறையும். அதேபோல் இந்த நாவலைப் படித்தால் நம்மையும் அறியாமல் குழந்தைமேல் நாம் செலுத்தும் சிறுசிறு வன்முறைகளையும் தூக்கி எறிந்துவிடுவோம்.  முத்தங்களால் சாத்தியப்பட்ட வாழ்க்கையையே குழந்தைகளுக்கு தர விரும்புவோம். இந்நாவலில் வரும் வாசுகி தம்பியின் குறைந்த பட்ச ஆசை அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு தெருவில் நடப்பதுதான். அதுவும் ஒரு நாள் அதிசயமாக நிகழ்ந்தது எண்ணெய் தேய்த்து தலைசீவி வெளுத்த ஆடை அணிந்து தெருவில் அப்பாவோடு... தம்பியின் வாழ்வில் அப்பாவோடு மகனின் நெருக்கமான  நினைவு என்றால் அதுதான் அதுவும் வீடு திரும்பும் போது மாறிவிட்டிருந்தது. வன்முறையின் தீவிர வசீகரம் அப்பாவை விட்டு விலகவில்லை. குடித்துவிட்டு கண் மண் தெரியாமல் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கிறார்.குடிக்காத போதும் அப்படியே. யார் தங்கள் பிள்ளைகளை கொடுமைபடுத்தினாலும் கண்டுகொள்ளாமல் வெறுப்பையே உமிழ்ந்துவிட்டுச் செல்கிறார். எதன் பொருட்டு அவர் வெறுப்பை உமிழ்கிறார். மகளின் கண்ணீரும் மகனின் வேண்டுதலும் அவரின் கொடூர அதிகாரத்தில் சிறு அதிர்வைக்கூட ஏற்படுத்தவில்லை. உட்சகட்ட அதிகார போதையிலேயே இருக்கிறார் அப்பா. மிகைஉணர்வைத் தூண்டி வெறும் கண்ணிரை வரவழைப்பது மட்டும் இந்நாவலின் நோக்கமாக இல்லை. சிறுவயதில் ஏற்படும் இத்தகைய வாதை கொடுமையிலும் கொடுமை. உண்மை...மரணம் மட்டுமே அதனை விரட்டி அடிக்கச் செய்யும். ஒரு வன்முறையாளனின் மரணத்திற்காக காத்திருப்பதைத் தவிர பிரதியை வாசிக்கும் நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாதது மேலும் துக்கத்தை அதிகபடுத்துகிறது.  இங்கே அன்பில் பெயரால் நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிகாரத் தோரணை,குடும்பத் தலைவனின் ஏதாச்சாதிகார போக்கு அதனால் ஏற்படும் சிதைவை உற்று நோக்குவதை அவசியமாக்கியிருக்கிறது இந்த பிரதி. குடும்பம் என்னும் நிறுவனத்தின் மீது பல கேள்விகளை எழுப்பி இருக்கும் இந்நாவல் அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யூமா வாசுகியின் அடுத்த நாவல் மஞ்சள் வெயில். இந்த நாவலில் வரும் சில வரிகளை கவின்மலர் தன் முக நூலில் எடுத்துப் போட்டிருந்தார். அதுவே நான் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைப் பற்றி இந்த சிறு பகிர்தலுக்கு காரணமாக இருந்தது. இந்த நாவலை படித்து முடித்த உடனே அதை பகிர்ந்து கொண்டிருந்தால் மிகை உணர்ச்சியில் நானும் இன்னொரு கண்ணீர் காவியத்தை பதிவாக வெளிப்படுத்தியிருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் வெயில் நாவலை யூமா வாசுகி எழுதியிருப்பதை ஒரு சிறுபத்திரிக்கையில் பார்த்துவிட்டு புக்லேண்ட்ஸ் போய் அந்த நாவல் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த நாவல் வரவில்லை. என்னைப்போல் வேறு சிலரும் அந்த நாவலை கேட்டுவிட்டுப் போனதாகச் சொன்ன கடையில் இருந்த நண்பர் ‘எந்த பதிப்பகம்’ என்று கேட்டார், ‘அகல் பதிப்பகம்’ என்றதும் ‘வாங்கி வைக்கிறேன்’ என்றார். வேறு புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மறுபடியும் போய் கேட்டால் இன்னும் வரவில்லை என்றார்கள். அது உடனே கிடைக்காமல் போனதும் ஆர்வம் அதிகமானது. நண்பர்களிடம் அகல் பதிப்பகம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தேன். ராயப்பேட்டை டி.டி.கே சாலையில் இருந்த ஒரு இடத்தைச் சொல்லி அங்கே கிடைக்கும் என்றார்கள். நண்பர் ஒருவரோடு பரபரப்பான டி.டி.கே சாலையிலிருந்து பிரிந்துசென்ற தெருவின் தொடக்கத்தில், ஒரு மூலையில் ஒடுங்கியிருந்த அந்த அறைக்கு முன்னால் போய் நின்றேன். அறை மூடியிருந்தது. அப்படியே முகம் சோர்ந்துவிட்டது. கைக்கு எட்டாமல் விலகிச் செல்லும் குழந்தையை உச்சி முகரும் ஆசை அப்புத்தகத்தின் மீதும் எழுந்தது. எனக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாக இருந்தது நான் அதுவரை ஒரு புத்தகத்தைத் தேடி இப்படி அலைந்தது இல்லை. யூமா வாசுகியின் எழுத்தின் மீது உணர்வுப்பூர்வமாக இருந்த நெருக்கம்தான் என் ஆர்வத்தை குறைக்காமல் இருந்தது. அடுத்த நாள் நான் கிளம்பத் தயாரானேன் நண்பர் ‘அந்த பக்கமாக போகும் வேலை இருக்கிறது நானே வாங்கி வந்துவிடுகிறேன்’ என்றார். புத்தகம் கைக்கு கிடைக்கும் வரை அதன் நினைவாகவே இருந்தது. அடுத்த நாள் நண்பர் அந்த அறையில் புத்தகத்தை வாங்கும்போது யூமா வாசுகி அங்கிருந்ததாகச் சொன்னார். நீங்கள் அவரிடம் பேசுனீர்களா என்று நண்பரிடம் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்றேன். யூமா வாசுகி சிரித்தார். நானும் சிரித்தேன் என்றார். நான் போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் வெயில் என்ற தலைப்பே எனக்குள் ஒரு அழகான படிமத்தை ஏற்படுத்தியிருந்தது. மார்கழியில் வெயிலும் குளிரும் பிணைந்து உண்மையாகவே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில்தான் புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன். இந்த வானிலை அழகு தற்செயலானது. நாவல் கடித வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘அன்பிற்குரிய ஜீவிதா...’&lt;br /&gt;என்று நாவலின் எளிமையான தொடக்கமே உள்ளே இழுத்தது. தொடர்ந்து குளிருக்கு இதமான வார்த்தைகள்..&lt;br /&gt;‘இந்த புதிய காலையில் மலர்கிற அனைத்துப் பூக்களையும் உங்களுக்கு அர்ப்பணித்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.ஆளற்ற கடலோரம் கிளிஞ்சல்கள் பொறுக்கியபடி தொலைதூரம் போகும் சிறுவனாக –நான் இப்போது...’&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும் தனிமையும் காதலும் தொடர்ந்த வார்த்தைகள் அழகிய வாசிப்பு அனுபவத்தை தரப்போகிறது என்று நினைத்தது பொய்யில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் சுவாரஸ்யத்தை கொண்டிருந்தது. ஒரு ஆண் உள்ளுக்குள் ஒடுங்கும் வலி புரிந்தது. பிரிவும் ஆற்றாமையும் அழகிய கவிதை மொழியில் நாவல் முழுவதும் விரவி கிடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் உங்களை பார்த்தேன் இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகா மந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன் சிந்தும் கொலுசுகளுடன் நடந்து போகும் உங்களைப் பார்த்தேன். கற்பனை இல்லை.கனவு கண்டு உறங்கவில்லை.சத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப்பார்த்தேன்......’ ஏன் இந்த நாவலின் வரிகளை குறிப்பிட்டு பேச வேண்டியிருக்கிறது என்றால் மொழியின் சிறப்பே இந்நாவல்.     &lt;br /&gt;&lt;br /&gt; ‘நீங்கள் எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பீர்கள். நான் உங்களை மறக்கமாட்டேன். எனக்கு நீங்கள் செய்தது நன்மையன்றி வேறில்லை.உங்களை எப்போதாவது மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.கிடைக்காமலும் போகலாம்.என்றைக்கும் அந்த மஞ்சள் வெயிலின் நண்பன் நான்.விடைபெறுகிறேன்’. நாவலை முடிக்கும் போது சலிப்பு இல்லை. தன் காதலை ஏற்காத காதலியை வாழ்த்தி இப்படி முடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் வெயில் மறுக்கப்பட்ட காதலின் நினைவுப் படிமம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-5597547965369014056?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/5597547965369014056/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=5597547965369014056&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5597547965369014056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5597547965369014056'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/07/blog-post.html' title='யூமா வாசுகியின் இருவேறு உலகம்-‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’.'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TDGIiPh8OfI/AAAAAAAAAVY/n8pyxI1khEs/s72-c/yuma_vasuki.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7003660210178307717</id><published>2010-06-19T02:45:00.000-07:00</published><updated>2010-06-19T09:03:40.417-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக மதிப்புரை'/><title type='text'>விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்...    சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுப்பை முன்வைத்து- விஷ்ணுபுரம் சரவணன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TByS5v1x-VI/AAAAAAAAAUk/rOoadajld2s/s1600/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TByS5v1x-VI/AAAAAAAAAUk/rOoadajld2s/s320/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484419967022659922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மே 29 ந்தேதி பெரம்பலூரில் விடுதலை குயில்கள் கலை இலக்கிய அமைப்பு துவக்கவிழாவில் பேசியதின் எழுத்து வடிவம்..)&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் மையப்பகுதி பகுதி இறுதி அல்லது உச்சப்பகுதி என தமிழ்ச் சிறுகதைகள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த இலக்கணங்களை எல்லாம் உதறிவிட்டு எழுத ஆரம்பித்து பல ஆண்டுகளாயிற்று. மையம் நோக்கி கதை சொல்லி நகர்வதே பிரதானம் என்பதெல்லாம் மறைந்து மையம் என்பது ஒன்றல்ல என்பதான படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன.மாயப்புனைவு எழுத்துக்களின் வழியே பயணித்த சிறுகதைகளில் பெரும்பாலும் இன்றைக்கான அரசியலை தெளிவாக முன்வைக்கமுடியாமல்போய்விடுகிற விபத்து நேர்ந்துவிடுவதால் அனேகர் யதார்த்த வகை சிறுகதையையே தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். ஆயினும் அது தன்குறிப்பு பதிவு போலவோ அல்லது ஒருவித தட்டைத் தன்மையோடும் இல்லாமல் செய்கின்ற முயற்சியில்தான் அது சிறந்த கதையாக மாறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இச்சூழலில்.. புதிதாக எழுத வருபவர் இரண்டுவிதமான கூறுகளை முக்கியமாக எதிர்க்கொள்கின்றனர். ஒன்று அவர்களுக்கு முந்தைய தலைமுறை எழுதியவற்றின் மிச்சத்தை அல்லது எழுத மறுத்ததை எழுதவேண்டியிருப்பதும். அடுத்து.. எழுத்தாளர்களையும் மீறி மாறிக்கொண்டேயிருக்கும் வடிவம் குறித்த பிரக்ஞையே அவை. இவை இரண்டிற்கும் தொடர்ந்த வாசிப்பும் உரையாடலும் முக்கியமானது.&lt;br /&gt; &lt;br /&gt;முந்தைய தலைமுறை தவிர்த்த வாழ்வனுபவங்களை எழுதுவதில் தலித் இலக்கியமும் பெண்ணிய இலக்கியமும் தீவிரமாக முன்னெடுத்துச்செல்கின்றன. எதன் ஒன்றால் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை கொண்டாட்டமாகவும், இயல்பினை ஒட்டியும் எழுதி வருவதை நாம் காணலாம். பெண்ணிய கவிதை தளத்தில் உடல்மொழி எவ்வித பிரதானமான இடத்தில் செயல்பட்டதோ அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களில் பெண்ணிய மனவுலகம் சார்ந்த உலகம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காதல், காமம்  போன்றவைகளின் வெளிப்பாடு என்பது பெண்ணிய பார்வையையும் ஆண்களே பெண் குரலாக பதிவு செய்தார்களோ அவை கடந்த பத்தாண்டுகளாக உடைந்து பெண்ணின் மனக்குரலை பெண்களே பதிந்து வருவதில் அவை வேறொரு நிறமாகவும், குரலாகவும் வெளிப்படுவதை நாம் காணமுடிகிறது. மிக இயல்பான அதே சமயம் இடக்கையால் புறந்தள்ளப்பட்ட மெல்லிய உணர்வுகள் பெண்களின் எழுத்து வருகைக்கு பிறகே அது நிகழ்ந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;கவிதை எழுதுபவர்கள் பலர் உரைநடைகளும் எழுதும்போது கவிதைக்கான தன்மையோடு அவை மாற்றம் பெறுவதை தவிர்க்கவியலாது. கவிதையில் வெளிப்படும் படிமம் குறீட்டுத்தன்மை பூடகமான தொனி அனைத்தும் சிறுகதைகளிலும்  வெளிப்படுவதுபோல, கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளும் கதைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவை பல சிறுகதைகளுக்கு பலமாகவும் சிலவற்றில் உணர்வுக்குவியலாக தேங்கி பலவீனமாக மாறிவிடுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த சூழலில் வெளிவந்திருக்கும் சந்திராவில் காட்டின் பெருங்கனவு எனும் கவிதைக்கான தலைப்பை போல வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு முக்கியமான தொகுப்புகளூள் ஒன்றே. இத்தொகுப்பிற்கு உப தலைப்பு இடச்சொன்னால் நான் வைப்பது விலக எத்தனிக்கும் அன்பும், கையறு நிலைக்கு முந்தையை கணங்களும் என்று வைப்பேன். ஆம். அந்தளவு  ஒரு சிறுகதை தவிர்த்து மற்றவைகள் அனைத்திலும் விலகஎத்தனைக்கும் அன்பையும், விலகியப்பின் சூழப்போகிற வெறுமையும் கையறு நிலைக்கும் இடைப்பட்ட கணங்களை ஒருவித பரிதவிப்போடே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கதையாக்கத்தில் எவ்வித சிக்கலுமற்று நேர்க்கோட்டு நடையில் எழுதியிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;சந்திரா இப்படி எழுதுவதற்கான மனநிலை அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அவரது அப்பாவின் மரணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.  இழந்துபோன அப்பாவின் அன்பை மற்ற உறவுகளில் பொருத்திப் பார்த்தோ அல்லது ஏற்கனவே இழந்த அன்புக்கதையாடல்களை மீட்டுறுவாக்கம் செய்யவோ அவருடைய அப்பாவின் மரணம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;அவற்றில் முக்கியமான கதையாக பன்னீர் மரத்தெரு கதையைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பூரணத்துவம் ஆகிற பெண்ணிடமிருந்து குழந்தைகள் தொலைந்துபோகிற நாளிலிருந்து அவள் மனப்பிறழ்வாகிறாள். மனப்பிறழ்வற்ற நாட்களுக்கும் இப்போதைக்குமான இடைவெளிகள் அவளுக்கே தெரிவதுதான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இதே சிக்கலில்தான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை கதையில் வரும் பெண்ணும் சிக்கிக்கொள்கிறாள். விபத்து மற்றும் இன்னபிற விடங்களால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கும் புறக்கணிப்பட்ட அன்பினால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கான வித்தியாசத்தை மிக நேர்த்தியாக இந்த இரு கதைகளில் பதிவு செய்திருக்கிறார் சந்திரா.&lt;br /&gt; &lt;br /&gt;பன்னீர்மரத்தெரு கதையில் வரும் அகிலாவிற்கு தன்னிலிருந்து பறிக்கப்பட்ட அல்லது எது வாழ்நாள் இறுதி வரை போதுமென நினைத்திருந்தமோ அது தொலைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவள் தனக்குள்ளே சுழன்று சுழன்று பேசிக்கொள்கிறாள். ஒருவேளை சிறார்கள் கேட்க மறுத்ததை கூட அவள் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கலா ம். அதற்கு இடையூறான எல்லாவற்றின் மீதும் அவள் வன்மம் கொள்கிறாள். அதன் வன்மத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்க அவள் எந்த சூழலிலும் தயாரில்லை. தன் காதுகளை அடைத்துக்கொள்வதும், டிவி பின்களை யாருமில்லாத நேரத்தில் பிடுங்குவதுமான அவள் மனநிலை இன்னும் யாருக்கோ கதை சொல்லுவதற்கான தயாரிப்போடே இருப்பதற்கான வெளிப்பாடே. &lt;br /&gt; &lt;br /&gt;ஏறத்தாழ இதே மனநிலையோடேதான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை கதையில் வரும் பறிக்கப்பட்ட அன்பிற்கெதிராகவும் வன்மத்தை பிரயோகிக்காத மனநிலையோடே இருப்பதுபோன்ற சித்திரிப்பு அவர்களின் இழந்த இயல்பு மனவோட்டம் குறித்த பிரக்ஞையோடு இருப்பதுதான்.&lt;br /&gt; &lt;br /&gt;நதியில் மிதக்கும் கானல் மற்றும் காட்டின் பெருங்கனவு கதைகளில் இதோ.. இதோ .. கண்ணெதிரே துடிக்கவிட்டு பிரியும் அன்பினை பற்றிய தவிப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இதிலும் இயல்பாக இருக்கிறாள் ஆனால் இயல்பாக அவள் சிந்திக்கவோ செய்யவோ முடியவில்லை. இந்த மனத்தள்ளாட்டத்தான் கதையில் முக்கிய இழையாக நகர்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இரண்டை ஒன்றாக்கினால் கூட அவை ஒன்றின் தொடர்ச்சிபோலவே காணப்படுவை பன்னீர்மரத்தெரு மற்றது ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை .குழந்தைக்களுக்கான கதை சொல்லி அத்தெரு வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமித்துவிட தனித்து போனவளின் மனச்சிதைவு திருமணத்தை மறுத்து அவள் ஏற்றுக்கொள்ளும் தனிமை தருகிற கூடுதல் சிதைவு.. இவளின் நீட்சியாக தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து அதன் மூலம் அவள் கணவன் சந்தேகித்து மனச்சிதைவுக்குள்ளாகிற பெண் இருவரும் ஏறத்தாழ ஒருவளே. இருவருக்கும் இயல்புக்கு இயல்பற்றவைக்கு இனம் காணமுடிவதே மனச்சிதைவை விடவான சிக்கலாகிவிடுகிறது.  நான் சரியாகிவிடுவேனா என மருத்துவரிடம் கேட்குமளவும் , வீடுதிரும்பிய தன்னுடன் கணவன் வன்புணர்வு செய்வதை வழியற்று ஏற்றுக்கொள்ளும் அல்லது புரிந்துக்கொள்ளுமளவான தெளிவே அவளுக்கு பெருதுயராக மாறிவிடுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சந்திராவின் கதைகளின் மிக இயலபாக நிகழ்வது கதை சொல்லப்படும் பகுதியின் நிலவியல் வரையறை. காட்டின் பெருங்கனவில் காட்டின் சூழலும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்நிலையில் அதனின் இருப்பும் கதையோட்டத்தில் தனித்து தெரியாது சொல்லப்படுவதைப்போல, நகரமும் நகர்புறம் சார்ந்த மனிதர்களின் மனநிலையை வாழ்பகுதி எந்த அளவு பாதிப்பு நிகழ்த்தும் என்பதற்கு சூதுநகரம் கதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடுதலாக கழிவறை காதல்பிரதி கதையும் இதில் அடங்கும். &lt;br /&gt; &lt;br /&gt;சந்திராவின் கதைகள் உள்ளோட்டமாக இன்னுமொன்றையும் காணமுடிகிறது. நகரமயமாதலின் அத்தனை கூறுகளும் எளிய வாழ்முறையை மேற்கொள்ளும் மனிதர்களின் எண்ணவோட்டத்தையும்,  எதிர்கால சூழல் மீதான மிகையற்ற நினைவில் இருப்பவர்களின் கருத்துக்களை புரட்டிப்போடுவதை நகரமயமாதலின் விளைவுகளாக கதைகள் வெளிப்படுகின்றன.  பன்னிர்மரத்தெருவிற்கு தொலைக்காட்சி வருவதும், செல்போன் தகவல்கள் தொடக்கமாகி சிதையும் மனநிலை, கட்டணக் கழிவறையில் காசு வசூலிக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணின் இருப்புச்சூழல் என ஒரு வாழ்முறையிலிருந்து அடுத்த வாழ்முறைக்கு கட்டாயமாக மாற்றப்படுவதன் மீதான அவஸ்தையை நுணுக்கமாக பதிந்து செல்கின்றன கதைகள். &lt;br /&gt; &lt;br /&gt;இழந்த அன்புக்கு பிறகான கையறு நிலையை எல்லா கதைகளும் பேசுகையில் ஒரேயொரு கதை மாத்திரம் விருப்பட்ட ஒன்றினை வேறெந்த சூழல் குறித்து கவலையேதுமற்று வன்முறையாக அந்த அன்பை தனக்கானதாக்கி கொள்ளும் கதையாக மருதாணி. கணவரின் நண்பர் மீது தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்ட அன்பை , அந்த அன்பு தவிர மற்றவைகளை துச்சமாக எண்ணி , அதன் புற விளைவுகள் பற்றி அச்சமற்று அந்த விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வது இடாலோ கால்வினா வின் மனைவியின் சாகசம் கதையை ஒத்தது. கால்வினா கதையிலும் இரவு முழுவது வெறொருவருடன் செல்வழித்துவிட்டு விடியலில் வீட்டிற்கு வரும் மனைவி, அந்த அடுக்குமாடி வாசல் திறக்கும்வரை எதிரேயிருக்கும் உணவு விடுதியில் நேரத்தை கழிக்கையில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் அவளின் மனநிலை வாசகருக்கு வெளிப்படுத்திவிடும் வித்தையாக இருக்கும். குறியீட்டு கதையாக வரும் தரை தேடிப்பறத்தல் கதையில் இன்னும் அக்கரையோடு எழுதியிருக்கும்பட்சத்தில் சிறந்த கதையாக வரவாய்ப்பிருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;சந்திராவின் கதை உலகம் மிக இயல்பாக ஆனால் கூர்மையாக கைகூடிய மொழிநடையுடன் பயணிக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவது போல.. &lt;br /&gt;"இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்." &lt;br /&gt;அம்முயற்சிகளாக தொடங்கியிருக்கும் சந்திராவின் அடுத்தடுத்த கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனும் நம்பிக்கையை தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7003660210178307717?