வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஆலிலைதரித்தவள்



உன் அறைக்கு வெளியே உதிர்ந்த இலைகளைப்போல\
தூத்தித்தள்ளாதே
அப்புறப்படுத்த முடியா ஆலிலைகளாய் உன் உடலில் தரித்திருக்கிறேன்
மெலிந்த என்னுடலில் கிசுகிசுப்பாய் நினைவுகள் ஆர்ப்பரித்தபடிதானிருக்கும்
உப்புக்கரிக்கும் கடல்காற்றில் நிலாஇறங்கி என் ஆன்மாவின் நிசப்சத்தை
வாரியணைத்துக்கொள்ளும்போது அவைகள் அடங்கும்
சோப்புக்குமிழ்களாய் மகிழ்வை ஊதி உன்னை உடைக்கச் சொன்னவளின்
பழுப்புநிறக் கண்களில் தெரிந்த உலகம் உன்னுடையதுதான்
ஒரு இலையுதிர் காலத்தில் கால்கடுக்க
நீ இரைந்து கரைந்து பெற்ற காதலை
ஆர்ப்பரிக்கும் அற்பத்திற்கு தூரவீசிஎறிகிறாய்
நீர்க்குமுழி வெடிக்கும் நேரத்திற்கு குறைவான நேரமே ஆகும் உயிர்பிரிய
அப்போது ரகசியமாய் உன் முத்தத்தின் வாசனை உயிரை நிறைக்கும்

கருத்துகள் இல்லை: