tag:blogger.com,1999:blog-4881109099659167408.post7894283935826012090..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன.chandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-68594538624760176552009-07-08T07:32:18.646-07:002009-07-08T07:32:18.646-07:00இனவிடுதலைப் போராட்டத்தை அழித்து, நசுக்கி, ஒடுக்கிய...இனவிடுதலைப் போராட்டத்தை அழித்து, நசுக்கி, ஒடுக்கிய அராஜகத்திற்கு உலகின் வல்லாதிக்க நாடுகள் துவங்கி, போர்முனையில் பூத்த நாடுகளும் ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றன. <br /><br />வார்த்தைகளில் வடிக்க இயலாத துயரங்களைத் தாங்கிக்கொண்டு, தங்களின் உண்மையான ஒரே தலைவனை இழந்த தமிழினத்தின் நீண்ட கண்ணீரை, உங்களைப் போன்ற படைப்பாளுமையும், செழுமையும், உணர்வுமிக்க மண்ணின் மைந்தர்களின் வார்த்தைகள் வடிகாலாகவும், பெரிதான நம்பிக்கையை அளிப்பதாகவும் இருக்கிறது.<br /><br />மஜித்தின் கிணற்றுத்தவளைக் கவிதைத் தொகுப்புக்கு, உங்களுடைய தேர்ந்த பதில் மூலம் சிறப்பானதொரு சேவையைச் செய்திருக்கிறீர்கள்.<br /><br />விடுதலைப் போராட்டத்தின் வரலாறு தெரியாதவர்களால், விடுதலை உணர்வின் உள்ளார்த்தத்தை அறியாதவர்களால் உங்களுக்கு எதிரான அல்லது உங்களைப் போன்ற மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு எதிராக கருத்து என்ற பெயரில் குப்பைகளை மட்டுமே எறிய முடியும்.<br /><br />போர்க்களத்தில் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத வீரம் நிறைந்தது தமிழர்களின் வாழ்வு. உங்களுக்கும் எதிராக சில கருங்காலிகள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எதிரிகளல்ல. துரோகிகள். <br /><br />எனவே, விடுதலையை வென்றெடுக்கும் தமிழினத்தின் மீட்சியைப் பறைசாற்றும் வகையில் தீரமிக்க படைப்புகளை தொடர்ந்து யாத்து, கண்ணீரிலும், குருதியிலும் குளித்துக் கொண்டிருக்கும் ஈழச் சகோதர, சகோதரிகளுக்கு அன்பையும், ஆதரவையும் அளியுங்கள்.<br /><br />ஈழத்தில் என்றென்றும் உங்களுக்கோர் இடமுண்டு.புலி பாயும்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-16664766945299756192009-07-05T23:46:23.767-07:002009-07-05T23:46:23.767-07:00'புலி பதுங்கிய போது துரோகங்கள் நகரினுள் புகுந்...'புலி பதுங்கிய போது துரோகங்கள் நகரினுள் புகுந்தன' என்றதொரு கவிதைத் தொகுப்பை இனிவரும் நாட்களின் யாரேனும் எழுதக் கூடலாம். இதைத் தெளிவாகச் சொன்ன உங்களுக்கு நன்றி.<br /><br />முதலில் ஒரு தெளிவுக்கு நீங்கள் வந்திருக்க வேண்டும். இலங்கையில் இருப்பது இரண்டே இனம். ஒன்று சிங்களம். மற்றொன்று தமிழ். <br /><br />இஸ்லாமியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்லல்ல. அது மதத்தைக் குறிப்பது. மதத்திற்கும், இனத்திற்குமான தெளிவு உங்களுக்கு இருந்திருந்தால், மஜித்துக்கு மறுப்புச் சொல்லும் போது, முஸ்லிம் இனம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள்.<br /><br />இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். பிறக்கும்போது நான் இஸ்லாமியனாக இருக்கலாம் அல்லது வேறு மதத்திலிருந்து விலகி இஸ்லாமை நான் தழுவலாம். ஆனால், இனம் என்பது பிறப்பால், மொழியால் வருவது. இறந்த பின்னரும் கூட அதை மாற்ற முடியாது.<br /><br />இலங்கையில் நடந்தது, தமிழ் பேசும் ஒரே காரணத்துக்காக அநியாயங்களை, அக்கிரமங்களை தமிழர்கள் மீது திணித்தது தான். அதற்கு பதில் கொடுக்க எழுந்தவர்கள் புலிகள். <br /><br />தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டத்தில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, புத்த மதங்களைத் தழுவுபவர்கள் ஒன்றினைந்து செயல்படுகின்றனர். ஆனால், ஈழத்தில், தமிழர்களுடன் அல்லது புலிகளுடன் கைகோர்க்காமல் இஸ்லாமியர்கள் இருந்தார்கள் என்றால் அதன் பின்னணி என்ன? உலகின் எங்கெங்குமுள்ள மக்கள் இனத்திற்கும் - மதத்திற்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து வைத்திருக்கும் போது ஈழத்தில் மட்டும் வாய்க்கவில்லை என்றால் அது மிகப்பெரும் துயரம். எதிரிகளின் கொடுமையை விட, சகோதரர்களின் வஞ்சம் துன்பகரமானது.<br /><br />இனியாவது, புத்த, சவுராஸ்டிரிய, ஜென்னிச, பார்ஸிய, ஜைன, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதங்களையும் இன்னபிற மதங்களையும் மதங்களை கடுமையாக எதிர்ப்பவர்களும், கடவுளே கிடையாது என்று அறுதியிடுவோரும், எல்லாம் கடவுள் செயல் என்று இறைவனை நம்புவோரும் தமிழ் பேசுபவராக, தமிழராக இருக்கும் பட்சத்தில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.<br /><br /><br />உங்கள் கட்டுரையில் வார்த்தை ஜாலங்களுக்கு கொடுத்திருக்கிற முக்கியத்துவத்தை, கொஞ்சம் கருத்தை வலியுறுத்துவதற்கும் கொடுத்திருக்கலாம். <br /><br />""உலகில் எந்த விடுதலை போராட்டமும் குற்றமற்று நிகழ்ந்ததில்லை. யுத்த தந்திரங்களில் குற்றப் பெருக்கு தவிர்க்க இயலாது எனினும் நிலம் அறுத்து, வேர்பிடுங்கி விரட்டப்படுதல் யார் நிகத்தியிருந்தாலும் தவறு. இன விடுதலைக்கான போராட்டத்தில் எல்லாத் துரோகங்களும் அழிக்கப்படும். இது யுத்த ஒழுங்கு" என்ற உங்களுடைய வார்த்தைகள், போரில் அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது என்று முன்பொரு முறை ஜெயலலிதா கூறியதை ஞாபகப்படுத்துகிறது. <br /><br />நீங்கள் தமிழர்களுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, பிளவை அதிகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். அது ஆபத்தானது.<br /><br />மதம் - இன வேறுபாட்டை நீங்களும் புரிந்துகொண்டும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் புரிய வையுங்கள்.நெற்றிக்கண் திறப்பினும்noreply@blogger.com