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7003660210178307717/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7003660210178307717&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7003660210178307717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7003660210178307717'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/06/blog-post.html' title='விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்...    சந்திராவின் &quot;காட்டின் பெருங்கனவு&quot; சிறுகதை தொகுப்பை முன்வைத்து- விஷ்ணுபுரம் சரவணன்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TByS5v1x-VI/AAAAAAAAAUk/rOoadajld2s/s72-c/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8374114172467970771</id><published>2010-04-10T08:47:00.000-07:00</published><updated>2010-04-10T08:54:08.748-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மௌனத்தின் சொல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S8Cdw3vVTfI/AAAAAAAAAT0/wOydzkw7-uw/s1600/kavi+paint.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S8Cdw3vVTfI/AAAAAAAAAT0/wOydzkw7-uw/s320/kavi+paint.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458536211294801394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உன்னைச் சிறப்பாக அழைப்பதற்கு&lt;br /&gt;சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;அன்பைவிட பெரியசொல்&lt;br /&gt;இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாத&lt;br /&gt;ஆதிச்சொல்&lt;br /&gt;உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்&lt;br /&gt;தேடிக்கலைகிறேன்&lt;br /&gt;எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்&lt;br /&gt;கடைசியில் கண்டடைந்தேன்&lt;br /&gt;மௌனத்தில் விரியும் என் புன்னகையே&lt;br /&gt;உனக்கான தேவச்சொல் என்பதை&lt;br /&gt;        &lt;br /&gt;        2&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முடிவில்லா புன்னகை   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உதடுகளில் &lt;br /&gt;மௌனம் அழகானது&lt;br /&gt;முத்தங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை&lt;br /&gt;புன்னகை முடிவில்லாக் கவிதை&lt;br /&gt;உதிரும் சொற்கள் பேரண்டம் ஆளுபவை&lt;br /&gt;ஆகா! அவனது உதடுகள் &lt;br /&gt;பனித்துளி மிதக்கும் காடு&lt;br /&gt;மழைகுடித்த காட்டுப்பூக்கள்&lt;br /&gt;ஆம் அவன் உதடுகள் எழில்வாய்ந்தவை&lt;br /&gt;நானே அவைகளின் பேரரசி&lt;br /&gt;&lt;br /&gt;       3&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தொடர்பற்ற நதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரந்துகிடக்கும் வெளி&lt;br /&gt;அடைக்கும் மௌனம்&lt;br /&gt;சிதைந்த ஒலி&lt;br /&gt;வெளிறிய வெளிச்சம் &lt;br /&gt;நட்பறுந்த பொழுதுகள்&lt;br /&gt;காதலின் மரணம்&lt;br /&gt;குழந்தையின் வீறிடல்&lt;br /&gt;அம்மாவின் கண்ணீர்&lt;br /&gt;இவை தொடர்பற்று தொடர்புகொண்டிருக்கிறது&lt;br /&gt;ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல&lt;br /&gt;&lt;br /&gt;(ஏபரல் 2010 அம்ருதா இலக்கிய இதழில் வெளிவந்த எனது கவிதைகள்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8374114172467970771?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8374114172467970771/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8374114172467970771&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8374114172467970771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8374114172467970771'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/04/blog-post.html' title='மௌனத்தின் சொல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S8Cdw3vVTfI/AAAAAAAAAT0/wOydzkw7-uw/s72-c/kavi+paint.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7332626160905116576</id><published>2010-02-03T22:25:00.001-08:00</published><updated>2010-02-03T22:29:04.189-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>கவிஞர் விக்கிரமாதித்யனுடன் நேர்காணல் -மறுபதிவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2poi9yoiGI/AAAAAAAAATk/6zjt4hOcvnI/s1600-h/vikki.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2poi9yoiGI/AAAAAAAAATk/6zjt4hOcvnI/s320/vikki.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434270850287700066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2pobCjapDI/AAAAAAAAATc/DBgS9cd2c_o/s1600-h/vikki+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2pobCjapDI/AAAAAAAAATc/DBgS9cd2c_o/s320/vikki+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434270714127098930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சந்திப்பு: சந்திரா&lt;br /&gt;நன்றி:ஆறாம்திணை.&lt;br /&gt;புகைப்படங்கள்- சந்தோஷ் நம்பிராஜன் &lt;br /&gt;&lt;br /&gt;(பத்தாண்டுகளுக்கு முன் நான் ஆறாம்திணை என்ற இணைய இதழில் நிருபராக பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது கவிஞர் விக்கிரமாதித்தனை  நேர்காணல் செய்தேன். அது ஆறாம்திணை இதழில் வெளிவந்தது. கவிஞருக்கு விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நேர்காணலை இங்கே மறுபதிவு செய்கிறேன்.)   &lt;br /&gt;&lt;br /&gt;கவிஞன் என்று சொல்வதை விட இவரை நாடோடிக் கவிஞன் என அடையாளப்படுத்துவது இவரது வாழ்வின் தன்மைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். எழுதத் துவங்கிய காலம் தொட்டு இவரது வாழ்க்கை பயணமும் வறுமையும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வாழ்ந்தவன் பெயரைக் கொண்டதால் நம்பிராஜனின் வாழ்க்கையும் விக்கிரமாதித்தன் கதை போலவே ஆயிற்று. ஆனாலும் தென்காசி சைவப் பிள்ளைகளின் நசிந்த வாழ்க்கையும், மொழியும், தாமிரபரணிக் கரையின் செழுமையும் இவரது கவிதைகளில் நிறைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுள் பொறியாய்க் கனன்று உதிக்கும் எதையும் கவிதையாய் எழுதி வரும் இவரது இயல்பு கவிதையில் கையாளப்படாத சில உணர்வுகள் கவிதையாய் வெளிவந்திருக்கிறது. இவரது பார்வைக் கோணங்கள் சற்று வித்தியாசமானது. பம்மாத்து இல்லாதது. அதனால்தான் இவரது கவிதைகள் அழுத்தமும் அர்த்தச் செறிவும் மிக்கதாகயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'கவிமூலம்' தொகுப்பு இவரது வாழ்வின், இவரது கவிதையின் மூலத்தை ஓரளவிற்குச் சொல்லும் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் கூடத் தன்னையும், தன் கவிதைகளையும் முன்னிறுத்தாது, அந்த நிகழ்வுகளை ஒரு சக மனிதனின் பார்வையில் சொல்லியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;நாடோடி நம்பியண்ணனாய் வாழ்ந்து கொண்டும், கவிஞர் விக்கிரமாதித்தனாய் எழுதிக் கொண்டும் வாழ்நாளைக் கழிக்கும் இவருடன் ஒரு நேர்காணல்..... &lt;br /&gt;&lt;br /&gt;'பாரதி, பாரதிதாசனை மீறிய பிரமிள்' என்று சமீபத்தில் நீங்க எழுதியிருக்கீங்க. பிரமிள் இவர்களை விடவும் பெரிய கவிஞனா? &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக, எந்த சந்தேகமுமில்லாமல் பாரதிதாசனை விட மிகப் பெரிய கவிஞன் பிரமிள். பாரதியை விடவும் பெரிய கவிஞன்தான். இப்ப அதைச் சொன்னால் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறேன் என்று புரிந்து கொள்ளப்படும். அதனால் தான் அதைப்பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயம் சார்ந்து மதிப்பீட்டை முன்வைக்கும்பொழுது ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். இல்லையென்றால் காலம் தாண்டி ஏற்றுக் கொள்ளப்படலாம். பாரதியாரை மகாகவி என்றபோது எத்தனை பேர் அதை ஒத்துக் கொண்டார்கள். மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கே! ஒரு கவிஞன் சார்ந்த மதிப்பீட்டை முன்னுதாரணங்களுடன் வைக்கிறோம். உடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. பிரமிளைப் பரவலாக அறிந்த பின்புதான் மதிப்பீட்டிற்கான மதிப்பே கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பிரமிளை ஏற்றுக் கொள்வதற்கான தமிழ்ச்சூழல் இன்று இருக்கிறதா? பிரமிள் கவிதை குறித்த விமர்சனப் பார்வை எந்த அளவிற்கு உள்ளது? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் பிரமிளை ஏற்றுக் கொள்வது இப்போதைக்கில்லாமல் இருக்கலாம். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம் . ஆனால் அவனுடைய கவிதைகள் என்றும் வாழும். பிரமிள் கவிதைகளை சுப்பிரமணியம் என்பவர் முழுத் தொகுதியாய்க் கொண்டு வந்திருக்கிறார். அந்தத் தொகுதி ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. பிரமிளை அறிவதற்கான முதல் முயற்சி அது. 'கணையாழி' யில் பிரமிளைப் பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதேபோல் ரா.சு. சுந்தரராசனின் கட்டுரை சுருக்கமாகயிருந்தாலும் பிரமிளைப் பற்றி மிகச் சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார். இன்னும் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மிகச் சரியான புரிதல்கள், தீர்க்கமான முடிவு என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. பல்கலைக்கழக அளவில் நவீன இலக்கியவாதிகளைக் கருத்தில் கொள்வதில்லை. பிரபல பத்திரிகைகள் இந்த கவிஞர்களுடைய கவிதைகளைப் பிரசுரிப்பதில்லை. இந்தக் கவிஞர்களின் கவிதைகள் நூலகங்களிலும் வைக்கப்படுவதில்லை. பிச்சமூர்த்தி படைப்புகளை சி.சு செல்லப்பா கொண்டு வந்தார். பிரமிள் கவிதைகளை அக்ரு. பரந்தாமன் புத்தகமாகப் போட்டார். இலக்கியவாதிகள் ஒன்று தாங்களே தொகுப்பு கொண்டு வர வேண்டும் அல்லது அவர்களின் நண்பர்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் நவீனத் தமிழிலக்கியச் சூழல் இருக்கிறது. பத்திரிகைகளும், பதிப்பகங்களும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? &lt;br /&gt;&lt;br /&gt;நவீன கவிதைகள் புரியாமல் இருக்கின்றன என்பதெல்லாம் மிகவும் அபத்தமான கூற்று. நகுலனுடைய கவிதைகள் கூடப் புரியக்கூடியவைதான். பிரம்மராஜன் கவிதைகள் புரியவில்லை என்றாலும், திரும்பத் திரும்பப் படித்தால் புரிந்து கொள்ளக்கூடியவை தான் . முக்கியமாகக் கலாப்பிரியாவின் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். புரியக்கூடியக் கவிதைகளையும் எத்தனை பேர் மதிக்கிறார்கள், பொருட்படுத்துகிறார்கள் என்றால் முடிவு சரியானதாகயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன கவிஞர்கள் அக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தால் சங்க காலத்திலிருந்தே அக உலகம் பேசப்பட்டு வருகிறது. புற உலகத்தைப் பற்றிப் பேசுவதற்குத்தான் தினசரி பத்திரிகைகளும், ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளும், ஏராளமாக இருக்கிறதே! அக உலகம்தான் எந்த வடிவத்திலும் வைக்கப்படவில்லை. அதனால் அக உலகத்தைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். எப்போதும் ஒரு கலைஞன் அல்லது கவிஞன் அக உலகத்திற்கு நெருக்கமாக இருக்கிறான். so called progress writersதான் புற உலகம், புற உலகம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. அக உலகத்தைப் பற்றி பேசுவது தான் மிகச் சரியான தெரிவு எனச் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளில் முற்போக்குக் கவிஞர்களுடைய அடையாளம் மிஞ்சிய அளவிற்குக் கவிதைகளில் போதுமான அளவு கவித்துவமும், கவி ஆளுமையும் வெளிப்படவில்லையே? விமர்சகர்கள் இவற்றை அடையாளப்படுத்தியிருந்தால் இந்தத் தன்மை குறைக்கப்பட்டிருக்கலாமோ? &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் பொதுவாக விமர்சகர்கள் நாவல், சிறுகதைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கவிதைக்குக் கொடுக்கவில்லை. இலங்கை விமர்சகர்கள் கைலாசபதி, சிவத்தம்பி என்று எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சி.சு. செல்லப்பா கூடக் கவிதை பற்றிப் பின்னாடிதான் பேசுகிறார். கனகசபாபதி கொஞ்ச காலம் பேசிக் கொண்டிருந்தார். அவரும் விட்டுட்டுப் போயிட்டார். தமிழவன் ஒரு காலகட்டம் வரை பேசிக் கொண்டிருந்தார். இப்ப அவரும் கவிதைகளைப் பற்றிப் பேசுவதே கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;விமர்சகர்களுக்கு நாவல், சிறுகதை பற்றித் தெரிந்த அளவிற்குக் கவிதை பற்றிய அக்கறையில்லை. அல்லது நுட்பமான பார்வையில்லை என்று சொல்லலாம்.இப்ப கூட தமிழில் 'ஃபிக்ஸன் ரைட்டர்ஸ்' களாக இருக்கும் என்னோட நல்ல நண்பர்கள் நிறையப் பேருக்குக் கவிதை பற்றித் தெரியாது. பின் நவீனத்துவ எழுத்து, படிமங்கள் கொண்ட எழுத்து என்று தங்கள் எழுத்துக்களில் கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கவிதை பற்றிய போதுமான அறிவு அவ்வளவாக இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;'வானம்பாடி' கவிதைப் போக்கிலிருந்து உங்கள் கவிதைப் போக்கினை எவ்வாறு வேறுபடுத்திக் கொண்டீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;'வானம்பாடி' கவிதைகளில் எனக்கிருந்த வெறுப்பு (aversion) என்னவென்றால் அவர்கள் ஒரு போலியான சமூக, அரசியல் சித்தாந்தப் பார்வையோடு, மேடைப்பேச்சு பாணியிலான கவிதைகளை வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்குள்ளிருந்த சமூக அக்கறை, சித்தாந்த அக்கறை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாகயிருந்தது என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருபது முப்பது ஆண்டுகளில் பார்த்தீர்களானால் அவர்கள் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது புரியும். ஒன்று தி.மு.க. சார்பானவர்களாகவோ, இந்திய கம்யூனிஸ்ட் வலது கொஞ்சம் இடது என்று மேடைப் பாங்கிலான கவிதையாளர்களாகவோ இருந்தார்களே தவிர, கவிதைகளில் கவிதை அம்சமிருக்காது. இந்த மாதிரியான கவிதை தோன்றவே முடியாது என்ற பிரிவைச் சேர்ந்தவன் நான். &lt;br /&gt;&lt;br /&gt;'வானம்பாடி' கவிதைகளினால் கவிதை உலகத்திற்கு எந்த வளர்ச்சியுமே கிடையாதா? &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாகக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கவிதை வளர்ச்சியில் ஒரு பத்தாண்டு காலம் பின் தங்கிவிட்டது என்பது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிதாசனையே அப்படித்தான் சொல்வேன். பாரதியார் தமிழ்க்கவிதையை இருநூறு ஆண்டுகள் முன்னெடுத்துப் போனார். அதே தமிழ்க் கவிதையை பாரதிதாசன் இருநூறு ஆண்டுகள் பின்னெடுத்துச் சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த அடிப்படையில்? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கருத்தைக் கவிதை என்று சொல்வது, அதையே நிறைய வரிகளில் சொல்வது. அதை அவரோடு மட்டும் நிறுத்திவிட்டுப் போகவில்லை. பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லி பத்து, பன்னிரெண்டு கவிஞர்களை ஏற்படுத்தி ஒரு பிரிவாகவே செய்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழியில் வெவ்வேறுவிதமான கவிதைப் போக்கு வேண்டும். ஆனால் ஒரு ரோடு ரோலர் (Road Roller) வந்து எல்லாத்தையும் அழிச்சிட்டுத் தார் ரோடு போட்ட மாதிரி கவிதையைத் தட்டையாக ஆக்கி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதியிலிருந்து வெவ்வேறு விதமான கவிதைப் போக்குகளுடன் கவிஞர்கள் கிளைத்தெழுந்தார்கள். கம்பதாசன் என்று ஒருவர் வந்தார். அவருடைய கவிதை பாணி வேறு மாதிரியாகயிருந்தது. நாமக்கல் கவிஞரோ, எஸ்.டி. சுந்தரமோ அவ்வளவு பெரிய கவிஞர்களாக இல்லையென்றாலும் அவர்களுக்கென்று தனி மேடையிருந்தது, தங்களுடைய போக்கில் எழுதலாம் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிதாசனுடைய பாணி வெகு சுலபமானது. அதில் அவர் தனித்தன்மையுடன் எழுதினார் என்பதிலெல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் காலகட்டத்தில் இன உணர்வு, மொழி உணர்வு பற்றிப் பேச வேண்டிய நெருக்கடியுமிருந்தது. அந்த வகையில் அவர் செய்தது சரி. அதில் எவ்வளவு கவிதை என்று பார்த்தோமேயானால் மிகக் கடுமையான மதிப்பீட்டை வைக்க வேண்டியதிருக்கும். அந்த மதிப்பீட்டை பாரதிதாசன் மீது வைக்க வேண்டாம் என்ற தாட்சண்யம் கருதி கூட விட்டு விடலாம். ஆனால் சமகாலக் கவிஞர்களிடம் அப்படி கருதத் தேவையில்லை. மறைந்து போன கவிஞரைப் பற்றி, தமிழ்க் கவிதைச் சூழலில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்து வைத்திருந்த, அதே சமயத்தில் சமூக நோக்கத்திற்காகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனத்தை வைக்க வேண்டாம் என்று நம்புகிறவன் நான். அப்படிச் சொல்ல நேர்ந்தாலும் கூடத் தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய கவிதைகளில் தமிழ்க்கவிதை மரபுச்சூழல் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;பிரமிள், நகுலன் ஓரளவுக்கு ஞானக்கூத்தன். ஞானக்கூத்தனை ஓரளவுக்கென்று சொல்வதற்குக் காரணம் அவர் யாப்பை விடவே மாட்டார். யாப்பு வடிவத்திலேயே கவிதையைக் கட்டுகிறார். அது நவீன கவிதை ஆகாது. ரொம்ப அப்சர்ட் (Absurd) கவிதைகளை எழுதும்போது கூட ஓசையை விட மாட்டார். இந்த நவீன காலத்திற்கு எவ்வளவு ஓசை வேணுமோ அதை inner rhythm என்று சொல்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னர் ரிதம் தமிழில் பிரமிள், நகுலனிடம் ரொம்ப exclusive-வாக இருக்கும். ஆனால் ஞானக்கூத்தன் ஒரு வகையான சந்தத்தில், யாப்பினால் வரக்கூடிய ஓசையில் பண்ணிக் கொண்டிருப்பதால் அவரை முழுக்க முழுக்க தமிழ் மரபு சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. பிற்கால மரபு சார்ந்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். இங்கே நவீன கவிதையைத் தோற்றுவித்தவர்கள் யாரும் கவிஞர்கள் அல்ல. ஃபிக்சன் ரைட்டர்ஸ்'. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் உள்பட எல்லோருமே சிறுகதை எழுத்தாளர்கள். க.நா.சு. மாதிரி ஒரு சிலர்தான் நாவலாசிரியர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிதாசன், பாரதிதாசன் பரம்பரையில் தமிழ்க்கவிதை நசிந்து பொங்கல் வாழ்த்து மாதிரி சம்பிரதாயமாக ஆகும்போது உலகக் கவிதைகளையெல்லாம் பார்த்து, நாமும் வேறு பாணியில் எழுதலாமே என்று தனித்தனியாக முயற்சி செய்தார்கள்.அதற்குப் பின் தான் 'எழுத்து' அமைப்பு வருகிறது. இங்க யாருமே கவிஞர்களாகயில்லை. ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாகத் தமிழ் வாழ்வு சார்ந்த , முக்கியமான கவிஞர்களாகக் கலாப்ரியா, சுகுமாரன், தேவதேவனைச் சொல்லலாம். அவர்களுடைய இன்னர் ரிதம் எப்படியிருக்கு. ஓசை எப்படியிருக்கு என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாகக் கூட வைத்துக் கொள்ளலலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஜெயமோகன், தேவதேவனை முன் வைத்து நவீன கவிதைகளை வகைப்படுத்தினார். அவருடைய புரிதல்கள் பற்றிய கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனைப் பொறுத்தவரை தொடர்ந்து ஏதாவது அரசியல் செய்து கொண்டிருப்பார். சுந்தர ராமசாமி இதுபோல முன்னர் தொடந்து செய்து கொண்டிருந்தார். இப்ப வயதாகிவிட்டதால் செய்வதில்லை. ஜெயமோகன் செயல்படுவது என்பதும் அரசியல் செய்வதென்பதும் சேர்ந்தே வருது. இங்கேயிருக்கும் கவிதைப் போக்கினை அவர் ஒரு சார்ட் அவுட்டுக்குள் கொண்டு வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் வெறும் அரசியல் மட்டும் செய்தால் அப்படியே அவரைத் தவிர்த்து விட்டுப் போயிடலாம். அவருக்கு லட்சியவாதம், கனவு, தத்துவம் சார்ந்த சிந்தனை என்று ஒரு உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனோபாவம் அவரிடம் இருக்கு. இந்த மாதிரி மனநிலை உள்ளவர்கள் தமிழில் வெகு சீக்கிரம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேவதேவனோடு சேர்த்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் தான் ஜெயமோகன் தேவதேவனை முன்வைத்துப் பேசுகிறார். கவிதையை முன் வைத்து பேசினாரென்றால் ஒரு கலாப்ரியாவையோ, விக்கிரமாதித்தனையோ, சுகுமாரனையோ பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அவர்களையெல்லாம் பிடிக்காமல் தேவதேவனைப் பிடிக்கிறது என்பதற்குக் காரணம் என்னவென்றால், தன்னுடைய லட்சிய மயக்கங்கள், கனவுகள், தத்துவார்த்தப் போக்குகளை முன்னெடுத்துச் சென்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயமோகனின் லட்சிய மனப்பான்மைக்கு தேவதேவன் மட்டும்தான் பொருத்தமாக இருப்பார். வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;கலாப்ரியாவை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சிதிலங்களை முன்னெடுத்து நிறுத்தினார். சுகுமாரனை எடுத்துக் கொண்டால் தகப்பனுக்கும், மகனுக்குமான விரோதமான போக்கு, இந்தச் சமூகத்தில் தனித்து அலைய வேண்டிய வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றி எழுதியிருக்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் ரைட்டர், அதனால் அவர் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் போயட்டை முன் வைக்கிறார் அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வாழ்வியல் சார்ந்து பேசுகின்ற கவிஞர்கள் மேற்கத்திய கவிதை போன்ற ஒரு அறிவியல் சார்ந்த தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடக்கூடியவர்களாகயில்லையே ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;தேவதச்சன் கொஞ்சம் தத்துவார்த்தக் கவிதைகளைத்தான் பேசிட்டிருக்கார். அவற்றை 'இன்டலக்சுவல்' என்று சொல்லாம். முழுக்க முழுக்கத் தத்துவம் சார்ந்து தமிழில் வரவில்லை தான். தத்துவம் படித்த மாணவர் என்பதால் தேவதச்சனின் கவிதைகள் அந்த அமைப்பிற்குள் வந்தது. ஆனந்துக்கும் அந்த ஈடுபாடிருந்தது. அதுக்கு முன்னாடி கே.ராஜகோபால் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அது வாசகர்களைச் சரியாகச் சென்றடையவில்லை. சி.எம். மணியுடைய கவிதைகள் தத்துவம் படிந்த ஒரு தத்துவமாக வரும். அது மேலோட்டமான தத்துவமாக இருந்ததே தவிர ஆழமானதாகயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தேவதேவனின் ஆரம்ப காலக் கவிதைகளில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பு நிறைய இருக்கும். அதை அவர் மறுக்கலாம், இல்லையென்று வாதிடலாம். ஆனால் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் படித்து விட்டு தேவதேவனைப் படித்தால் அந்தப் பாதிப்பு மிக ஆழமாக இருப்பதை உணரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கவிதைச் சூழலில் ஒரே மாதிரியான கவிதைப் போக்கு. அதாவது பசவய்யா என்று எடுத்துக் கொண்டால் அதனைத் தொடர்ந்து அதே பாணியிலான கவிதைகள். சில கவிதைகளில் பெயரை எடுத்துவிட்டால் ஒரே மாதிரியான கவிதையாகத்தான் இருக்கும் . இது எவ்வகையில் சாத்தியப்படுகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;நான் சங்கப் பாடல்களை மனம் போனவாறு படித்திருக்கிறேன்; ஒட்டுமொத்தமாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என்னுடைய பார்வையில் கபிலர், பரணர், அவ்வை, சாத்தியார் இந்த மாதிரி சில பேரோட பாடல்கள் தனியாகத் தெரியும். கலித்தொகையையே எடுத்து கொண்டீர்களானால் பத்து பன்னிரெண்டு கவிதைகள்தான் தனியாகத் தெரியும். மற்றவையெல்லாம் அவற்றின் நகல் மாதிரியோ அல்லது ஒரு ஸ்கூல் மாதிரியோ தெரியும். இது எல்லாக் காலத்திலேயும், எல்லா மொழியிலேயும் இருக்கின்ற ஒன்று. அதில் தனித்தன்மையோடு இருப்பவன்தான் கவிஞன். அதுதான் ரொம்பக் காலத்துக்கு நிக்கவும் செய்யும். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய கவிதைக்கான புரிதல்கள் என்ன? அல்லது ஒரு கவிதையை எப்படி உணர்ந்து கொள்கிறீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;சில கவிதைகளைப் பத்து ஆண்டு காலங்களுக்குப் பிறகு கூட புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் சமயவேலின் 'காற்றின் பாடல் கலைகள்' தொகுதியைப் படிக்கும்போது எனக்கு ரொம்பவும் சாதாரணமாகப்பட்டது. பத்து வருசத்துக்கப்புறம் இப்ப பார்க்கிறப்போ 'அடடா ரொம்ப நல்லாருக்கு' ன்னு தோணுது. அப்போது அவரிடம் அதைப் பற்றி பேசியிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார். அல்லது சரியான திசையை நோக்கிப் போயிருந்திருப்பார். 'ஐயோ நாம அதைச் செய்யலையே' என்ற வருத்தம் கூட எனக்கிருக்கு. எளிய சொற்களைக் கொண்டிருப்பதாலேயே அது சாதாரண கவிதை என்று நினைத்து விடக்கூடாது. ஆரம்ப காலத்தில் எனக்கு பிரமிளையே உள்வாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. இந்தக் கவிதையை இப்படிப் பார்க்கக்கூடாது என்று, நண்பர் என்ற முறையிலும் என்னை விட ஆங்கில அறிவு அதிகமுள்ளவர் என்ற முறையிலும் சமயவேல் மாதிரி நல்ல நண்பர்கள் எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் தற்போது என்.டி. ராஜ்குமார் என்ற இளைஞரோட கவிதைகளில் வாழ்வு புதுசாக இருக்கிறது. பேய் ஓட்டுவது, பேய் பிடிப்பது, மோகினிப் பிசாசு என்று புதிய விசயத்துடன், புதிய மொழிகளும் ஒரு மாயக் கவர்ச்சியுமாயிருக்கிறது. நாம திரும்பத் திரும்பப் படித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தூண்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதும், நல்ல கவிஞனைக் கண்டுபிடிப்பதும் திரும்பத் திரும்பப் படிப்பதனாலும் பயிற்சியின் மூலமும் தான் சாத்தியம் என்பது என்னோட தனிப்பட்ட அனுபவம். மேம்போக்காகப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.ஒரு கவிஞரின் இரண்டாவது தொகுதி வந்திருக்கும் என்றால் முதல் தொகுதியைப் படித்து அது எந்த மாதிரி வந்திருக்கிறது என்று இரண்டிலும் ஒரு பார்வை இருக்க வேண்டும். முக்கியமாக நவீன கவிதைக்கு அந்தப் பார்வை அவசியம் தேவைப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சங்கப் பாடல்களைப் பற்றி நமக்கு எல்லாமே கற்றுத் தரப்பட்டிருக்கிறது. சின்ன வயதில் பள்ளிக்கூடங்களில், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூட அதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். நவீன கவிதையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டி வேண்டியிருக்கிறது. அது நானாகயிருக்கலாம். அல்லது இன்னொரு கவிஞனாக இருக்கலாம். அதற்கான தொடர்ந்த வாசிப்பும், அந்தக் கவிதைகளைப் பற்றி பேசுவதும் தொடர்ச்சியாக இருக்கும் போதுதான் நவீன கவிதை சரியாக முன் வைக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'ரொமான்டிக் கவிஞர்' என்று உங்களைச் சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன்தான் என்னை 'ரொமான்டிக் கவிஞர்' என்று சொன்னார். எழுதி எழுதி எனக்குள் ஒரு பகுதியைக் காலியாக்கிவிட்டேன. ஒரே மாதிரியாக எழுதுவது எனக்கே அலுப்பாயிருந்தது. ஒரு பால்ய கால சிநேகிதியைப் பற்றி எழுதிப் பார்க்கலாம் அல்லது குடும்ப வாழ்க்கையில் மனைவி சார்ந்த இனிமையான நிகழ்வுகளை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இளைஞ நண்பர்கள் எல்லாருமே, 'ஏன் அண்ணாச்சி ஒரே மாதிரி எழுதுறீங்க. ஃபிக்சன்(fiction) எழுதிப் பாருங்க, கவிதை பற்றிய கட்டுரை எழுதுங்க. அல்லது கொஞ்ச நாளைக்கு எழுதாமலிருங்க' என்றார்கள். 'எழுதுகிறவைகளை எல்லாம் அப்படியே பத்திரிகைக்கு அனுப்பாதீங்க. கொஞ்சம் தெரிவு செய்து அனுப்புங்களேன்' என்றும் சொன்னார்கள். அதனால் ரொமான்டிக் எழுதிப் பார்த்தேன். எனது சொந்த வாழ்க்கையில் ரொமான்டிக் பக்கமே கிடையாது. என்னோட சிறு வயதில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடியே உணவு தேட வேண்டியதாயிடுச்சு. கல்வி தேடுவது, வேலை தேடுவது என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கையின் அடிப்படையான விசயங்களைத் தேடுவதிலேயே என்னோட காலம் போய் விட்டது. இப்ப ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னாடிதான் கொஞ்சம் ரொமான்டிக் கவிதை எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிரேம் ரமேஷ், சமயவேல் மாதிரி நண்பர்கள் என்னை 'ஆன்டிக் பொயட்' என்று தான் சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சங்கப்பாடல்கள் மீது அளவு கடந்த காதலிருந்தது. அதைப்போல வாழ்க்கையில் இனிமையான விஷயங்களை எழுதலாம் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;'தனிப்பாட்டுத் திரள்' பார்த்தீர்களானால் ஒரு வறட்சியான எதிர்க்கவிதையாக இருக்கும்.கவிதை சார்ந்து ஆங்கில அறிவு எனக்குக் குறைவு என்பதால் இந்த இரண்டு விஷயங்களும் தமிழ் மரபு சார்ந்துதான் அமைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் 'கவிமூலத்தில்' காணப்படும் மனிதர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருக்கிறார்களே எப்படி?அல்லது எல்லோரையும் நீங்கள் நல்லவர்களாகப் பார்க்கிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் பார்த்தால் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். அப்படி நான் கான்ஷியசாகப் (consious) பார்க்கவில்லை. நான் சொல்லியிருக்கின்ற மனிதர்களுக்குள் ஒரு இனிமையான பகுதி இருந்திருக்கலாம் அல்லது எனக்கே மரபு சார்ந்த ஒரு நல்ல அணுகுமுறை இயல்பிலேயே அமைந்திருந்திருக்கும். உண்மையில் மனிதர்களை நல்லவர்களாகப் பார்க்க முயற்சி செய்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக் கவிதைகளிலிருக்கும் வெவ்வேறு தளங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கவிதையை விட ஈழத்துக் கவிதை சிறந்தது என்று எண்பதுகளிலிருந்து பிரச்சாரம் பண்ணிட்டு வர்றாங்க. 'இலக்கு' நடத்திய கருத்தரங்கில் நானே மேடையில் இதை மறுத்துப் பேசியிருக்கிறேன். ஈழத்திலிருக்கின்ற அரசியல், சமூக நிலைமைகள் வேறு. இங்கேயிருக்கின்ற அரசியல் சூழல் வேறு. அதைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஜெயபாலன்கிட்ட இதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆதவன்கிட்ட நிறையப் பேசியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தமிழ்க்கவிதை பற்றி, நகுலன் கவிதை வரைக்கும் ஒத்த சிந்தனையிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கும், ஈழத்துக் கவிதைக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது என்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. தமிழ் என்ற மொழியில் எழுதுவதாலேயே அவற்றைத் தமிழ்க்கவிதையாகக் கருத வேண்டுமென்றோ அங்கீகரிக்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதையைப் பொறுத்தவரையில் இலங்கை சார்ந்த கவிதைகளையெல்லாம் படித்து விடுவேன். ஈழத்துக் கவிஞர்களான ஜெயபாலன், சேரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஈழத்துக் கவிதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் வேறு வேறாகத்தான் பார்க்கிறேன். இப்போதுதான் ஈழத்துக் கவிதைகள் ஒரு கட்டமைப்புக்குள் வந்திருக்கிறது. அவர்களுக்குக் கவிதைகள் மிக நீளமாக இருக்க வேண்டும். மனுஷ்ய புத்திரனிடம் எனக்கிருக்கின்ற சங்கடமே அதுதான். ஒரு விஷயத்தை எழுத ஆரம்பித்தார் என்றால் இரண்டு பக்கத்திற்கு இழுத்துக் கொண்டே போவார். இருபத்தைந்து வரிகளுக்கு மேலே ஒரு கவிதையை என்னால் படிக்க முடிவதில்லை. கவிதை என்பது ஒரு பொறி. அது மிக நீளமானதாகயிருக்க முடியாது. இப்ப பரவாயில்லை. சின்னதாக எழுதுகிறார்கள். ஆனாலும் சமயங்களில் மூன்று பக்கத்துக்குப் போய் விடுகிறது. இவையெல்லாம் தாண்டி அவர்களுக்கு ஒரு அரசியல், சமூக நோக்கம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம். அதற்காகத் தமிழ்நாட்டுக் கவிஞர்களை விட இலங்கைக் கவிஞர்கள் பெரிய ஆளுங்க என்று எந்தக் காலத்திலும் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இதைத் தாராளமாக நீங்கள் பதிவு பண்ணிக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்? &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கவிதை மேலே அக்கறை வேண்டும். நீண்ட கால உழைப்பு வேண்டும். ஒரு பத்து ஆண்டு உழைப்பு இருந்தால் ஒரு நல்ல நாவலாசிரியராகி விடலாம். ஆனால் கவிதை வந்து அப்படி பத்து ஆண்டுகளில் கைகூடி வந்து விடாது. அதில் ஆழ்ந்து போய் விட முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை தன் போக்கில் அப்படி வரலாம். அது ரொம்ப அபூர்வமானது. அப்படித் தன் போக்கில் அமைந்து விடுவதில் கூட அதை வளர்த்தெடுத்துப் போவதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான உழைப்பு வேண்டும். தொடர்ந்த வாசிப்பும், தொடர்ந்து அதைப் பற்றி யோசிப்பதும், கவிதை பற்றிய சரியான பார்வையும் மிகவும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7332626160905116576?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7332626160905116576/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7332626160905116576&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7332626160905116576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7332626160905116576'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/02/blog-post_837.html' title='கவிஞர் விக்கிரமாதித்யனுடன் நேர்காணல் -மறுபதிவு'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2poi9yoiGI/AAAAAAAAATk/6zjt4hOcvnI/s72-c/vikki.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8685603384093184455</id><published>2010-02-01T08:13:00.000-08:00</published><updated>2010-02-01T08:18:03.527-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>விக்கிரமாதித்யன் என்ற ஆளுமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2b-DCxzawI/AAAAAAAAASU/qJBdF0iTzSw/s1600-h/vik.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2b-DCxzawI/AAAAAAAAASU/qJBdF0iTzSw/s320/vik.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5433309328707906306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2b99vhq5II/AAAAAAAAASM/8-ml_anWsBY/s1600-h/vikki.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2b99vhq5II/AAAAAAAAASM/8-ml_anWsBY/s320/vikki.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5433309237640619138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு தமிழின் சிறந்த இலக்கிய விருதான விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பாராட்டு விழா 31.01.2010 அன்று நடந்தது. மிகப்பெரிய கூட்டம் இல்லை. ஆனால் அவரை விரும்பியவர்கள் அல்லது அந்த ஆளுமையை புரிந்துகொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். விக்கிரமாதித்யனைப் பற்றி சொல்லும்போது காடாறு மாதம் நாடாறுமாதம் வாழ்கிறவர் என்பார்கள். அவரை விரும்பியவர்களால் நாடோடி நம்பியண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருடைய வாழ்க்கை முழுதும் பயணத்தால் நிரம்பியிருக்கிறது. அது தத்துவார்த்தமும் விரக்தியும் வறுமையும் தேடலுமான பயணம். விக்கிரமாதித்யனை ஒரு கவிஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அப்படி கவிஞனாக வாழ்வதில் உள்ள பொருளாதார சிக்கலும் மனச்சிக்கலும் மிகப் பெரிது. வலி நிறைந்தது. ஒரு கவிஞனாக வாழ்வதில் அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரால் ஒரு கவிஞனாக மட்டுமே வாழமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கான  விளக்கு விருது பாராட்டு விழாவில் மிக அசௌகரியமாகவே உட்கார்ந்திருந்தார். ஆம் அவர் மேடையையும் பாராட்டையும் விரும்பவில்லை என்றே தெரிந்தது. அவர் தன்பின்னால் எந்த ஒளிவட்டத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மிகச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது.  அவரைப்பற்றி, கவிதையில்  அவர் ஆளுமையைப்பற்றி, அவர் வாழ்க்கையைப்பற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும் போது அதை மிக ஆர்வமாக எளிமையாக எதிர்கொண்டார். சிலசமயம் வெட்கத்தோடு ஒரு சிறுவனைப் போல் சிரித்துக்கொண்டார்.  என்னை அவரிடம் பலமுறை பலபேர்(இலக்கிய நண்பர்கள்) அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவங்களை எனக்கு ‘நல்லாத் தெரியுமே’ என்பார். ஆம் அவரை ஆறாம்திணை இணைய இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அப்பொழுது முதல் இலக்கிய கூட்டங்கள் புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் போது நினைவு கூர்ந்துகொள்வார். நேர்காணலில் மட்டும் அவரிடம் நிறைய பேசினேன். அதன்பின்னான சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளோடு பேச்சு முடிந்துவிடும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை அங்கங்கே கேட்டுக்கொண்டே இருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஏனேன்று தெரியவில்லை. அவருடைய கவிதையை விட அவருடைய வாழ்க்கை மிகவும் அவதானிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு கவிஞனின் நலிந்த வாழ்க்கை சுவாரஸ்யத்தை கொடுக்கிறதா? இது மிகப்பெரிய கேள்வியாக எனக்குள் இருக்கிறது. சமிபத்தில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாளை அவரிடம் தெரியபடுத்த படக்குழுவினர் முற்பட்டபோது வழக்கப்போல் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் செல்போனும் கிடையாது. அவர் பாடல் எழுதும் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டார். அதைப்பற்றி விசனத்தோடு இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போதும்போல் சிரித்த முகத்தோட இருக்கிறார். இந்த விசயம் கேள்விப்படும் அனைவரும் ‘ஏன் இவர் இன்னும் பொழைக்கத் தெரியாம இருக்கிறார்’ என்பார்கள். அவை எல்லாவற்றிர்க்கும் அவருடைய பதில் ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும்.  நான் கடவுள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது பற்றியும் அவருக்கு பெரிதான அபிப்ராயம் இருப்பதுமாதிரி தெரியவில்லை. அதையும் தன் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாகவே நினைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக எழுத வருபவர்களை எந்த தலைமைப்பீடத்தையும் தலையில் வைத்துக்கொள்ளாமல் பாராட்டி வளர்த்துவிடுவார் என்பார்கள். ‘ஆரம்பகாலத்தில் விக்கிரமாத்தியன்தான் என் எழுத்தை பாராட்டி அதை பத்திரிக்கைகளில் வெளிவருவதற்காகவும் முயற்சி செய்தார்’ என்று அஜயன்பாலா விழாவில் பேசினார். விக்கிரமாதித்யனைப்பற்றி பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விக்கிரமாதித்யனுக்கு நடிகை விஜயசாந்தியை பார்க்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. அஜயன்பாலாவை அழைத்துக்கொண்டு விஜயசாந்தி வசிக்கும் தி.நகர் ப்குதியில் ராத்திரியெல்லாம் அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இது ஒரு சாதாரண ரசிகன் ஒரு நடிகையை பார்க்கும் ஆவலைப்போல் இல்லை. அவருக்கும் தெரிந்திருக்கும் ராத்திரியில் ஒரு நடிகையின் வீட்டை கண்டுபிடித்து அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பது. இருந்தும் அந்த ராத்திரி முழுதும் அந்த நடிகையின் ஞாபகத்தில் இருக்க விரும்பி இருக்கிறார். அந்த கவிதை மனது சரியானதா இல்லையா என்பது விசயம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். அதேபோல் ‘பருவராகம்’ என்றொரு இதழ். அது ஒரு பாலியல் விசயங்களை உள்ளடக்கிய இதழ். அந்த இதழில் விக்கிரமாதித்யனின் கவிதை ஒரு காலத்தில் வந்திருக்கிறது. அந்த இதழுக்கெல்லாம் எழுதி அவர் சம்பாதிதார் என்று அர்த்தம் இல்லை. அது எதிர்புரட்சியும் அல்ல. வாழ்க்கை மீது விருப்பு வெறுப்பு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு சுவை அதில் அடங்கியிருக்கிறது. காலம் இவரை தவறவிட்டுக்கொண்டிருக்கும் அல்லது சிலநேரம் காலத்தை இவர் தவறவிட்டுக்கொண்டிருப்பார். எதுவாக இருந்தாலும் காலம் இவரை ஒரு கவிஞனாக வைத்திருக்கிறது. இது சாபமா? வரமா? என்று தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8685603384093184455?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8685603384093184455/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8685603384093184455&amp;isPopup=true' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8685603384093184455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8685603384093184455'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/02/blog-post.html' title='விக்கிரமாதித்யன் என்ற ஆளுமை'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S2b-DCxzawI/AAAAAAAAASU/qJBdF0iTzSw/s72-c/vik.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8243886097858786176</id><published>2010-01-26T12:01:00.000-08:00</published><updated>2010-01-26T16:22:56.118-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாலை பற்றிய பகிர்வுகள்'/><title type='text'>நினைவில் நீ, நான் மற்றும் சாலை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S19LHGNS1kI/AAAAAAAAASE/vMyDzogz6uo/s1600-h/salai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S19LHGNS1kI/AAAAAAAAASE/vMyDzogz6uo/s320/salai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5431142260929648194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மழையில்  உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8243886097858786176?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8243886097858786176/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8243886097858786176&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8243886097858786176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8243886097858786176'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/01/blog-post_26.html' title='நினைவில் நீ, நான் மற்றும் சாலை.'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S19LHGNS1kI/AAAAAAAAASE/vMyDzogz6uo/s72-c/salai.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5419545333488112305</id><published>2010-01-22T09:37:00.000-08:00</published><updated>2010-01-22T09:40:45.078-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காதலை பிரியாதீர்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S1njDB6alMI/AAAAAAAAAR8/vkCK5au7-H8/s1600-h/love+girl.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S1njDB6alMI/AAAAAAAAAR8/vkCK5au7-H8/s320/love+girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429620466964403394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழையடிக்கும் பொழுதுகள் &lt;br /&gt;காதலைச் சொல்லும் தூதகணங்கள் &lt;br /&gt;அன்பர்களே&lt;br /&gt;உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.&lt;br /&gt;காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்&lt;br /&gt;எனவே சிறப்பானவர்களே &lt;br /&gt;விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு &lt;br /&gt;ஏதுவானது இல்லை அக்காலம்.&lt;br /&gt;தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்&lt;br /&gt;நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.&lt;br /&gt;வெம்மை தகிக்கும் கோடை&lt;br /&gt;உங்கள் அன்பானவர்களின்&lt;br /&gt;தற்கொலையைத் தூண்டும் &lt;br /&gt;நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.&lt;br /&gt;இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள் &lt;br /&gt;திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும் &lt;br /&gt;நோய்தாக்கும்.&lt;br /&gt;பருவமற்ற சாதாரண தினங்கள் &lt;br /&gt;பிரிந்த காதலை நினைத்து நினைத்து&lt;br /&gt;பித்துக்கொள்ளச் செய்யும். &lt;br /&gt;எந்தப் பருவமும் உகந்தல்ல &lt;br /&gt;காதலை விட்டுச் செல்வதற்கு&lt;br /&gt;எனவே &lt;br /&gt;எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-5419545333488112305?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/5419545333488112305/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=5419545333488112305&amp;isPopup=true' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5419545333488112305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5419545333488112305'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/01/blog-post_22.html' title='காதலை பிரியாதீர்கள்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S1njDB6alMI/AAAAAAAAAR8/vkCK5au7-H8/s72-c/love+girl.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8651913936157447483</id><published>2010-01-07T11:16:00.000-08:00</published><updated>2010-01-07T11:56:52.179-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் வெளியீடு'/><title type='text'>எனது இரண்டு நூல்கள் வெளியீடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8ez4-N_I/AAAAAAAAAR0/eWiZ4Wg54NU/s1600-h/19665_1160696228694_1566456284_30345663_2939971_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8ez4-N_I/AAAAAAAAAR0/eWiZ4Wg54NU/s320/19665_1160696228694_1566456284_30345663_2939971_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424089301237250034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8XL76zrI/AAAAAAAAARs/NcP09Vzi_WY/s1600-h/DSC_0072.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8XL76zrI/AAAAAAAAARs/NcP09Vzi_WY/s320/DSC_0072.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424089170253106866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8Oq3HVkI/AAAAAAAAARk/hzshibQH_HE/s1600-h/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8Oq3HVkI/AAAAAAAAARk/hzshibQH_HE/s320/19665_1160694148642_1566456284_30345641_3430277_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424089023935632962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8BueQDAI/AAAAAAAAARc/ntnhnJN6LCg/s1600-h/DSC_0064.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8BueQDAI/AAAAAAAAARc/ntnhnJN6LCg/s320/DSC_0064.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424088801566788610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறுகதைகள் மற்றும் கவிதை நூல்களை உயிர் எழுத்து பதிப்பகம்&lt;br /&gt;வெளியிட்டுள்ளது. கவிதைகள் தொகுப்பை கவிஞர் நா. முத்துக்குமார் வெளியிட&lt;br /&gt;கவிஞர் சமயவேல் மற்றும் நடிகர் ஜெய் பெற்றுக்கொண்டனர். சிறுகதை தொகுப்பை&lt;br /&gt;எழுத்தாளர் ஷோபா சக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகள் தொகுப்பு- 'காட்டின் பெருங்கனவு' &lt;br /&gt;&lt;br /&gt;'மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் &lt;br /&gt;பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது'-எழுத்தாளர் நஞ்சுண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள்-நீங்கிச் செல்லும் பேரன்பு&lt;br /&gt;&lt;br /&gt;'தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா'-கவிஞர் உமாஷக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10945&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8651913936157447483?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8651913936157447483/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8651913936157447483&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8651913936157447483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8651913936157447483'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2010/01/blog-post.html' title='எனது இரண்டு நூல்கள் வெளியீடு'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/S0Y8ez4-N_I/AAAAAAAAAR0/eWiZ4Wg54NU/s72-c/19665_1160696228694_1566456284_30345663_2939971_n.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4692903880305447261</id><published>2009-12-24T02:26:00.001-08:00</published><updated>2009-12-24T02:28:48.725-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>துயர்கொண்ட பாடல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzNB9bn6GxI/AAAAAAAAAQ0/SA9qiB5ktoQ/s1600-h/Lady-with-a-Candle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzNB9bn6GxI/AAAAAAAAAQ0/SA9qiB5ktoQ/s320/Lady-with-a-Candle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418747300299807506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னும் மீட்டப்படாமல்&lt;br /&gt;புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்&lt;br /&gt;என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே&lt;br /&gt;கடைசியாக&lt;br /&gt;கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்&lt;br /&gt;கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு&lt;br /&gt;நீ என்னை ஆட்சிசெய்தாய்&lt;br /&gt;வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள் &lt;br /&gt;மயக்கமூட்டுகின்றன &lt;br /&gt;இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன &lt;br /&gt;காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்&lt;br /&gt;தடித்த முத்தங்களால்&lt;br /&gt;புண்ணாகிப்போன உதடுகள்&lt;br /&gt;கேலி செய்கின்றன&lt;br /&gt;மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்&lt;br /&gt;வாழ்வின் தீராத் துயரங்கள்&lt;br /&gt;அன்பின் நிழலுருவம் &lt;br /&gt;கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது&lt;br /&gt;தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;நடக்க மறுக்கும் கால்கள்&lt;br /&gt;அமைதியை விரும்புகிறது இதயம்&lt;br /&gt;எல்லாவற்றிர்க்கும் மேலே&lt;br /&gt;நானே எழுதிய&lt;br /&gt;துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4692903880305447261?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4692903880305447261/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4692903880305447261&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4692903880305447261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4692903880305447261'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_24.html' title='துயர்கொண்ட பாடல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzNB9bn6GxI/AAAAAAAAAQ0/SA9qiB5ktoQ/s72-c/Lady-with-a-Candle.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5954450345264283592</id><published>2009-12-23T21:39:00.000-08:00</published><updated>2009-12-23T21:44:57.080-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அறையில் மரித்த பட்டாம்பூச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzL_K325bpI/AAAAAAAAAQs/yeoVTHKL7dQ/s1600-h/Death_Butterfly_by_FotoJenn.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzL_K325bpI/AAAAAAAAAQs/yeoVTHKL7dQ/s320/Death_Butterfly_by_FotoJenn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418673863938109074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த&lt;br /&gt;வழிதவறிய பட்டாம்பூச்சி&lt;br /&gt;என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது&lt;br /&gt;சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில் &lt;br /&gt;பளபளத்த அதன் இறக்கைகள்&lt;br /&gt;சோர்ந்து துவண்டிருந்தன&lt;br /&gt;பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை &lt;br /&gt;பெருநகரத்தின் நிலம்&lt;br /&gt;எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி&lt;br /&gt;பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து&lt;br /&gt;வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது&lt;br /&gt;ஆனால் இறந்த பட்டாம்பூச்சி &lt;br /&gt;அம்மாவின் கவலை&lt;br /&gt;இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா&lt;br /&gt;புதைத்துவிடு மகனே என்றேன்&lt;br /&gt;இடம் தேடி அலைந்தான் மகன்&lt;br /&gt;கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்&lt;br /&gt;அவனைச் சோர்வடையச் செய்தன&lt;br /&gt;கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்&lt;br /&gt;புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன&lt;br /&gt;பட்டாம்பூச்சி பற்றி &lt;br /&gt;மகன் எழுதிய சிறந்த கவிதை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-5954450345264283592?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/5954450345264283592/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=5954450345264283592&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5954450345264283592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5954450345264283592'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_23.html' title='அறையில் மரித்த பட்டாம்பூச்சி'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SzL_K325bpI/AAAAAAAAAQs/yeoVTHKL7dQ/s72-c/Death_Butterfly_by_FotoJenn.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7105202514172694521</id><published>2009-12-18T01:38:00.000-08:00</published><updated>2009-12-18T01:42:14.711-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SytOGn94PzI/AAAAAAAAAQk/5FKVMUB5L_I/s1600-h/sad+w.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SytOGn94PzI/AAAAAAAAAQk/5FKVMUB5L_I/s320/sad+w.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416508852557856562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் கருந்தசைகளை &lt;br /&gt;தின்ன ஆசைப்பட்டபோது&lt;br /&gt;உன் காதலைச் சொன்னாய்&lt;br /&gt;மாமிச பட்சியின் &lt;br /&gt;ஒளிர்ந்த கண்கள்&lt;br /&gt;கிளர்ச்சியூட்டியது&lt;br /&gt;இதயத்தில் அல்லாது&lt;br /&gt;மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்&lt;br /&gt;குற்றவுணர்வில்லையே என்றபடி&lt;br /&gt;லிங்கத்தை கூர்மையாக்கி&lt;br /&gt;என் துயரினில் செருகினாய்&lt;br /&gt;அதிர்ந்தது உடல்&lt;br /&gt;கீற்றைப்போல் கூட&lt;br /&gt;அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்&lt;br /&gt;துக்கத்தை முழுமையாக்கினாய்&lt;br /&gt;என் உடலை காகங்களுக்கு&lt;br /&gt;தின்னக் கொடுத்தேன்&lt;br /&gt;மாமிச வாடை&lt;br /&gt;பிரபஞ்சத்தை நிறைக்கிறது.&lt;br /&gt;             &lt;br /&gt;&lt;br /&gt;               2&lt;br /&gt;&lt;br /&gt;மென் சொற்களில் துவங்கியது &lt;br /&gt;வன் சொற்களில் முடிகிறது .&lt;br /&gt;விலங்குகளின் உருமல்களோடு &lt;br /&gt;தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது &lt;br /&gt;பாவிகளின் ஆன்மா .&lt;br /&gt;வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்&lt;br /&gt;ஒளிந்திருக்கிறது &lt;br /&gt;அவர்களுக்கான நேசம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7105202514172694521?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7105202514172694521/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7105202514172694521&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7105202514172694521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7105202514172694521'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_18.html' title='பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SytOGn94PzI/AAAAAAAAAQk/5FKVMUB5L_I/s72-c/sad+w.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-9174255290687925804</id><published>2009-12-14T10:41:00.000-08:00</published><updated>2009-12-14T10:47:27.661-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பெருமழைக் காலம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyaHiiHO3QI/AAAAAAAAAQc/PTWZaOCEA20/s1600-h/shalott32.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 253px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyaHiiHO3QI/AAAAAAAAAQc/PTWZaOCEA20/s320/shalott32.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5415164629302041858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நகரம் பெருமழையாய் காட்சியளித்தது&lt;br /&gt;அவனுக்காக&lt;br /&gt;மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்&lt;br /&gt;வெகுநேரம் காத்திருந்தாள்&lt;br /&gt;அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்&lt;br /&gt;நகரை மூழ்கடித்தது&lt;br /&gt;எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்&lt;br /&gt;தன்னை அடைவான் என்றிருந்தாள்&lt;br /&gt;தன் சுவடுகளை அருவமற்று அழித்து&lt;br /&gt;அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்&lt;br /&gt;மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-9174255290687925804?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/9174255290687925804/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=9174255290687925804&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/9174255290687925804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/9174255290687925804'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_14.html' title='பெருமழைக் காலம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyaHiiHO3QI/AAAAAAAAAQc/PTWZaOCEA20/s72-c/shalott32.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-961621158333845918</id><published>2009-12-11T08:52:00.000-08:00</published><updated>2009-12-11T08:55:00.228-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ப்ரியமானவர்களின் தேவதை...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyJ5HIKuKcI/AAAAAAAAAQU/socKazIqeGU/s1600-h/be.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyJ5HIKuKcI/AAAAAAAAAQU/socKazIqeGU/s320/be.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414022865411254722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெருநீலக் கரையில் &lt;br /&gt;தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும்&lt;br /&gt;மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது&lt;br /&gt;அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள் &lt;br /&gt;சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள் &lt;br /&gt;அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-961621158333845918?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/961621158333845918/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=961621158333845918&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/961621158333845918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/961621158333845918'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_11.html' title='ப்ரியமானவர்களின் தேவதை...'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyJ5HIKuKcI/AAAAAAAAAQU/socKazIqeGU/s72-c/be.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2432571244638652487</id><published>2009-12-10T10:09:00.000-08:00</published><updated>2009-12-10T10:13:43.982-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வெளியேறும் பட்டாம்பூச்சிகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyE6CLIxoEI/AAAAAAAAAQM/14RpcFxw-9E/s1600-h/pow.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 248px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyE6CLIxoEI/AAAAAAAAAQM/14RpcFxw-9E/s320/pow.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413672036099792962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த&lt;br /&gt;ஒளிநிரம்பிய மழைநாளில்&lt;br /&gt;மலர்வாசனையில்&lt;br /&gt;மயங்கிக் கிடந்தன&lt;br /&gt;கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள் &lt;br /&gt;இறக்கை மூடாத அவைகளை &lt;br /&gt;எனது வலது கையில் &lt;br /&gt;வண்ணங்களாய் மலரச் செய்தேன்&lt;br /&gt;ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து&lt;br /&gt;என் கைகளில் ஊற்றி&lt;br /&gt;ஒளிநீரைக் குடி என்றாய்&lt;br /&gt;என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம்&lt;br /&gt;கையிலிருந்த பட்டாம்பூச்சிகள்&lt;br /&gt;திசையற்றுப் பறந்துபோயின&lt;br /&gt;அன்றிரவு ஒளிநிரம்பியநீர்&lt;br /&gt;சூடாக வெளியேறியது&lt;br /&gt;கொல்லையில் அமர்ந்திருந்த&lt;br /&gt;பலவண்ணப் பட்டாம்பூச்சிகள் &lt;br /&gt;என்னை பார்த்துச் சிரித்தன&lt;br /&gt;வெறுமை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-2432571244638652487?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/2432571244638652487/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=2432571244638652487&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2432571244638652487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2432571244638652487'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_3541.html' title='வெளியேறும் பட்டாம்பூச்சிகள்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SyE6CLIxoEI/AAAAAAAAAQM/14RpcFxw-9E/s72-c/pow.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-1774869226598073639</id><published>2009-12-09T09:37:00.001-08:00</published><updated>2009-12-09T09:40:11.324-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மறப்பதற்க்கு...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_gqmaxB3I/AAAAAAAAAP0/GZ799kzFUXk/s1600-h/Life_and_Death_by_Liol.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 177px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_gqmaxB3I/AAAAAAAAAP0/GZ799kzFUXk/s320/Life_and_Death_by_Liol.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413292299594565490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை &lt;br /&gt;துக்கமாய் இருங்கள்&lt;br /&gt;நீங்களே உங்களை வன்கத்தியால் &lt;br /&gt;இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள் &lt;br /&gt;கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-1774869226598073639?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/1774869226598073639/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=1774869226598073639&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1774869226598073639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1774869226598073639'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_1446.html' title='மறப்பதற்க்கு...'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_gqmaxB3I/AAAAAAAAAP0/GZ799kzFUXk/s72-c/Life_and_Death_by_Liol.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8780699472409503358</id><published>2009-12-09T08:08:00.000-08:00</published><updated>2009-12-09T08:13:40.210-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சொற்களின் நிரம்பாதவன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_MBzLXifI/AAAAAAAAAPM/PHW9oWff6gU/s1600-h/life.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_MBzLXifI/AAAAAAAAAPM/PHW9oWff6gU/s320/life.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413269608412449266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை&lt;br /&gt;முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன்&lt;br /&gt;நெம்பி வழியும் அது&lt;br /&gt;உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும்&lt;br /&gt;ஆனந்தம் அதில்&lt;br /&gt;விரும்பிச் சேரும் மீன்கள்&lt;br /&gt;சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில்&lt;br /&gt;உன்னைவிட&lt;br /&gt;ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று&lt;br /&gt;சொற்கள் உண்மையை விளம்பும்&lt;br /&gt;ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம்&lt;br /&gt;குற்றங்களே ஆனாலும் &lt;br /&gt;மனம் ஆராதிக்கும்&lt;br /&gt;இவனே சரியென்று...&lt;br /&gt;இடப்பட்ட சொற்கள் எல்லாம்&lt;br /&gt;ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும்&lt;br /&gt;அலைகழியும் மனதுடன் &lt;br /&gt;நிறைய சொற்களுடன்&lt;br /&gt;அவனைப் பிராத்தித்தால்&lt;br /&gt;சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான்&lt;br /&gt;கவனம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8780699472409503358?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8780699472409503358/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8780699472409503358&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8780699472409503358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8780699472409503358'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_09.html' title='சொற்களின் நிரம்பாதவன்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx_MBzLXifI/AAAAAAAAAPM/PHW9oWff6gU/s72-c/life.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-752207290670052488</id><published>2009-12-08T02:21:00.000-08:00</published><updated>2009-12-08T02:42:49.528-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>திரும்பி வராதவனின்.....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx4tUoRkanI/AAAAAAAAAPA/kTROXHx3GKg/s1600-h/sword+girl.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx4tUoRkanI/AAAAAAAAAPA/kTROXHx3GKg/s320/sword+girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412813634577656434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உன்னை நான் அடையாளம் காணாத &lt;br /&gt;அந்த முதல் தருணத்தில்&lt;br /&gt;கடும் தேனீர் சாப்பிட்டபடி&lt;br /&gt;ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த&lt;br /&gt;என்னை யாரென்று கவனித்து கேட்டேன்&lt;br /&gt;என்றாய் பின்னாளில்.&lt;br /&gt; அங்கேயே பெரும்நகரம் நடுங்க&lt;br /&gt;அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி&lt;br /&gt;கூட்டத்தில் செருகினாய்&lt;br /&gt;என் வன்மம் தூண்டி&lt;br /&gt;அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய்&lt;br /&gt;மற்றொரு சந்திப்பில் &lt;br /&gt;உன்னைக் கடந்து சென்ற போதும் &lt;br /&gt;பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன்&lt;br /&gt;பிரிதொருநாளில் &lt;br /&gt;என் நண்பர்களுடன் நீ நிற்கையில்&lt;br /&gt;எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது&lt;br /&gt;நீ சிறந்த கவிஞன் என்றேன்&lt;br /&gt;சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால்&lt;br /&gt;மரணம் மிக அருகில் நின்றது&lt;br /&gt;உயிர் எழுப்பும் ஒசையைப்போல&lt;br /&gt;பார்த்து போங்க உன் தாய்மையின் குரல்&lt;br /&gt;அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்&lt;br /&gt;இனி எல்லாம் நிகழும் என்பதை &lt;br /&gt;உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள்&lt;br /&gt;நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-752207290670052488?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/752207290670052488/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=752207290670052488&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/752207290670052488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/752207290670052488'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_08.html' title='திரும்பி வராதவனின்.....'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx4tUoRkanI/AAAAAAAAAPA/kTROXHx3GKg/s72-c/sword+girl.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8144408611221773559</id><published>2009-12-07T09:33:00.001-08:00</published><updated>2009-12-07T09:36:34.462-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அப்பாவோடு மடிந்த கடவுள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx082XMOu7I/AAAAAAAAAO4/FXZcBdhqPhM/s1600-h/JESUS.+1.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 178px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx082XMOu7I/AAAAAAAAAO4/FXZcBdhqPhM/s320/JESUS.+1.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412549231805119410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏசு முள்கீரிடம் சூட்டி&lt;br /&gt;சோகமாகக் காட்சியளித்த&lt;br /&gt;நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு&lt;br /&gt;அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு தூக்கத்தில்&lt;br /&gt;தாதியை அழைத்து&lt;br /&gt;பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி&lt;br /&gt;மருந்திடச் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கடவுளப்பா&lt;br /&gt;தானே உயிர்த்தெழுவார்&lt;br /&gt;என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;தலையசைத்து சமாதானம் அடைந்தார்&lt;br /&gt;மறுநாள்&lt;br /&gt;கடவுள் தன்னருகே&lt;br /&gt;படுத்துறங்கியதாகச் சொன்னார்&lt;br /&gt;எலும்பை உருக்கும்&lt;br /&gt;வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர்&lt;br /&gt;கடவுளும் கொடூர வலியின்&lt;br /&gt;உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா தூங்குங்கள்&lt;br /&gt;இசையை முடுக்கினேன்&lt;br /&gt;தலையை வருடினேன்&lt;br /&gt;தூங்கிப்போனார்&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கச் சடவில்&lt;br /&gt;பாவம் கடவுள்&lt;br /&gt;அவர் இறக்கும் தறுவாயில்&lt;br /&gt;இசையை கேட்டிருப்பாரா&lt;br /&gt;யாராவது அவர்மீது&lt;br /&gt;முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா&lt;br /&gt;அவர் கடவுளப்பா&lt;br /&gt;தானே உயிர்த்தெழுவார்&lt;br /&gt;என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா&lt;br /&gt;என்ற அப்பா&lt;br /&gt;தன் சிரசின் வழியே வெளியேறி&lt;br /&gt;மூடிய கதவை திறவாமல்&lt;br /&gt;இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது&lt;br /&gt;கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8144408611221773559?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8144408611221773559/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8144408611221773559&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8144408611221773559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8144408611221773559'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_07.html' title='அப்பாவோடு மடிந்த கடவுள்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Sx082XMOu7I/AAAAAAAAAO4/FXZcBdhqPhM/s72-c/JESUS.+1.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4008034915129366610</id><published>2009-12-05T00:00:00.000-08:00</published><updated>2009-12-05T00:05:33.019-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கனவுகளை வரையாதே அம்மா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxoT9sZubaI/AAAAAAAAAOg/SMDbSf9LTlY/s1600-h/anime_princess.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxoT9sZubaI/AAAAAAAAAOg/SMDbSf9LTlY/s320/anime_princess.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5411659852851080610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பருத்தி பூ போட்ட சட்டையணிந்து&lt;br /&gt;மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே&lt;br /&gt;என் கனவில் என்றேன்&lt;br /&gt;நான் பால்யம் அற்றவள் அம்மா&lt;br /&gt;நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை&lt;br /&gt;ஏன் அம்மா என் கனவுகளை &lt;br /&gt;நீ கண்டுகொண்டிருக்கிறாய்&lt;br /&gt;கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள்&lt;br /&gt;எனக்குச் சொந்தமானவை&lt;br /&gt;கனவுகளில் என் ரெக்கைகளை&lt;br /&gt;வரையாதே அம்மா&lt;br /&gt;இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன&lt;br /&gt;என் விளையாட்டினைப் பூட்டி &lt;br /&gt;உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய்&lt;br /&gt;உன் தோழமைகள் &lt;br /&gt;எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது&lt;br /&gt;வந்துபோகும் அவைகளை&lt;br /&gt;நான் வெறுக்கிறேன் அம்மா&lt;br /&gt;உன் குழந்தமையும் பால்யமும்&lt;br /&gt;என்னை பொறுமையிழக்கச் செய்கிறது&lt;br /&gt;பொறுத்துக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல்&lt;br /&gt;என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே&lt;br /&gt;ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்&lt;br /&gt;உன் குருட்டுத்தனத்தால்&lt;br /&gt;போ அம்மா &lt;br /&gt;கருப்பு வெள்ளையிலான&lt;br /&gt;என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4008034915129366610?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4008034915129366610/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4008034915129366610&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4008034915129366610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4008034915129366610'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post_05.html' title='கனவுகளை வரையாதே அம்மா'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxoT9sZubaI/AAAAAAAAAOg/SMDbSf9LTlY/s72-c/anime_princess.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-1223334335943955470</id><published>2009-12-01T19:18:00.000-08:00</published><updated>2009-12-01T19:28:26.102-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விட்டுச் சென்றவனின் நிழல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxXePDcflrI/AAAAAAAAAOY/oS_tzUepdOU/s1600-h/rasta.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxXePDcflrI/AAAAAAAAAOY/oS_tzUepdOU/s320/rasta.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5410474877559740082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நினைவுகள் &lt;br /&gt;அறையில் சுருங்கி&lt;br /&gt;காய்ந்த டீக்கோப்பையின்&lt;br /&gt;கருநிறத்தை மிஞ்சும்&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் &lt;br /&gt;ஆந்தையின் அலறலாய்&lt;br /&gt;ஆதிச் சொற்கள்&lt;br /&gt;கருகி சாம்பலாகும்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களில்&lt;br /&gt;பூச்சி மேய்ந்து &lt;br /&gt;எச்சங்களை சிதறடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பலநாள்களாய் மாற்றப்படாத&lt;br /&gt;படுக்கை விரிப்பிலிருந்து&lt;br /&gt;கலவியின் தீய்ந்த வாசனை&lt;br /&gt;குற்றவுணர்ச்சியைப் பெருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சவலைப்பிள்ளைபோல்&lt;br /&gt;மெல்ல ஊர்ந்து செல்லும் வெயிலாய்&lt;br /&gt;குழந்தையின் குதூகலங்கள்&lt;br /&gt;மௌனத்தில் உறையும்&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் நிழல்படிந்த இந்நாள்களில்&lt;br /&gt;அவன் எங்களை கைவிட்டுப் போயிருந்தான்  &lt;br /&gt;ஓநாயின் விழிகளை ஒத்த அவனது நிழலை &lt;br /&gt;என் அறையைவிட்டு வெளியேறச் செய்தேன் &lt;br /&gt;அமைதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-1223334335943955470?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/1223334335943955470/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=1223334335943955470&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1223334335943955470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/1223334335943955470'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/12/blog-post.html' title='விட்டுச் சென்றவனின் நிழல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxXePDcflrI/AAAAAAAAAOY/oS_tzUepdOU/s72-c/rasta.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2189250366062036605</id><published>2009-11-27T16:53:00.000-08:00</published><updated>2009-11-29T19:57:01.839-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நீங்காத வனவிலங்கின் தனிமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxB18Cn1ARI/AAAAAAAAAOQ/f1ErkKHB4BQ/s1600/DeathandLife.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxB18Cn1ARI/AAAAAAAAAOQ/f1ErkKHB4BQ/s320/DeathandLife.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408952826828488978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீங்கள் செய்யும் &lt;br /&gt;ஒவ்வொரு காரியத்திலும்&lt;br /&gt;வளர்ப்பு பிராணியாக்கப்பட்ட &lt;br /&gt;நான் உடனிருந்தேன்&lt;br /&gt;வாலாட்ட மட்டுமே&lt;br /&gt;பழக்கப்படுத்தப்பட்ட&lt;br /&gt;என் குரல்வளை&lt;br /&gt;நசுக்கப்பட்டிருந்தன&lt;br /&gt;அது இயல்பென்றிருந்தேன்&lt;br /&gt;உங்களுக்கு கோபம் &lt;br /&gt;வரும்போதெல்லாம்&lt;br /&gt;என்மேல் &lt;br /&gt;சிறுநீர் கழித்தீர்கள்&lt;br /&gt;போதையின் உச்சத்தில்&lt;br /&gt;என் மேல் காரி உமிழ்ந்தீர்கள்&lt;br /&gt;குருட்டு பிச்சைக்காரியைப்போல்&lt;br /&gt;திசையற்று பார்த்து&lt;br /&gt;துடைத்துக்கொண்டேன்&lt;br /&gt;எல்லாம் அன்பின் மிகுதியால்&lt;br /&gt;நிகழ்த்தப்படுகிறது&lt;br /&gt;என்றே கட்டமைக்கப்பட்டிருந்தேன்&lt;br /&gt;கடைசியாக &lt;br /&gt;உங்களுக்கு நன்றி செலுத்திய&lt;br /&gt;என் வாலை நறுக்க முற்பட்டபோது&lt;br /&gt;எனக்கு கூர்பற்கள்&lt;br /&gt;இருப்பதை மறந்துவிட்டிர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-2189250366062036605?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/2189250366062036605/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=2189250366062036605&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2189250366062036605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2189250366062036605'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_5744.html' title='நீங்காத வனவிலங்கின் தனிமை'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxB18Cn1ARI/AAAAAAAAAOQ/f1ErkKHB4BQ/s72-c/DeathandLife.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7528354602515209795</id><published>2009-11-27T10:10:00.000-08:00</published><updated>2009-11-27T10:16:41.849-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க்விதை'/><title type='text'>உயிர்வழி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxAWyp2VSDI/AAAAAAAAAN4/aB55e_bnqk8/s1600/IMG_7143_dance_of_death.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxAWyp2VSDI/AAAAAAAAAN4/aB55e_bnqk8/s320/IMG_7143_dance_of_death.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408848211954976818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் ஆன்மாவின்&lt;br /&gt;நிகறற்ற அன்பே&lt;br /&gt;உன் காலடியில் வைப்பதற்கு&lt;br /&gt;ரேகை படர்ந்த உள்ளங்கையின் வெம்மை&lt;br /&gt;எப்பவும் துளிர்ப்புடனே இருக்கும்&lt;br /&gt;என் உயிர்வழி கசியும் மூச்சு&lt;br /&gt;உன் இதயத் தசைகளைப் பிளந்து செல்வதை &lt;br /&gt;நீ எப்படித் தடுக்க முடியும்&lt;br /&gt;உள்ளே அனுமதிப்பதைத் தவிர&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7528354602515209795?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7528354602515209795/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7528354602515209795&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7528354602515209795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7528354602515209795'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_27.html' title='உயிர்வழி'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SxAWyp2VSDI/AAAAAAAAAN4/aB55e_bnqk8/s72-c/IMG_7143_dance_of_death.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2355507606547038609</id><published>2009-11-20T05:05:00.000-08:00</published><updated>2009-11-20T05:18:46.073-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பால்ய வனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwaVg7MbdpI/AAAAAAAAANw/vrkYVrALgRM/s1600/forest.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwaVg7MbdpI/AAAAAAAAANw/vrkYVrALgRM/s320/forest.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5406172795583035026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒளிஇருள் வெள்ளமாய்&lt;br /&gt;நீந்தின&lt;br /&gt;என் பால்யத்தின்&lt;br /&gt;சூட்டில்.&lt;br /&gt;பிறந்த மேனியாய்&lt;br /&gt;பாதாளம் சுருங்கும்&lt;br /&gt;இடிச்சிரிப்பில்&lt;br /&gt;வனாந்தரத்தின் தனிமையை நிறைத்தேன்&lt;br /&gt;கணங்கள் நொடிந்தன&lt;br /&gt;பூக்கள் வெடித்து&lt;br /&gt;மகரந்தம் பரப்பியது&lt;br /&gt;அருவியின் மோனநிலை&lt;br /&gt;குலைந்து&lt;br /&gt;பலதிசைகளிலும்&lt;br /&gt;பீறிட்டுச் சிதறியது&lt;br /&gt;சாம்பல் மேகத்திலிருந்து&lt;br /&gt;புற்கள்&lt;br /&gt;காட்டில் இறங்கி&lt;br /&gt;அற்ப ஒலியில்&lt;br /&gt;கூச்சலிட்டு மயங்கின&lt;br /&gt;ரீங்காரத்தை &lt;br /&gt;மறந்த வண்டுகள்&lt;br /&gt;பூக்களைப் புணர்ந்தன&lt;br /&gt;ஓடையின் பொன் மணலில்&lt;br /&gt;துயில் கொண்டிருந்த&lt;br /&gt;கூழாங்கற்கள் மேலெழும்பிக் குதித்தது&lt;br /&gt;காட்டின் நிறம் மறைந்தது&lt;br /&gt;நான் பால்யத்தின் வெளியில்&lt;br /&gt;யோனி மறந்தவளாயிருந்தேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-2355507606547038609?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/2355507606547038609/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=2355507606547038609&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2355507606547038609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2355507606547038609'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_5525.html' title='பால்ய வனம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwaVg7MbdpI/AAAAAAAAANw/vrkYVrALgRM/s72-c/forest.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4073959322213078001</id><published>2009-11-18T20:28:00.000-08:00</published><updated>2009-11-18T20:34:11.904-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwTKee7rQlI/AAAAAAAAANc/WLb5In5f4vg/s1600/blood_spatter.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwTKee7rQlI/AAAAAAAAANc/WLb5In5f4vg/s320/blood_spatter.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405668077799686738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwTJ4jANKrI/AAAAAAAAANU/iibgSC3rYAo/s1600/Caged_Bird_by_meijeanie.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwTJ4jANKrI/AAAAAAAAANU/iibgSC3rYAo/s320/Caged_Bird_by_meijeanie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405667426057398962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ செலுத்திய &lt;br /&gt;அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை &lt;br /&gt;உன் கண்முன்னே&lt;br /&gt;பிடுங்கவே உன்னை அழைத்தேன்&lt;br /&gt;வன்முறையின் துர்நாற்றங்கள்&lt;br /&gt;உனக்கு புதிதல்ல&lt;br /&gt;சிரிக்கவே செய்வாய்&lt;br /&gt;நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்&lt;br /&gt;நீ அமைதியாகவே இருப்பாய்&lt;br /&gt;குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை&lt;br /&gt;மௌனமாகவே வாங்கிச் செல்வாய்&lt;br /&gt;உன் குருட்டுப் புன்னகைக்குள்&lt;br /&gt;ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை&lt;br /&gt;நான் அறிவேன்&lt;br /&gt;அன்பே&lt;br /&gt;உதிராத உன் அன்பினை&lt;br /&gt;ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது&lt;br /&gt;நீ என்றும் சலிக்காதவன்&lt;br /&gt;அன்பின் ஆகுருதியில் செலுத்த&lt;br /&gt;விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்&lt;br /&gt;அன்பின் ஓட்டைகளை அடைப்பது&lt;br /&gt;எப்படி என்பதை&lt;br /&gt;உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா&lt;br /&gt;சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்&lt;br /&gt;அவையற்று பின்தொடராது&lt;br /&gt;உன் நிழலின் நாய்க்குட்டி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4073959322213078001?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4073959322213078001/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4073959322213078001&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4073959322213078001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4073959322213078001'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_3555.html' title='குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwTKee7rQlI/AAAAAAAAANc/WLb5In5f4vg/s72-c/blood_spatter.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-7722293691833410179</id><published>2009-11-15T11:10:00.000-08:00</published><updated>2009-11-15T11:15:48.946-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வாழ்வின் ருசி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwBTEvzdwaI/AAAAAAAAAMw/BZsYOrx4fBM/s1600-h/railway_station.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwBTEvzdwaI/AAAAAAAAAMw/BZsYOrx4fBM/s320/railway_station.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404410893861503394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெகுநேரமாய்&lt;br /&gt;தனிமையின் சோகை பிடித்த&lt;br /&gt;ரயில் நிலையத்தில்&lt;br /&gt;விசிலுடன் காத்திருந்தான்&lt;br /&gt;கெண்டைக்காலுக்குமேல்&lt;br /&gt;சேலை உயர்ந்து&lt;br /&gt;கறுத்த கொலுசின்&lt;br /&gt;ஒலியில்&lt;br /&gt;நடந்து வருவது&lt;br /&gt;தாமரைதான்&lt;br /&gt;வயிறு புரண்டு வலித்தது&lt;br /&gt;தோளில் படுத்திருந்த&lt;br /&gt;குழந்தை&lt;br /&gt;அவள் சாயலிலே இருந்தது&lt;br /&gt;பால்ய சாயல்&lt;br /&gt;காணாமல் போயிருந்த அவனைக்&lt;br /&gt;கடந்து போனாள் காற்றைப்போல.&lt;br /&gt;கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும்&lt;br /&gt;ஓடிப்போய் &lt;br /&gt;அவள் கையிலிருந்த பையைவாங்கி&lt;br /&gt;தன் கைக்குள் திணித்துக்கொண்டவன் &lt;br /&gt;அவள் பின்னாலிருந்து&lt;br /&gt;புன்னகை வழிய&lt;br /&gt;குழந்தையைக் கொஞ்சியபடி போனான்&lt;br /&gt;நல்லவிதமாய்த்தான் இருக்கிறது &lt;br /&gt;வாழ்க்கை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-7722293691833410179?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/7722293691833410179/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=7722293691833410179&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7722293691833410179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/7722293691833410179'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post_15.html' title='வாழ்வின் ருசி'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SwBTEvzdwaI/AAAAAAAAAMw/BZsYOrx4fBM/s72-c/railway_station.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-6007696496336885665</id><published>2009-11-08T08:59:00.000-08:00</published><updated>2009-11-08T09:02:52.189-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Svb5XnZX1PI/AAAAAAAAAMg/Z2BJv_k7m4w/s1600-h/angel_of_death-3large.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Svb5XnZX1PI/AAAAAAAAAMg/Z2BJv_k7m4w/s320/angel_of_death-3large.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401778987185198322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்ளங்கையில் பரந்து விரிந்து&lt;br /&gt;நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து&lt;br /&gt;குருதி வெள்ளமாக&lt;br /&gt;பாய்கிறது &lt;br /&gt;உன் அன்பின் நெடிய வாசனை&lt;br /&gt;கொதி அமிலமாய்&lt;br /&gt;அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய்&lt;br /&gt;நாறி சீழ்வடியும் நீரை&lt;br /&gt;என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய்&lt;br /&gt;உலகின் உன்மத்தம் இதுவென்று&lt;br /&gt;நாட்டியமாடுகிறாய்&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;ஈரம் கசியும் என் புண்களில்&lt;br /&gt;உன்னால் ஒருநாளும் &lt;br /&gt;கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது&lt;br /&gt;லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி&lt;br /&gt;என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை&lt;br /&gt;பொதிந்து வைத்திருக்கிறேன்&lt;br /&gt;அதிகாரத்தின் அன்பை&lt;br /&gt;அவை &lt;br /&gt;ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும் &lt;br /&gt;அவ்வளவே&lt;br /&gt;அதன்முன் மண்டியிட்டு உன்னால்&lt;br /&gt;தோற்றுப்போகவே முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-6007696496336885665?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/6007696496336885665/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=6007696496336885665&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6007696496336885665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6007696496336885665'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/11/blog-post.html' title='என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/Svb5XnZX1PI/AAAAAAAAAMg/Z2BJv_k7m4w/s72-c/angel_of_death-3large.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4464456853437279669</id><published>2009-10-24T02:41:00.000-07:00</published><updated>2009-10-24T02:46:30.104-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நினைவுப்  புழுக்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuLMrGSVbPI/AAAAAAAAAMY/gXtVBd8qnNE/s1600-h/g2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuLMrGSVbPI/AAAAAAAAAMY/gXtVBd8qnNE/s320/g2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396100344337231090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மௌனத்தின் லட்சம் புழுக்கள்&lt;br /&gt;என் மூளையில் பாறையாய் இறுக்கி&lt;br /&gt;ஞாபகத்தை அழிக்கிறது&lt;br /&gt;பிரிதொரு கணத்தில்&lt;br /&gt;புழுக்கள் இடையறாது ஊறி&lt;br /&gt;அதில் பல லட்சம் நினைவுகள்&lt;br /&gt;தொடர்பின்றி தோன்றி&lt;br /&gt;மூளையை சிதறடித்து&lt;br /&gt;கண் காது மூக்கு வழியே&lt;br /&gt;வேகத்துடன் வெளியேறும் போது&lt;br /&gt;நினைவில் உயிர் பிரிவதை உணரமுடிகிறது&lt;br /&gt;ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்&lt;br /&gt;பகிர்ந்துகொள்வதற்கு &lt;br /&gt;அழுகிய முத்தங்களே உள்ளன&lt;br /&gt;என்பதை அறிவேன்&lt;br /&gt;இருந்தும் பிரிவின் வலியை&lt;br /&gt;பாதத்தின் நடுநரம்பு &lt;br /&gt;சுண்டியிழுத்து உணர்த்துவதை &lt;br /&gt;விரும்பவே செய்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4464456853437279669?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4464456853437279669/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4464456853437279669&amp;isPopup=true' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4464456853437279669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4464456853437279669'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_24.html' title='நினைவுப்  புழுக்கள்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuLMrGSVbPI/AAAAAAAAAMY/gXtVBd8qnNE/s72-c/g2.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5138260352296475011</id><published>2009-10-23T03:30:00.000-07:00</published><updated>2009-10-23T09:28:43.284-07:00</updated><title type='text'>கருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuGGQEwiLZI/AAAAAAAAAMQ/MYckwZTJ8Cc/s1600-h/blog+board.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuGGQEwiLZI/AAAAAAAAAMQ/MYckwZTJ8Cc/s320/blog+board.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395741439279902098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தங்களை விட உட்கார்ந்த இடத்தில் பலவிதமான செய்திகளை படைப்புகளை வலைப்பூக்களில் படிப்பது மிக எளிமையாக போய்விட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே புதிய படைப்பாளிகளை ஏற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுகிறது. இதனால் நல்ல படைப்பாளிகள் வெளியே தெரிவதற்கு கொஞ்ச நாளாகலாம்.ஆனால் இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு இல்லை. வலைப்பூக்கள் பிரபலமாகிவிட்டதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளராக ஆகலாம். புத்தகங்கள் படிப்பதற்கு நிகராக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வலைப்பூக்களில் பிரமிக்கும் வகையில் படைப்புகளை காணமுடிகிறது. அரசியல்  அதன் எதிர்வினைகள் என்று மிக தைரியமாக எல்லா விசயங்களையும் எவ்வித சமரசம் இன்றி அலசி ஆராயிறார்கள்(அவை சண்டைகளாக இருந்தாலும்). கருத்துச் சுதந்திரத்தின் பெட்டகமாக இருக்கிறது வலைப்பூ.பல்வேறுவிதமான எதிர்க்கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் உலக அளவில் தங்களுடைய அரசியல் மற்றும் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கொடுமையான நிலையை எடுத்துச் சொல்ல வலைப்பூ மிகச் சிறந்த ஊடமாக விளங்குகிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாக அவர்கள் வலைப்பூக்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த சமூக விஞ்ஞான வளர்ச்சி. புதிதாக நேற்று தொடங்கிய வலைப்பூ ‘குப்பைத் தொட்டி’ http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html  &lt;br /&gt;முதல் எனக்குப் பிடித்த வலைப்பூக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html&lt;br /&gt;http://kuzhali.blogspot.com/2009/03/blog-post_21.html&lt;br /&gt;http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html  &lt;br /&gt;http://umashakthi.blogspot.com/&lt;br /&gt;http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;rubrique=01&amp;article=482&lt;br /&gt;http://www.makalneya.blogspot.com/&lt;br /&gt;http://www.adhiran.blogspot.com/&lt;br /&gt;http://poetry-tuesday.blogspot.com/&lt;br /&gt;http://chaithiraboomi.blogspot.com/2009/10/blog-post_21.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-5138260352296475011?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/5138260352296475011/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=5138260352296475011&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5138260352296475011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/5138260352296475011'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_23.html' title='கருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SuGGQEwiLZI/AAAAAAAAAMQ/MYckwZTJ8Cc/s72-c/blog+board.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4012850868980253967</id><published>2009-10-19T18:56:00.000-07:00</published><updated>2009-10-19T19:10:33.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கொலைகள் பெருகும் அன்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/St0ahYl6QnI/AAAAAAAAAMI/rMGvhZVOdkA/s1600-h/girl.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/St0ahYl6QnI/AAAAAAAAAMI/rMGvhZVOdkA/s320/girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394497089499185778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சத்தில் பெருகும் பூச்சிகளாய்&lt;br /&gt;துரோகம் என்மீது&lt;br /&gt;இடைவெளியற்று அப்புகிறது&lt;br /&gt;விலக விலக&lt;br /&gt;ஆழிநீரைப்போல் உயர்ந்தெழுந்து துரத்தி &lt;br /&gt;முழுமையாக மூழ்கடிக்கிறது&lt;br /&gt;நானே துரோகத்தின் குரலாய் மாறும்போது&lt;br /&gt;கண்கூசும் ஒளியாய்&lt;br /&gt;அன்பை அணுஅணுவாக உதிர்க்கிறது &lt;br /&gt;மிதக்கும் ஒளியை கையில் பிடித்தால்&lt;br /&gt;பின் நிதானமாக &lt;br /&gt;குரல்வளை அறுத்து&lt;br /&gt;நிகழ்த்தப்படுகிறது ஒரு கொலை.&lt;br /&gt;&lt;br /&gt;          2&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கும் மாற்று இல்லை நான்&lt;br /&gt;எதற்கும் மாற்று இல்லை நீ&lt;br /&gt;இருந்தும் ஒன்றின்&lt;br /&gt;வேறொன்றாய்த்தான் இருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4012850868980253967?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4012850868980253967/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4012850868980253967&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4012850868980253967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4012850868980253967'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_19.html' title='கொலைகள் பெருகும் அன்பு'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/St0ahYl6QnI/AAAAAAAAAMI/rMGvhZVOdkA/s72-c/girl.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2609618727863862608</id><published>2009-10-16T00:21:00.000-07:00</published><updated>2009-10-16T00:26:23.468-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பெருத்த துரோகம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StggCh2k4vI/AAAAAAAAAMA/Y30gLLjA2Vo/s1600-h/daath.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 135px;" src="http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StggCh2k4vI/AAAAAAAAAMA/Y30gLLjA2Vo/s320/daath.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393095781595276018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்புடன் என்னை முத்தங்களால் ஆரத்தழுவி&lt;br /&gt;நான் அருமையான துரோகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்&lt;br /&gt;எப்போதும் போதையேற்றிக் கொண்டிருக்கும்&lt;br /&gt;அவன் துரோகத்தின் மீது ஒரு குஷ்டரோகியின்&lt;br /&gt;ஆழ்ந்த  கனிவை ஆழப்பதிந்தேன்&lt;br /&gt;எச்சிலை கவனமாய் துடைத்தவனின் கண்களைக்  கவனித்தேன். &lt;br /&gt;நிழலைப்  போல படர்ந்திருந்த துரோகத்தை &lt;br /&gt;வழியும் உதிரமாகக் காட்சிபடுத்தினான்.&lt;br /&gt;அவன் உண்மையின் குரூரத்தின் மீது&lt;br /&gt;என் பொய்யின் அறுவெறுப்பு&lt;br /&gt;பெரும் அச்சக் குரலாக மாறி&lt;br /&gt;துரோகத்தை இறுக்கப் பற்றியது &lt;br /&gt;உண்மையின் அன்பையும்&lt;br /&gt;பொய்யின் வன்மத்தையும்&lt;br /&gt;பெருத்த துரோகமாக்கி&lt;br /&gt;ஒரு குடுவையில் ஏந்தி &lt;br /&gt;இருவரும் பருகினோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-2609618727863862608?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/2609618727863862608/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=2609618727863862608&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2609618727863862608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/2609618727863862608'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_16.html' title='பெருத்த துரோகம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StggCh2k4vI/AAAAAAAAAMA/Y30gLLjA2Vo/s72-c/daath.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-6613192791121039058</id><published>2009-10-14T18:13:00.000-07:00</published><updated>2009-10-14T18:16:24.596-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அன்பின்  மரணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StZ3wpnV5yI/AAAAAAAAAL4/u2Sif6eNQWM/s1600-h/death-penalty.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StZ3wpnV5yI/AAAAAAAAAL4/u2Sif6eNQWM/s320/death-penalty.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5392629281511040802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்பாவின் சுருக்கமற்ற&lt;br /&gt;முதுகுத் தசையின் அணுக்களில்&lt;br /&gt;மரணம் தன் அன்பின் முத்தங்களை &lt;br /&gt;மெதுவாக பாய்ச்சியிருக்கிறது&lt;br /&gt;கடுமையானதும் ஒருபோதும் &lt;br /&gt;ஏற்றுக்கொள்ளமுடியாத&lt;br /&gt;அம்முத்தங்களை என் மென்விரல்களால்&lt;br /&gt;அழுந்தத் துடைக்கிறேன்&lt;br /&gt;மரணத்தின் வாசனை என்னை&lt;br /&gt;மூர்ச்சையாக்கி தூரத்தள்ளி சங்கிலியிடுகிறது&lt;br /&gt;அது வீரியம் கொண்டு&lt;br /&gt;உயிரின் தசைநார்களை கிழித்துபடி&lt;br /&gt;மிகப்பலம் கொண்ட எதிரியைத் தாக்குவது&lt;br /&gt;போல் வாள்வீச்சுடன் காற்றை கிழித்தபடி &lt;br /&gt;அப்பாவின் முன் அதிர்ந்து நிற்கிறது&lt;br /&gt;பின் மண்டியிட்டு&lt;br /&gt;உயிரைக் கொடுத்துவிடு &lt;br /&gt;என்று பிச்சை கேட்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-6613192791121039058?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/6613192791121039058/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=6613192791121039058&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6613192791121039058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6613192791121039058'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_14.html' title='அன்பின்  மரணம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/StZ3wpnV5yI/AAAAAAAAAL4/u2Sif6eNQWM/s72-c/death-penalty.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8265385517887378807</id><published>2009-10-03T21:07:00.001-07:00</published><updated>2009-10-05T23:43:18.493-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>ஷோபா என்றொரு தேவதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsghBXXbS5I/AAAAAAAAALw/G9Qjobmo8qc/s1600-h/a13sd.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 247px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsghBXXbS5I/AAAAAAAAALw/G9Qjobmo8qc/s320/a13sd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388593261484657554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsggQ7ZJhbI/AAAAAAAAALo/TOS1jqOcZ0c/s1600-h/sho.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsggQ7ZJhbI/AAAAAAAAALo/TOS1jqOcZ0c/s320/sho.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388592429341967794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஊசி முனையில் கருந்தட்டுகள் சுழல,காற்றின் தேகமெங்கும் இசை பதிந்த காலமது.நம் விருப்பங்கள் தாண்டி,நம் அனுமதியற்று,நமக்குள் வந்தமரும் கலை.. இசை. என்னுள்ளும் இசை இப்படித்தான் வந்து சிம்மாசனமிட்டது. எங்கள் ஊர் ஒரு மலை கிராமம். மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலை அரண் அமைத்து இருக்கும் கூடலூர். அந்த ஊரில் இசையற்ற பொழுதுகளோ, காலங்களோ இல்லை.அது விசேசங்களின் ஊர்.. சடங்கு,  காது குத்து, மொட்டை, மொய்விருந்து, மார்க் கல்யாணம், கிடா வெட்டு,..இப்படி ஏதாவது ஒரு விசேசம் நடந்துகிட்டே இருக்கும்.. எங்க வீட்டிலேயே இரண்டு வருசத்திற்கு ஒரு முறை விசேசம் நடக்கும். அந்த நேரங்களில் கரும் இசைத்தட்டுகள் சுழலுவதை பக்கத்திலிருந்து அதிசய பொருளைப் போல பார்ப்பேன். மைக் செட் போடுபவர் எனக்கு இசைக் கலைஞனாகத் தெரிவார். இவர் எப்படி இதில் பாட்டை வரவைக்கிறார் என்று வியப்பில் ‘எப்படிண்ணே இதுல பாட்டு வருது’ என்று கேட்பேன். ‘இந்த தட்டுல ஊசியை வச்சா பாட்டு வரும் அதை எடுத்துட்டுடா பாட்டு நின்னுடும்’ என்று ‘இங்கேயெல்லாம் வரக்கூடாது செட் கெட்டுப்போகும் ஓடிப்போ’ என்பார்.        &lt;br /&gt; &lt;br /&gt;ஊரில் திரும்பும் திசைகளெங்கும் கூம்புக் குழாய்கள்(loud speakers) ஏதோ ஒரு பாட்டை இசைத்துக் கொண்டிருக்கும். சிலசமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் பாடல்கள் ஒலிபரபப்பாவதும் உண்டு. ' தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா' என ஒன்று கேள்வி கேட்கும்,மற்றொன்று ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என பதில் சொல்லும்.இப்படித்தான் என் பால்யங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டது. என்னைத்  துயில் கொள்ளச் செய்வதும் ,என்னைத்  துயில் எழுப்புவதும் ஏதோ ஒரு பாடலாய் இருக்கும். வெறும் பாடல்கள் என்ற நிலையிலிருந்து பாடல்கள் என்னை பித்துக்கொள்ளச் செய்தன. இளையராஜாவின் இன்னிசை பாடல்கள் என்று மைக் செட்காரர்கள் அறிமுகம் செய்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். பின் அந்தப் பெயர் மந்திரச் சொல் ஆனது. அது என் பாவாடை சட்டை காலம்.&lt;br /&gt; &lt;br /&gt;சூரியன் மறையும் நேரம் அநேகமாய் எங்களூர் வானம் செந்நிறமாய் இருக்கும்.செவ்வானம் பார்த்தபடியே பாடல்கள் கேட்பது ஒரு சுகம். அப்படி பாடல்கள் கேட்கும் நேரத்தில் நானே செந்நிறமாக மாறி வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை இளையராஜாவின் பாடல்கள் ஏற்படுத்தின. அந்த காலக்கட்டங்களில் நான் என்னையே ஒரு கரும் இசைத்தட்டாகத்தான் உணர்ந்தேன். விழித்திருக்கும் கணங்களிலெல்லாம் என் உதடுகள் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்கும் அல்லது என் மனதிற்குள் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.என் உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் திரையிசைப் பாடல்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. அது என் படிப்பினை பாதிக்கவில்லை. இசை மனது எல்லா நல்ல விசயங்களையும் அழகாக உள்வாங்கியது. வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குள் வாங்கினேன்.   &lt;br /&gt; &lt;br /&gt;பாடல்கள் என் ஆடை&lt;br /&gt; &lt;br /&gt;பாடல்கள் என் அணிகலன்&lt;br /&gt; &lt;br /&gt;பாடல்கள் என் உலகம்&lt;br /&gt; &lt;br /&gt;என வாழ்ந்த காலம் அது.&lt;br /&gt;எல்லா பாடல்களும் ஒரு சிறகு முளைத்த பறவைபோல வானத்தில் மிதந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்.பறக்கும் பறவைகளைப் பார்த்தபடியே பாடல்கள் கேட்டிருக்கிறீங்களா? சிறகசைக்காமல் தாளப் பறக்கும் பறவை 'பருவமே புதிய பாடல் பாடு’ என்று பாடியபடிப் பறப்பதாகத் தோன்றும். என் கற்பிதங்களும், என்னைச் சுற்றி இருந்த இயற்கையும் எல்லா பாடல்களுக்கும் ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியெங்கும் பாடல்கள் ஒரு வழித்துணையாக வரும்.என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். நினைத்தபோது மழை வரும் இயற்கைச் சூழல் உள்ள ஊர்(இப்போது வானிலை எல்லாம் மாறிப்போய்விட்டது). அதற்கு கால நேரமெல்லாம் கிடையாது பள்ளிக்குச் சென்று திரும்பும் பலசமயங்களில் எதிர்பாராமல் ஒரு திடீர் மழையைச் சந்திப்போம். அப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். குடைகளற்ற அந்த பொழுதுகளில் மழையில் நனைந்தபடியே பாட்டு கேட்டுக் கொண்டே வருவேன்.&lt;br /&gt; &lt;br /&gt;மழையில் நனைந்தபடி கேட்கும் பாடல்கள் இனிமையுடன், அந்த மழையோடு என்னைக் கரைத்துவிடுவதாக இருக்கும். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையின் பூங்கோதையின் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலை முதல் முறையாக கேட்டபோது மழையில் நனைந்தபடிதான் கேட்டேன். அது பள்ளியிலிருந்து திரும்பும் ஒரு மாலைப் பொழுது. அன்று கருஞ் சாம்பல் வண்ணத்தில் இருந்தது வானம். உதடுகளில் மழை வழிய நானும் அந்தப் பாடலை பாடியபடி வீடு வந்து சேர்ந்த ஞாபகத்தை, இன்றும் எல்லா மழைப் பொழுதுகளும் கிளர்த்துகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;நான் என் சக வயது தோழிகள் போல் இல்லை என்பதில் என் குடும்பம் அநேக கவலை கொண்டிருந்தது. ஆனால் என் படிப்பு சிறப்பாக இருந்ததால் அவர்களால் என்னை தண்டிக்க முடியவில்லை. இது இல்லாமல் அப்பா ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தார். அதிலிருந்து அது என் உடமையாகி விட்டது. அப்பா செய்தி கேட்பதோடு சரி. நான் வீட்டிலிருக்கும் மற்ற நேரங்களில் அது என்னுடனே இருக்கும். அதில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும் நேரங்களை கணக்கிட்டு அப்போது வெளியே செல்லாமல் பாட்டு கேட்பேன். எல்லா இரவுகளிலும் என் தலைமாட்டிலேயே ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லது என்னோடு தூங்கிக் கொண்டிருக்கும். அப்பா காலையில் எடுத்து செய்தியை போடுவார். அவர் மட்டும் நான் பாடல் கேட்பதை தடுத்ததே இல்லை. அம்மா,அக்கா, அண்ணன் எல்லோரும் என்னை பாட்டு  பைத்தியம் என்பார்கள். நான் வேலை செய்யாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் நாள்களில் ‘ஒரு நாளைக்காவது இந்த ரேடியாவை போட்டு உடைக்கப் போறேன் என்று அம்மா கத்தும்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்பாவோட புளியமரக் காட்டுக்குப் போகும்போது ‘வேலை முடியறவரைக்கும் இந்த ‘ஊஞ்சல்ல ஆடிகிட்டிரு’ என்று ஒரு கயிற்றில் ஊஞ்சல் கட்டிக் குடுப்பார். எங்க காடு மலைக்குப் பக்கத்தில் இருந்தது. மலைக்கு நடுவில ஊஞ்சல் கட்டி ஏகாந்தமா பாடற சந்தோசத்துக்காகவே நான் அப்பாகூட காட்டுக்குப் போவேன். மலைவாசத்தோடும் பயிர் வாசத்தோடும் பாடல்களை பாடுவது அல்லது பாடல்களில் நினைவுகளில் மூழ்குவது உலகில் இணையற்ற சந்தோசத்தை தந்தது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;எல்லோரும் விளையாட்டும் சிரிப்புமாக இருந்த பல நேரங்களில் எங்கேயோ தூரத்தில் சன்னமாக ஒலிக்கும் பாடலைக் கூட உட்கார்ந்து கவனமாகக் கேட்பேன். நான் எப்போதும் மாய உலகத்தில் மிதப்பதாக தோழிகள் பேசிக்கொண்டார்கள்.   &lt;br /&gt; &lt;br /&gt;இசை ஒரு அன்பான கலை என்பதை நான் தொடர்ச்சியாக பாடல்கள் கேட்பதன் மூலம் உணர்ந்திருந்தேன். இசை என்னுள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது. நான் எதையோ தேடிக் கொண்டே இருந்தேன். கோடை வெயில் ,குளிர் இரவின் தனிமை ,பனியின் கூதல்,மழைவாசம்,எங்கள் ஊரின் இயற்கை..எனக்குள் வேறெதையோ உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. முட்டையைத் தகர்த்து வெளியே வரத்தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் தவிப்பைப் போலிருந்தது. &lt;br /&gt;                     &lt;br /&gt; &lt;br /&gt;ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துத் தான் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வரும் காலகட்டம் அது. அந்தப் படங்கள்  வருவதற்கு முன்பே பாடல்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கும். திரையரங்கில் பாடல் காட்சிகள் வரும் போது அந்தப் பாடல்களைச் சத்தமாக பாடுவதற்காகவே நான் திரைப்படம் பார்க்கச் செல்வேன். ஒரு திரைப்படத்தையே பல முறை பார்த்திருக்கிறேன். எனக்குள்ள சினிமா மோகம் ஏற்பட்டதற்கு காரணமே பாட்டு மேல இருந்த பைத்தியம்தான்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;மழையில் இருளில் அதிகாலையில் செந்நிற மாலையில் நான் கேட்ட பாடலெல்லாம் திரையில எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்க்காகவே நான் சினிமாவுக்குப் போவேன்.ஒரு படத்தையும் விடறதில்ல.டப்பிங் படம்  ஓடாத படம் எல்லாத்தையும் பாத்துடுவேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்பத்தான் பாட்டு மேல் இருந்த அதிகப்படியான உணர்ச்சி சினிமா மோகமாக மாறியது. பத்து பைசா குடுத்து பிலிம் வாங்கி வீட்ல அப்பா வேட்டியில சினிமா போட்டுக் காட்டியிருக்கிறேன். என்னைப் போல பொண்ணுங்க யாரும் பிலிம் வாங்க மாட்டாங்க. வளையல் பாசி என்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்து சரியான ‘கிறுக்கச்சி’ என்பார்கள். நான் படம் காட்டும் விளையாட்டில் ஆண்பிள்ளைகள்தான் ஆர்வம் காட்டுவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;நிறையப் படம் பாத்து படம் பாத்து நல்ல படம் கெட்ட படம் எது என்று பிரிச்சுப் பார்க்கும் ரசனை வந்தது. அப்பவும் எல்லாம் மசாலாப் படங்களையும் பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளானேன். வீட்டில் மற்றவர்கள் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். அப்போது சினிமா தவிர வேறு பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பாலச்சந்தர் ,பாரதிராஜா ,மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்களில் கதாநாயகிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லது தன்மேல் திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்பவர்களாக இருந்த கதாநாயகிள், உண்மையில் என் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பின் நடிகர் நடிகைகளில் நடிப்பில் என் கவனம் சென்றது. &lt;br /&gt; &lt;br /&gt;அப்போது  எனக்குள் வந்த தேவதைதான் ஷோபா. ஒரு தீவிர மோகத்தோடு நான் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும் எந்த நடிகர், நடிகையருக்கும் ரசிகையாக இருந்ததில்லை. ஆனால் ஷோபாவை என்னாலே எனக்குள்ள இருந்து பிரிக்க  முடியவில்லை. ‘என்னை பாரு என்னை ரசி என்னை நினைச்சுகிட்டே இரு வேற எதுவும் செய்யாதே’ என்று சொன்ன மாதிரி இருந்தது. அத்தனை எளிமையான கதாநாயகியை அதற்கு முன் நான் திரையில் பார்த்ததில்லை. பக்கத்து வீட்டு காலேஜ் படிச்ச அக்கா மாதிரி, இயல்பான வாழ்வில் வரும் அன்பான தங்கை மாதிரி, நான் மாற நினைக்கும் ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தார். அதுவரைக்கும் எந்த நடிகையாகவும் என்னை கற்பனை பண்ணிப் பார்க்காத நான் திரையில் வரும் ஷோபாவின் கதாபாத்திரத்தைப் போல் இயல்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கு ஒரு அன்பான காரணம் இருந்தது. ஷோபா தனக்கு கிடைச்ச எல்லா கதாபாத்திரங்களையும்  ஒரு நுட்பமான அன்பின் வெளிப்பாட்டை கொண்டு நடித்திருந்தார். இயற்கையையும் அன்பையும் நேசிக்கின்ற ஒரு மனுசிதான் இத்தனை நுட்பமான அன்பை வெளிப்படுத்த முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஷோபாவும் என்னைப்போல் இசையும், மழையும் விருப்பமுடைய பெண்ணாக இருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பப்பட்ட பாடல்களைச் சத்தமாக பாடுபவராக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கள்ளமில்லாத அந்த சிரிப்புக்குள்ள ஒரு தேடல் தெரிந்தது. மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் தன்னைத் திளைத்துக் கொண்டு அதில் கரைந்து போகும் மனம் இருந்தது.  ஆனால் அவர் விருப்பங்கள் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஷோபா இப்படித்தான் இருந்தார். அந்த முகத்தில் வழிகின்ற சந்தோசத்தை, சிரிப்பை, குழந்தைத்தனத்தை,தேடலை எனக்குள்ளேயும் கொண்டு வர விரும்பினேன்.&lt;br /&gt;வள்ளியா ,இந்துவா நடிச்ச ஷோபாவுக்குள்ள நான் எங்கே இருக்கிறேன் என்று தேடினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அழியாதகோலங்கள், முள்ளும் மலரும், மூடுபனி, பசி ..இந்தப் படங்களெல்லாம் எனக்கும் ஷோபாவுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தின படங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அழியாத கோலங்கள் படத்தில் வருகின்ற இந்து டீச்சர் படத்தில் வருகின்ற  எல்லா கதாபாத்திரங்களின் மேலும் சந்தேகமற்ற அன்பை செலுத்தும் பெண்ணாக இருப்பார். கடைசியில் அந்த ஆத்ம அன்பு அந்த கதாபாத்திரங்களை வாழ்நாளில் கடைசி வரைக்கும் கரைய வைக்கும். அந்தப் படம்தான் அவங்களை எனக்குத் தேவதையா காட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் தேவதைகள் அழகானவர்கள் இல்லை. அன்பானவர்கள் .அன்பும் குழந்தைத்தனமும்தான் ஒரு பெண்ணை அழகாக்கும். &lt;br /&gt; &lt;br /&gt;சின்னச்சின்ன பாவனைகள்ல அவங்க காட்டற அக்கறை.ஒரு பாவத்திலயிருந்து இன்னொரு பாவத்துக்கு மாறி இரண்டையும் இயல்பான நடிப்பாக மாற்றி பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்த நடிகை ஷோபாவாகத்தான் இருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்படியொரு காட்சி முள்ளும் மலரும் படத்தில் வரும். மருத்துவமனையிலிருந்து திரும்பி வருகின்ற அண்ணனை(ரஜினி) வீட்டுக்கு தூரத்தில் வரவேற்க ஓடுவார். அண்ணனை பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் கட்டிக் கொள்வார். மெது மெதுவாக காற்றில் அண்ணனின் கை இல்லாத சட்டையை தொட்டும் உணரும் போது அந்த மகிழ்ச்சி கொஞ்ச கொஞ்சமாக இறங்கி தாங்க முடியாத துக்கத்தில் விம்மி அழுவார்.    &lt;br /&gt; &lt;br /&gt;அதே திரைப்படத்தில் கடைசி காட்சியில் தான் விரும்பும் ஆண், ஒரு வளமான வாழ்க்கை, தனக்காக வரும் ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும், அண்ணன் கூப்பிட்டதும் உதறித்தள்ளிவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து உன்னைத் தவிர &lt;br /&gt;வேறு எதுவும் வேண்டாமென்று சொல்லி அழும் காட்சியைப் பார்த்தால் இன்றும் என் கண்கள் ஈரமாகிவிடும். &lt;br /&gt; &lt;br /&gt;மூடுபனி படத்தில் ஷோபா ஒரு சினிமா தியேட்டருக்கு போகும் காட்சி. அக்காட்சியில்  இடைவேளையில் திரையரங்கிற்கு வெளியே வருவார். அப்போது யார் என்று தெரியாத ஹீரோவிடம் விரிந்திருக்கும் கூந்தலை மிக இயல்பாக கொண்டை போட்டபடி மணி என்ன என்று கேட்டுவிட்டு ஒரு திண்டில் உட்காருவார். ஹீரோவைப் போல் இப்படியொரு இயல்பான பெண்ணா என்று நாமும் திண்டாடிப் போவோம். இப்படி அவர் நடித்த படத்தை மிக நுட்பமாக பார்க்கும்படி அவர் என்னை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.  &lt;br /&gt; &lt;br /&gt;இன்று சினிமாதான் தொழில் ,சினிமாதான் வாழ்க்கை என்றானபின்  உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த பிறகும் ஷோபா எனக்குள் ஏற்படுத்திய பிம்பம் உடையவே இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு தேவதைப் பெண் திடீரென்று விளிம்புநிலை கதாபாத்திரத்தில் நடித்தால், உடனே நாம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையயோடு ஏற்பது சிரமம். ஒரு பிரியாணிக்காக தன்னை இழப்பது தெரியாமல் இழக்கும் இரு வெகுளிப்பெண்ணாக, பசித்தலையும் குப்பத்து பெண்ணாக அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பார்.  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போன்று அவருடைய திரைப்படங்களை திரும்பப் பார்க்கிறேன். அதே நடித்த படங்களின் பாடல் காட்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். இன்று என்னைப் பற்றி, இசை பற்றி, சினிமா பற்றி, ஷோபா பற்றி  எழுத முக்கிய காரணம் அவர் நடித்த ‘பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்’ பாடல் என் பழைய ஞாபங்கங்களை கிளப்பிவிட்டது.  இந்தப் பாடல் முழுதும் அன்பால் நிறைந்து இருக்கும். இசையில், குரலில், பாடல் வரிகளில்,ஷோபா நடிப்பில் அன்பு தளும்பி வழியும். அந்தப் பாடலைக் திரும்ப கேட்க கேட்க ஷோபா என் மனதில் ஆழமான அழகான படிமமாக படிந்து போயிருப்பது தெரிந்தது. அவர் நடித்த நான்கு பாடல் காட்சிகளை என் வாழ்க்கையிலிருந்து&lt;br /&gt;பிரிக்க முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் காட்ட வேண்டிய பாவனைகள் அனைத்தையும் ஒரு பாடல் காட்சிக்குள்ளயே செய்து காட்டிடுவார்.&lt;br /&gt; &lt;br /&gt;‘பூவண்ணம் வண்ணம்’ பாடல் காட்சியில் காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமாக கட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உயர்ந்த  அன்பை, காதலை, ரொமான்ஸை தன்னோட முக பாவனைகளில் ,உடல் மொழியில் கொண்டு வந்திருப்பார்.   &lt;br /&gt; &lt;br /&gt;‘அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும்  தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;தன்னை கடத்திட்டு வந்தவன் தன் மேல் இருக்கும் அதீத காதலை பாடலாகப் பாடுகிறான்.’என் இனிய பொன் நிலாவே’ ..அந்தப் பாடலை சூழ்நிலை இறுக்கம் ,மனத்தவிப்பு இதையெல்லாம் மீறி அந்த நிமிசத்துக்கான நேர்மையோடு ரசனையோடும் அந்த பெண் பாடலைக் கேட்கிறாள்.இதுதான் அந்தக் காட்சி. அதில் குழந்தைத்தனமான முகபாவத்தோடும் ரசனையோடும் குறுகுறுப்பான அழகில் மின்னுவார். &lt;br /&gt; &lt;br /&gt;ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த எல்லாவற்றையும் நான் ஒரு ஏக்கத்தோடு எப்பவுமே நினைச்சுப் பார்ப்பேன்..ஏனெனில் இப்போது அந்த தேவதை உயிருடன்  இல்லை. மிக அதீதமான அன்புதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆமாம் அவர் ஒரு அன்பின் உருவமாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனாலும் அவர் புன்னகைக்குள் ஒரு மென்சோகம் இழையோடி இருக்கும். ஷோபாவின் புன்னகை ஒரு மோனலிசா புன்னகை. அவர் அன்பை மட்டுமே நேசித்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக  கிடைக்காத போதுதான் அவர் இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க வேண்டும். ஷோபாவின் மரணத்தை நான் ஒரு தோற்றுப் போன அன்பாகத்தான் பார்க்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த மாதம் உயிரெழுத்து இதழில் வெளியான எனது கட்டுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-8265385517887378807?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/8265385517887378807/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=8265385517887378807&amp;isPopup=true' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8265385517887378807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/8265385517887378807'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_9434.html' title='ஷோபா என்றொரு தேவதை'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsghBXXbS5I/AAAAAAAAALw/G9Qjobmo8qc/s72-c/a13sd.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-4972673756975172832</id><published>2009-10-01T21:37:00.000-07:00</published><updated>2009-10-01T21:49:59.302-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>குருதி முத்தம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsWGQQhLCuI/AAAAAAAAALA/vmu3ZvGiROU/s1600-h/FridaKahloRoots.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsWGQQhLCuI/AAAAAAAAALA/vmu3ZvGiROU/s320/FridaKahloRoots.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5387860143088798434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;வலிதரும் காயங்களிலிருந்து&lt;br /&gt;பிறந்தவை உனக்கான அன்பு &lt;br /&gt;காயங்களைக் குறுக்குவெட்டு&lt;br /&gt;தோற்றத்தில் பிளந்து  &lt;br /&gt;உன்னை ஒரு அணுவும் &lt;br /&gt;வெளியேறதவாறு இறுக்கி அணைக்கிறேன் &lt;br /&gt;துவளும் மயிலிறகால் இனி நீ என் காயங்களைப் பிளந்தால் &lt;br /&gt;மணக்கும் நிணத்துடன் நீதான் வடிவாய் &lt;br /&gt;அன்பே.&lt;br /&gt;எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தாலான பழக்குடுவையை ஏந்தி &lt;br /&gt;சத்தமின்றி மென் புன்னகையுடன் ரசித்துப் பருகுகிறாய்&lt;br /&gt;தவறி விழுந்து சிதறிய துளியை&lt;br /&gt;புன்னகையால் இட்டு நிரப்பும் வித்தையை &lt;br /&gt;உன் களவில் ஒளித்துவைக்கிறாய். &lt;br /&gt;என் கையில் இருப்பதோ &lt;br /&gt;இதயத்திலிருந்து உருஞ்சி எடுக்கப்பட்ட &lt;br /&gt;குருதி நிரம்பிய முத்தக் குடுவை &lt;br /&gt;அதை உனக்கு ருசிக்கக் கொடுப்பதா &lt;br /&gt;இல்லை &lt;br /&gt;பிடிநழுவ விடுவதா  &lt;br /&gt;உன் பழரசமும் &lt;br /&gt;என் குருதி முத்தமும் ஒன்றல்ல &lt;br /&gt;அன்பே &lt;br /&gt;இரண்டும் ஒரே உதட்டில் உறிஞ்சப்படுகிறது&lt;br /&gt;அவ்வளவே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-4972673756975172832?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/4972673756975172832/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=4972673756975172832&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4972673756975172832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/4972673756975172832'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post.html' title='குருதி முத்தம்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsWGQQhLCuI/AAAAAAAAALA/vmu3ZvGiROU/s72-c/FridaKahloRoots.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-6109872871397924154</id><published>2009-09-28T20:17:00.000-07:00</published><updated>2009-09-28T20:23:17.882-07:00</updated><title type='text'>பெருங்காதல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsF9kDySccI/AAAAAAAAAK4/J2_4pgQVy9o/s1600-h/Picture+182.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsF9kDySccI/AAAAAAAAAK4/J2_4pgQVy9o/s320/Picture+182.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386724687756816834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பழுத்த மஞ்சள் சருகுகளின் மூர்க்கமும்&lt;br /&gt;நீர் விலகாத பச்சை இலைகளின் குளுமையும்&lt;br /&gt;சாயம் இழக்காத காட்டுப் பூக்களின் வாசனையும் நிறைந்து&lt;br /&gt;புதிதாய் உன் நிலத்தில் தறிகெட்டு ஓடும் காட்டாறு அன்பே நான்&lt;br /&gt;என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி&lt;br /&gt;என் தனிமையை முற்றடையச் செய்யும்&lt;br /&gt;பெருங்காதலாய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4881109099659167408-6109872871397924154?l=katrilalayumsiraku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://katrilalayumsiraku.blogspot.com/feeds/6109872871397924154/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4881109099659167408&amp;postID=6109872871397924154&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6109872871397924154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4881109099659167408/posts/default/6109872871397924154'/><link rel='alternate' type='text/html' href='http://katrilalayumsiraku.blogspot.com/2009/09/blog-post_612.html' title='பெருங்காதல்'/><author><name>chandra</name><uri>http://www.blogger.com/profile/09272542374116367069</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_y7pNFdp5NzE/TCClmpp0qII/AAAAAAAAAUs/Z-1T2xo8nRM/S220/29221_1264533944572_1566456284_30535531_6785648_s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsF9kDySccI/AAAAAAAAAK4/J2_4pgQVy9o/s72-c/Picture+182.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5437718207028513687</id><published>2009-09-28T07:20:00.000-07:00</published><updated>2009-09-28T11:09:24.126-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>சூது நகரம்                                         -சிறுகதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsDKHtEOMRI/AAAAAAAAAKo/DsVknnVhTVA/s1600-h/olimpic+2008+china.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 318px;" src="http://3.bp.blogspot.com/_y7pNFdp5NzE/SsDKHtEOMRI/AAAAAAAAAKo/DsVknnVhTVA/s320/olimpic+2008+china.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386527388040311058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ பஸ்ஸில் ஏறியோ தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தான். தனக்கான ஒரு மனிதனைத் தேடிக் கண்டுபிடிப்பது  இல்லை யாரையேனும் தன்மீது கவனம் செலுத்த வைப்பது இதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப்பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக்குள் மிக மெதுவாக நுழைந்தான்... &lt;br /&gt;&lt;br /&gt;வேலை பார்த்து வந்த எந்த இடத்திலும் அவனை இதுவரை யாரும் மரியாதையாக நடத்தியதில்லை. பிச்சை போடுவதைப்போலதான் வேலை கொடுத்திருக்கிறார்கள். படித்த பி.ஏ வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் பணிகிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரமான வேலை துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை .&lt;br /&gt;&lt;br /&gt;துணிக்கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற கற்பனையிலேயே உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட்டும்தான் இருக்கிறது பார்க்கிறாயா என்று கேட்டார்கள். பசி அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். முதல்நாள் விற்பனை பிரிவில் சீருடையோடு போய் தயக்கதோடு நின்றான். அங்கிருந்தவர்கள் இவன் பெயரைக்கூட கேட்காமல் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கியா என்று கேள்வியோடு தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் யாரோடும் பேசி பழக்கம் இல்லாதவனாக இருந்தான். எவரிடமும் பேசாமல் வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் நாள்தானே வேலை பழகியதும் அவனும் தங்களைப்போல் ஆகிவிடுவான் என்று நினைத்தார்கள். அதற்கடுத்து தொடர்ந்த நாட்களிலும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப்பேசி  துணிகளை வாங்க வைக்க முடியவில்லை. ஒரு ஊமையைப்போல துணிகளை எடுத்துப் போடுவதும்  மடித்து வைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால் வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார். சரி சரி என்று தலையாட்டிவிட்டு அமைதியாகப் போவான்.  &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் மேன்ஷனில் உடன் தங்கும் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில் மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப்போல்  தானாகப் பேசிப்பார்த்தான். இளம்பெண்களிடம் 'இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்ட்டா இருக்கும்'  என்று இவன் சொல்ல அவர்களும் சிரித்துக்கொண்டே அந்த துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள் எப்படியும் இன்று கஸ்டமர்களிடம் பேசி துணிகளை வாங்க வைப்பது என்ற முடிவுடன் சென்றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனை பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின் அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாள்களில் இருப்பதைவிட அப்படித் திட்டமிட்ட நாள்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளை பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேசவேண்டும் என்று ஏன் கஸ்டமர்கள் நினைக்கிறார்கள்? பிடித்திருத்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே. எதற்காக பேசிச் சிரிக்க வேண்டும். எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவரமுடியாது என்று நினைத்த நிர்வாகம் எல்லா விற்பனை பிரிவுகளிலும்  மலைமாதிரி குவிந்து கிடக்கும் துணிகளை மடித்து வைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனை பிரிவிலிருந்து மாற்றிவிட்டார்கள்.  நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது.... &lt;br /&gt;&lt;br /&gt;உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. யாரும் தன்னிடம் நட்போடும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது அவனுக்கு பெரும் பாரமாக இருந்தது. இதுவரை முத்தத்தின் ஸ்பரிசத்தையும் அடையவில்லை என்று நினைக்கும்போது துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்து போனான். அந்த முதல் முத்தம்  ஒரு பிச்சைக்காரியிடமிருந்தோ இல்லை ஒரு பைத்தியகாரியிடமிருந்தோ கிடைத்தால் கூட பரவாயில்லை ஆனால் அது வெகுவிரைவில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பேசவிடாமல் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது எது என்றும் புரியவில்லை. எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும்  பேச்சுமாய் நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப்பட்டு கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால் படிக்காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்திருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாக பேச பழகிவிட்டால் வாழ்க்கை  சிரமம் இல்லாமல் கழியும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில் உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விசயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் எ
